அறிவியல் தொழில்நுட்பம்

இலங்கையில் ஏப்ரல் 5 முதல் 15 வரை நிகழவுள்ள அரிய நிகழ்வு

4 days ago

02 APR, 2025 | 11:13 AM

image

ஏப்ரல் 5 முதல் 15 வரை நிழல் சிறிது நேரம் மறையும் அரிய நிகழ்வு நிகழவுள்ளதாக  வானியலாளர் அனுர சி.பெரேரா தெரிவித்துள்ளார். 

வானியலாளர் அனுர சி.பெரேரா மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் சூரியன் நம் நாட்டின் மேல் அதன் உச்சத்தில் இருக்கும். இந்த உச்சநிலை ஏப்ரல் 5 முதல் 15 வரை நீடிக்கும். கொழும்பில் சூரியன் உச்சம் பெறுவது ஏப்ரல் 7 ஆம் திகதி நிகழ்கிறது. 

அன்று மதியம் 12:12 மணிக்கு யாராவது வெளியே இருந்தால், அவர்களின் நிழல் ஒரு கணம் மறைந்துவிடும். அவர்களால் தங்கள் சொந்த நிழலைப் பார்க்க முடியாது. வேறு யாராவது அதைப் பார்க்கலாம். "இந்த நிலைமை 4 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நீடிக்கும்." 

"4 ஆம் திகதி சூரியன் நம் நாட்டிற்குள் நுழைகிறது. அதாவது இந்த உச்சம் பெறுதல் பருத்தித்துறை முனையில் ஆரம்பமாகிறது. ஏப்ரல் 5 ஆம் திகதி எலமல்தெனிய, ஏப்ரல் 6 ஆம் திகதி களுத்துறை, ஏப்ரல் 7 ஆம் திகதி கொழும்பு - களனி, ஏப்ரல் 8 ஆம் திகதி மஹியங்கனை போன்ற பகுதிகளில் சூரியன் உச்சத்தை அடையும் என்றார்.

https://www.virakesari.lk/article/210889

பிளாட்டினம் போன்ற மதிப்பு மிக்க உலோகங்களை சிறுகோள்களில் இருந்து பிரித்தெடுத்து வர முடியுமா?

5 days 15 hours ago

சிறுகோள் சுரங்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஜாஷ் சிம்ஸ்

  • பதவி,

  • 31 மார்ச் 2025, 07:26 GMT

ஒரு சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் பணி சிக்கலில் உள்ள நிலையில், ஜாஷ் சிம்ஸ் நமக்கு மேலே உள்ள பல விண்வெளி பொருட்களின் அரிய தாதுக்களை பிரித்தெடுக்கும் முயற்சியில் நாம் உண்மையில் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோம் என்பதை விவரிக்கிறார்.

2025 ஆம் ஆண்டுக்குள் உலகம் எப்படி இருக்கும் என்பது குறித்து 30 ஆண்டுகளுக்கு முன்பு பிபிசியின் அறிவியல் நிகழ்ச்சியான டுமாரோஸ் வேர்ல்ட் சில கணிப்புகளை வெளியிட்டது. தொழில்நுட்ப உலகின் எதிர்காலத்தை கணிப்பது எவ்வளவு கடினம் என்பதற்கு இது ஒரு சான்றாகும். நமது வீடுகளில் ஹாலோகிராஃபிக் உதவியாளர்களுடன் பேசுவோம், இணைய வசதி அணுகல் தொடர்பாக பிரச்னைகள் ஏற்படும் என்று அந்த நிகழ்ச்சி கணித்திருந்தது.

அந்த நிகழ்ச்சியில் இந்த 2025 ஆம் ஆண்டு நாம் விண்கற்களிலிருந்து தாதுக்களை எடுத்துக் கொண்டிருப்போம் என்றும் கூறியிருந்தது. நாம் இன்னும் அதை செய்யவில்லை என்றாலும், சில சிறிய நிறுவனங்கள் பலர் கற்பனை செய்ததை விட விரைவில் நடக்கும் என்று கூறுகின்றன.

அமெரிக்க நிறுவனம் தீவிர முயற்சி

கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட நிறுவனமான ஆஸ்ட்ரோஃபோர்ஜின் நிறுவனர், தங்கள் நிறுவனம்தான் அதை முதலில் செய்யும் என்று நம்புகிறார்.

இதற்கான முதல் படிகளை இந்த நிறுவனம் ஏற்கனவே எடுத்து வைத்துள்ளது. 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி அன்று, புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 ராக்கெட்டில் $6.5 மில்லியன் (£5.1 மில்லியன்) மதிப்பிலான ஒடின் என்ற அதன் முதல் ஆளில்லா விண்கலத்தை ஆஸ்ட்ரோஃபோர்ஜ் ஏவியது.

சுமார் ஒன்பது நாட்களுக்குப் பிறகு, ஒடின் விண்கலம் திட்டமிட்டபடி சந்திரனைத் தாண்டி விண்வெளியில் பயணம் செய்வதாக ஆஸ்ட்ரோஃபோர்ஜ் நம்புகிறது.

இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக, ஓடினுடன் பெரிய தகவல் தொடர்பு சிக்கல்களை ஆஸ்ட்ரோஃபோர்ஜ் எதிர்கொண்டுள்ளது. இந்த கட்டுரை எழுதப்படும் நேரம் வரை அந்த தகவல் தொடர்பு சிக்கல் சரி செய்யப்படவில்லை. ஓடின் இப்போது அதன் 9 மாத கால பயணத்தின் இலக்கை அடைந்திருக்கலாம் என்று அந்நிறுவனம் நம்புகிறது.

பூமியிலிருந்து சுமார் 8 மில்லியன் கி.மீ. (ஐந்து மில்லியன் மைல்கள்) தொலைவில் உள்ள, முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட 2022 OB5 என்ற சிறுகோளை ஓடின் சுற்றி வந்து, தனது சென்சார்கள் மூலம் அந்த சிறுகோளில் என்னென்ன தாதுக்கள் இருக்கும் என மதிப்பிடும்.

"வேகமாக நகர்ந்து பாறைகளை உடைக்க வேண்டும்" என்பது ஆஸ்ட்ரோஃபோர்ஜ் நிறுவனர் மாட் கியாலிச்சின் தாரக மந்திரமாக இருக்கலாம். அவர் தீர்க்க முடியாத தொழில்நுட்ப சிக்கல்களால் அசர போவதில்லை.

ஆஸ்ட்ரோஃபோர்ஜ் இந்த தடைகளை எதிர்பார்த்தே இருந்தது. விண்கலத்துடன் மீண்டும் தொடர்பு கொள்ளாவிட்டாலும் நிறைய கற்றுக்கொண்டதாக அவர் கூறுகிறார். "ஆம், இன்னும் நிறைய சிறிய படிகளை எடுத்து வைக்க வேண்டும்," என்று அவர் ஒப்புக்கொள்கிறார். "ஆனால் நாங்கள் உண்மையில் அதை செய்ய ஆரம்பிக்க போகிறோம்".

அடுத்த ஆண்டு, சில மதிப்புமிக்க, செறிவூட்டப்பட்ட உலோகங்களை பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள்களில் வெட்டியெடுக்கும் வழிகளை உருவாக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக நமது எரிபொருள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பத்திற்கு அவசியமான பிளாட்டினம் வகை சார்ந்த உலோகங்களை எடுக்க திட்டமுள்ளது. இவற்றை பூமிக்கு அடியில் தோண்டி எடுப்பதற்கு, பொருளாதார ரீதியாகவும், சுற்றுச்சூழல், சமூக ரீதியாகவும், புவிசார் அரசியல் ரீதியாகவும் அதிக செலவாகும் என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால், விண்வெளியில் இருந்து இந்த உலோகங்களை பூமிக்குக் கொண்டு வருவது, குறிப்பாக குறுகிய காலத்தில், உண்மையில் சாத்தியமானதா என்றும், இது சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்துமா என்றும் மற்றவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சிறுகோள் சுரங்கம்

பட மூலாதாரம்,SPACEX

படக்குறிப்பு,ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 ராக்கெட்டில் தனது முதல் ஆளில்லா விண்கலத்தை ஆஸ்ட்ரோஃபோர்ஜ் ஏவியது.

சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுப்பது சாத்தியமே

அடுத்த பத்து ஆண்டுகளில் அடுத்தடுத்த சோதனை ஏவுதல்களில், ஆஸ்ட்ரோஃபோர்ஜ் சிறிய அளவிலான உலோகத்தை மட்டும் வெட்டி எடுக்கும் என்று கியாலிச் நம்புகிறார், ஆரம்பத்தில் சில கிராம்கள், அடுத்தடுத்து திட்டம் முன்னேறும் போது சில கிலோகிராம்களை கூட எடுக்க முடியும் என்பது அவரது நம்பிக்கை.

இவை சில மீட்டர் முதல் அரை கிலோமீட்டர் வரை விட்டம் கொண்ட சிறுகோள்களை இலக்காக கொண்டு செய்ய முடியும். ஆரம்பகால பயணங்கள் வணிகரீதியாக இருக்காது, ஆனால் வெட்டி எடுக்கப்படும் உலோகங்களைப் பொறுத்து, அவற்றை வணிகமயமாக்கலுக்கு உட்படுத்த முடியும் என்று கியாலிச் கூறுகிறார். உதாரணமாக, ஒரு கிலோ ரேடியத்தின் விலை தற்போது $183,000ஆகும்.

ஆனால் நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளர்களில் ஒருவரும், 2019 ஆம் ஆண்டில் ஐந்து பெருங்கடல்களின் அடிப்பகுதியைப் பார்வையிட்ட முதல் நபராக நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கிய ஆய்வாளருமான விக்டர் வெஸ்கோவோ, தொழில்நுட்ப சவால்கள் "கருவிகளை உருவாக்கும் வரைதான்" என்று கூறுகிறார்.

"அதைச் செய்ய முடியும் என்பதைக் காட்ட சில மைக்ரோகிராம்களை சிறுகோள்களிலிருந்து கொண்டு வர வேண்டும், பின்னர் அதையே பெரிய அளவில் செய்ய வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.

"சிறுகோள்களில் இருந்து உலோகங்களை எடுப்பதை முழுமையாக செயல்படுத்துவது பல தசாப்த கால திட்டமாக இருக்கலாம். ஆனால் இது அளவு ரீதியான சிக்கல் மட்டுமே. இது ஒரு பெரிய பொறியியல் சாதனை என்பதில் சந்தேகமில்லை என்றாலும், சிறுகோள்களில் இருந்து நேரடியாக பொருட்களின் மாதிரிகளை எடுப்பது ஏற்கனவே அரசு விண்வெளி மையங்களால் செய்யப்பட்டுள்ளன" என்கிறார்.

2005 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஹயபுசா 1 மற்றும் 2 திட்டத்தின் போது ஜப்பானும் 2020 ஆம் ஆண்டில் ஒசைரிஸ்-ரெக்ஸ் திட்டத்தின் போது நாஸாவும் இதை செய்துள்ளன என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

சிறுகோள் சுரங்கம்

பட மூலாதாரம்,ASTROFORGE

படக்குறிப்பு,ஓடின் விண்கலத்தின் முன்பாக நிற்கும் ஆஸ்ட்ரோஃபோர்ஜ் குழு

சவால்கள் என்ன?

சிறுகோள்களில் இருந்து உலோகங்களை எடுக்கும் யோசனை விசித்திரமாகத் தோன்றினால், ரைட் சகோதரர்களின் மனிதர்களை ஏந்தி சென்ற முதல் விமானம் போன்ற பல தொழில்நுட்ப முன்னேற்றங்களும் அதே சுமையைக் கொண்டிருந்தன என வெஸ்கோவோ வாதிடுகிறார். அதாவது, அவை உண்மையில் நடக்கும் வரை அப்படிதான் தோன்றும் என்கிறார் அவர்.

விண்வெளி வளத் திட்டத்தைக் கொண்ட பொறியியல் ஆராய்ச்சி நிறுவனமான கொலராடோ ஸ்கூல் ஆஃப் மைன்ஸின் இணை பேராசிரியர் இயன் லாங்கே, தற்போது சிறுகோள்களில் இருந்து உலோகங்களை எடுக்கும் தொழில்நுட்ப தடைகளை மட்டுமே நம்மால் மதிப்பிட முடியும் என்று வலியுறுத்துகிறார்.

ஒரு விண்கலம் ஒரு சிறுகோளை சந்திப்பது மற்றொரு விண்கலத்துடன் அவ்வாறு செய்வதை விட சற்றே சிக்கலானதாக இருக்கலாம் என்று அவர் குறிப்பிடுகிறார். ஆனால், உதாரணமாக, ஈர்ப்பு விசையின் நிலைப்படுத்தும் சக்தி இல்லாமல் வளங்களை எவ்வாறு பிரித்தெடுக்க முடியும்?

"சிறுகோள்களில் இருந்து உலோகங்களை எடுக்கும் பணி ஒப்பீட்டளவில் நேரடியானது, ஆனால் நாம் விரும்புவதிலிருந்து நாம் விரும்பாததை பிரிக்க ஒருவித வேதியியல் அல்லது வெப்ப செயல்முறை மற்றும் ஈர்ப்பு விசை தேவைப்படுகிறது" என்று லாங்கே கூறுகிறார்.

"விண்வெளியில் அதை உருவாக்குவது மிகவும் கடினமாக இருக்கும். இந்த கட்டத்தில், ஏற்கெனவே நிறுவப்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முடியுமா அல்லது சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுக்கும் தொழில் முற்றிலும் புதியவற்றை உருவாக்க வேண்டுமா என்று சொல்வது கடினம்." என்கிறார்.

சிறுகோள் சுரங்கம்

பட மூலாதாரம்,ASTROFORGE

படக்குறிப்பு, 1967-ம் ஆண்டு ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட விண்கல் மாதிரி.

தனியார் விண்வெளி வணிகத்தின் விளைவுகள் என்ன?

விண்வெளி வளங்களை எவ்வாறு சேகரிக்கலாம் என்பது குறித்த யோசனைகளை நாசா உருவாக்கத் தொடங்கிய 1980கள் வரை சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுப்பது பற்றிய யோசனை பெரும்பாலும் அறிவுசார் ஆர்வத்தின் விஷயமாக இருந்தது என்று லாங்கே கூறுகிறார். இந்த யோசனைகள் 1990களில் அதிகரித்த சுற்றுச்சூழல் பிரச்னைகளுடன் வேகமெடுத்தன என்று அவர் மேலும் கூறுகிறார்.

சிறுகோள்களில் இருந்து உலோகங்களை எடுக்கும் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட மூன் எக்ஸ்பிரஸ், பிளானட்டரி ரிசோர்சஸ், டீப் ஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற பல தனியார் நிறுவனங்கள் இதற்காக அதிக செலவுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 2010களின் இறுதியில், பிளானட்டரி ரிசோர்சஸ், டீப் ஸ்பேஸ் மற்றொரு நிறுவனத்தால் வாங்கப்பட்டு, பிற திட்டங்களை நோக்கி இயக்கப்பட்டது. வணிக மற்றும் தொழில்நுட்ப சவால்களின் காரணமாக சிறுகோள்களில் இருந்து உலோகங்களை எடுக்கும் பணிகள் இன்னும் 30 ஆண்டுகள் தொலைவில் உள்ளது என்று லாங்கே நம்புகிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம்தான் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தியதாக வெஸ்கோவோ வாதிடுகிறார். சிலியில் கிட்டத்தட்ட நிறைவுபெற்றுள்ள வேரா சி ரூபின் ஆய்வகம் போன்ற புதிய ஆய்வகங்கள், விரைவில் சிறுகோள்களின் சிறந்த கண்காணிப்பை வழங்கும். ஒளியியல் மற்றும் ஸ்பெக்ட்ரோகிராஃபிக் பகுப்பாய்வு உலோகங்களை எடுப்பதற்கு தகுதியான சிறுகோள்களை அடையாளம் காண உதவுகின்றன, இவற்றில் எத்தனை சிறுகோள்களில் அது சாத்தியம் என்பது விவாதத்துக்கு உட்பட்டது என்றாலும் கூட. சக்தி வாய்ந்த கணினி தொழில்நுட்பம் மிகவும் பரவலாகக் கிடைக்கத் தொடங்கியுள்ளது. விண்கலத்தை குறைந்த செலவில் உருவாக்க மிகவும் மலிவான பொருட்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.

"அரசாங்கங்கள் மட்டுமே இந்த வகையான காரியத்தைச் செய்ய முடியும் அல்லது தொழில்நுட்பத்தை அணுக முடியும் என்பதுதான் சற்று காலம் முன்பு வரை இருந்த நிலை. அவர்கள் அதை ஒருபோதும் திறம்பட செய்யவில்லை" என்று லாஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட டிரான்ஸ் ஆஸ்ட்ராவின் நிறுவனர் ஜோயல் செர்செல் கூறுகிறார்.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் சர்வதேச விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதையில் உள்ள கழிவுகளை சேகரிப்பதற்காக டிரான்ஸ்ஆஸ்ட்ரா நிறுவனம் ஊதி பெரிதாக்கக்கூடிய வகையிலான பை ஒன்றை எப்படி பயன்படுத்துவது என்பது செய்து காட்டும்.

"இப்போது நம்மிடம் ஒரு துடிப்பான தனியார் விண்வெளி வணிகம் உள்ளது, இது சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுப்பது மக்கள் கணிப்பதை விட மிக விரைவாக சாத்தியமாக்கப் போகிறது" என்கிறார்.

குறைந்துவரும் விண்வெளித் திட்டங்களின் செலவுகள்

விண்வெளித் துறையின் தனியார்மயமாக்கல் மற்றும் மறு பயன்பாட்டு ராக்கெட்டுகளின் வளர்ச்சி காரணமாக, சுற்றுவட்டப்பாதையில் ஒரு விண்கலத்தை நிறுவுவது முன்பை போல் அல்லாமல் மிகவும் எளிதானது மற்றும் மலிவானது.

"15 ஆண்டுகளுக்கு முன்பு 1 பவுண்டு (450 கிராம்) எடை கொண்டவற்றை விண்வெளியில் செலுத்த 10,000 டாலர்கள் செலவாகும் நிலையில், இப்போது சில ஆயிரங்களாக அது குறைந்துள்ளது" என்று வெஸ்கோவோ கூறுகிறார். "ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் போன்ற திட்டங்களுடன் , எதிர்காலத்தில் சில நூறு டாலர்கள் மட்டுமே செலவாகும் என்ற எதிர்பார்க்கலாம்" என்கிறார்.

வானியற்பியலாளரும் அறிவியல் தொடர்பாளருமான நீல் டிகிராஸ் டைசன், உலகின் முதல் டிரில்லியனர் சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுக்கும் பணிகளை மேற்கொள்வதன் மூலம் வருவார் என்று கூறினார், "நீல் டிகிராஸ் டைசனின் கருத்து தவறல்ல என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவிக்கிறார் வெஸ்கோவோ. எப்படியிருந்தாலும், உலோக எடுப்பின் மூலம் பூமி எதிர்கொள்ளும் தொடர்ச்சியான அழிவைத் தடுக்க சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுப்பது அவசியம் என்று அவர் நம்புகிறார்.

ஆஸ்ட்ரோஃபோர்ஜின் திட்டங்களைப் பற்றி லாங்கேவுக்கு சந்தேகங்கள் உள்ளன. சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுக்கும் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமாகலாம் என்று கூறும் அவர் ஆஸ்ட்ரோஃபோர்ஜின் பிளாட்டினம் குழு-மையப்படுத்தப்பட்ட வணிக மாதிரியைப் பற்றி அவர் மிகுந்த நம்பிக்கை கொள்ளவில்லை. "கடலின் அடிப்பகுதி உட்பட பூமியில் இந்த வளங்கள் அதிகமாக இருக்கும் போது, விண்வெளியில் இருந்து அவற்றை சேகரிப்பதை விட பூமியிலிருந்து எடுப்பதே எளிதானதாக இருக்கும். நாம் அந்த வளங்களை எடுக்க நம்மை நாமே அனுமதித்தால், இதற்கான பல சாத்தியக்கூறுகள் உள்ளன" என்றார்.

ஆழ்கடலில் உலோகங்களை எடுக்கும் பணிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததா?

ஆனால் லான்காஸ்டர் பல்கலைக் கழகத்தின் சுற்றுச்சூழல் விஞ்ஞானி கேத்ரின் மில்லர், விரைவில் ஒழுங்குப்படுத்தப்படவுள்ள ஆழ்கடலில் இருந்து உலோகங்களை எடுக்கும் பணிகளை விட சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுக்கும் பணிகள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் கவர்ச்சிகரமான விருப்பமாக இருக்கும் என்று வாதிடுகிறார் . நிலத்தடி சுரங்கமும் "சரியானது இல்லை தான்... வாழ்விட அழிப்பு, சமூக நீதி பிரச்னைகள் என பல சிக்கல்கள் உள்ளன. கடற்பரப்பில் இருந்து கோபால்ட் மற்றும் தாமிரம் சேகரிப்பது வளங்களை எடுப்பது மட்டுமில்லை, கடற்பரப்பை அழிப்பதாகும், "என்று மில்லர் கூறுகிறார்.

நிச்சயமாக, ராக்கெட்டுகளை விண்வெளிக்கு எடுத்துச் செல்வது மிகவும் மாசு ஏற்படுத்தும், அதிக ஆற்றல் தேவைப்படும் செயலாகும். ஆனால் சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுக்கும் பணியும் அவ்வாறானதே. பாரிஸ்-சாக்லே பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் 2018 ஆம் ஆண்டு ஆய்வில், பூமியில் பிளாட்டினத்தை எடுக்க தோண்டுவதை சிறுகோள்களிலிருந்து உலோகங்களை எடுக்கும் பணி திட்டத்துடன் ஒப்பிட்டது. ஒரு சிறுகோளில் இருந்து வெட்டியெடுக்கப்படும் ஒவ்வொரு கிலோ பிளாட்டினத்திற்கும் 150 கிலோ கார்பன் டை ஆக்சைடு பூமியின் வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். தற்போதைய நடைமுறைகளைப் பயன்படுத்தி பூமியில் 1 கிலோ பிளாட்டினத்தை எடுக்கையில் 40,000 கிலோ கார்பன் டை ஆக்சைடு உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு காரணம் பூமியில் பிளாட்டினம் மிக அரிதாக கிடைப்பதாகும். பூமியின் மேலோட்டில் ஒரு மில்லியனில் 0.0005 பகுதிகள் மட்டுமே பிளாட்டினம் உள்ளது. அதிக உற்பத்தி செய்யும் சுரங்கங்கள் கூட தற்போது மில்லியனுக்கு ஐந்து முதல் 15 பகுதிகள் என்ற அளவிலேயே செயல்படுகின்றன.

சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுக்கும் நிறுவனமான கர்மன்+ என்ற நிறுவனத்தின் நிறுவனர் டேனன் க்ரூல், சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுப்பதானது எதிர்காலத்தில் விண்வெளியில் ஒரு பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான வளங்களைத் தேடுவதில் உள்ளது என்று நினைக்கிறார். 2035 ஆம் ஆண்டில் விண்வெளி பொருளாதாரம் 1.8 டிரில்லியன் டாலர் (£ 1.4 டிரில்லியன்) மதிப்புள்ளதாக இருக்கும் என்று உலக பொருளாதார மன்றம் கணித்துள்ளது.

சிறுகோள் சுரங்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையிலான சமநிலை குலையலாம்

விண்வெளியில் உலோகங்களை எடுக்க தோண்டுவது இயற்கையாகவே கனிமங்கள் நிறைந்த வளரும் நாடுகளுக்கும், விண்வெளியில் அவற்றை அறுவடை செய்யத் தேவையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடிய வளர்ந்த நாடுகளுக்கும் இடையிலான அதிகார சமநிலையை மாற்றக்கூடும் என்று ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக் கழக விண்வெளி கொள்கை நிறுவனத்தின் அறிஞர் டெகனிட் பைகோவ்ஸ்கி வாதிடுகிறார்.

"விண்வெளியில் பயன்படுத்த விண்வெளியில் வளங்களை சுரங்கப்படுத்துவது ஒரு விஷயம் - இப்போது முன்னணி விண்வெளி பயண நாடுகளைப் பாருங்கள், அவை விண்வெளியில் ஒரு நீடித்த மனித இருப்பை உருவாக்க முயன்று வருகின்றன, அதற்காக பொருட்களை சுரண்டுவது தர்க்க ரீதியானது," என்று அவர் கூறுகிறார். "ஆனால் [நிறுவப்பட்ட] பூமியின் பொருளாதாரத்தில் பயன்படுத்த அந்த வளங்களை மீண்டும் பூமிக்கு கொண்டு வருவது மற்றொரு விஷயம். இது பல்வேறு பங்குதாரர்களை பல வழிகளில் பாதிக்கும்" என்கிறார்.

சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுக்கும் பணி என்று வரும்போது, பிளாட்டினம் சுரங்கப் பணிகள்தான் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றன. அதனுடன் சேர்த்து அரிய வகை உலோகங்கள், அணுக்கரு இணைவுக்குத் தேவையான ஹீலியம் -3 போன்ற பிற வளங்களுடன் வெட்டி எடுக்கப்படலாம். ஆனால், உயிர் காக்கும் ஆக்சிஜன் மற்றும் ராக்கெட் உந்துசக்தியான ஹைட்ரஜனுக்காக தண்ணீரை எடுப்பது, விண்வெளி வாழ்விடங்கள் அல்லது சூரிய ஆற்றல் சேகரிப்பான்களை உருவாக்க பயன்படும் மட்பாண்டங்களின் 3டி அச்சிடலுக்கான களிமண் ஆகியவற்றை சுரங்கத்தின் மூலம் எடுப்பதை யோசித்துப் பாருங்கள் என அவர் கூறுகிறார். சுரங்கத் தொழில் இவற்றை பூமியிலிருந்து முழுவதுமாக விண்வெளிக்கு கொண்டு செல்வதற்கான செலவுகளில் பெரும்பகுதியை குறைத்துவிடும்.

"சிறுகோள் வளங்களை மீண்டும் பூமிக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் ஆராய்ந்தோம், ஆனால் அது தெளிவற்றதாகத் தெரிகிறது" என்று க்ரல் கூறுகிறார். அதற்கு பதிலாக, கர்மன்+ நிறுவனம் விண்வெளியில் உள்ள வளங்களை எடுத்து, விண்வெளியிலேயே பயன்படுத்த திட்டமிடுகிறது. விண்வெளி வாழ்விடங்களை உருவாக்க அல்லது செயற்கைக்கோள்களை பராமரிப்பதற்கு அவை பயன்படலாம். கர்மன்+ நிறுவனம் சமீபத்தில் $20மில்லியன் முதலீட்டை திரட்டியுள்ளது. அதன் முதல் விண்கலத்திற்கான ஏவுதல், மாதிரிகள் சேகரிக்கும் அதன் திறன்களை சோதிக்க பிப்ரவரி 2027 க்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விண்வெளி வளங்கள் யாருக்கு சொந்தம்?

இது இன்னும் பல பதிலளிக்கப்படாத கேள்விகளை இங்கே உள்ளன. இது ஒரு வகையான சுற்றுச்சூழல் சேதத்தை குறைத்து மற்றொன்றை உருவாக்குகிறதா? தோண்டப்பட்டவுடன் அவற்றிலிருந்து எஞ்சியிருக்கும் கழிவுகள் குறித்து சிலர் கவலை தெரிவித்துள்ளனர். இந்த கழிவுகளை எவ்வாறு அகற்றுவது என்ற சிக்கலைப் பற்றி அவர்கள் கவலைப்படுகிறார்கள், மற்ற விண்வெளி கழிவுகளைப் போலவே, இதுவும் இறுதியில் பூமியில் விழக்கூடும். இங்கிலாந்தில் உள்ள தி ஓபன் பல்கலைக் கழகத்தின் கிரக மற்றும் விண்வெளி அறிவியல் பேராசிரியர் மோனிகா கிரேடி போன்ற விஞ்ஞானிகள், விண்வெளியின் பரிசுத்தமான சூழலை களங்கப்படுத்தக் கூடாது என்று வாதிட்டனர், அதற்கு பதிலாக மனிதர்கள் " அவ்வப்போது சுத்தம் செய்ய" கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்.

ஆனால் இதற்கு மாறான கருத்துகளும் நிலவுகின்றன. விண்வெளியில் உள்ள வளங்கள் பூமியில் உள்ளவர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியாக பார்க்கப்பட வேண்டும் என்று கியாலிச் வாதிடுகிறார். "அங்கு எல்லையற்ற விண்வெளி, எண்ணற்ற விண்கற்கள் உள்ளன, ஆனால் ஒரே ஒரு பூமி மட்டுமே உள்ளது," என்று அவர் கூறுகிறார்.

இருப்பினும், இந்த நிறுவனங்களால் தோண்டப்பட்ட சிறுகோள் வளங்களை வாங்கத் தொடங்குவதற்கு முன்பு பதிலளிக்க வேண்டிய இன்னும் ஒரு கேள்வி உள்ளது. உண்மையில் அவற்றை விற்க அந்த வளங்கள் அவர்களுடையதா? இது முடிவு செய்யப்பட வேண்டிய ஒன்று என்று இங்கிலாந்தின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விண்வெளி சட்ட பேராசிரியரும், லண்டனை தளமாகக் கொண்ட விண்வெளியில் இருந்து உலோகங்களை எடுக்கும் நிறுவனமான ஆஸ்டிராய்ட் மைனிங் கார்பரேஷனின் ஆலோசகருமான ரோசன்னா டெப்லானோ கூறுகிறார்.

115 நாடுகளால் கையெழுத்திடப்பட்ட சர்வதேச விண்வெளி சட்டம் குறித்த மிகப் பழமையான ஆனால் மிகவும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தமான 1967 வெளிப்புற விண்வெளி ஒப்பந்தம், நாம் விண்வெளியை பொதுவானதாக கருத வேண்டும் என்று கூறுகிறது, ஆனால் அதன் வளங்களைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. "எனவே [சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுப்பது] தடை செய்யப்படவில்லை" என்று டெப்லானோ கூறுகிறார்.

இதற்கிடையில், 1979 மூன் (சந்திரன்) ஒப்பந்தம், சந்திரனின் இயற்கை வளங்கள் யாருடைய சொத்தாகவும் மாறக்கூடாது என்று கூறுகிறது - ஆனால் இது சிலி, நெதர்லாந்து, மொராக்கோ உள்ளிட்ட 7 நாடுகளால் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது, அவற்றில் எந்த நாடும் இன்றுவரை தங்கள் சொந்த மனிதர்களைக் கொண்ட விண்வெளிப் பயணத் திட்டங்களைக் கொண்டிருக்கவில்லை. விண்வெளி வளங்களைப் பயன்படுத்துவது குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புக் குழு 2027-ல் கூடவுள்ளது, ஆனால் எந்தவொரு அறிவிப்பும் சட்டப்பூர்வமாக கட்டுப்பாட்டைக் கொண்டிருக்காது.

உண்மையில், யுக்ரேனின் கனிம வளங்கள் மீதான சாத்தியமான உடன்பாடு குறித்து அமெரிக்காவிற்கும் யுக்ரேனுக்கும் இடையிலான விவாதங்கள் சுட்டிக்காட்டியுள்ளபடி, தேசிய நலன்கள் முன்னுரிமை பெறக்கூடும்.

"சிறுகோள்களிலிருந்து பிரித்தெடுப்பது அறிவியல் ஆராய்ச்சிக்காக இருந்தால், அது மிகவும் சிக்கலாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை" என்று டெப்லானோ கூறுகிறார். ஆனால், வணிகமயமாகும்போது அரசியல் மட்டத்தில் பிரச்னை எழுகிறது.

நாடுகள் ஏற்கனவே தங்கள் சொந்த தேசிய கண்ணோட்டத்தில் இருந்து இந்த விவகாரம் குறித்த விளக்கங்களை வழங்குகின்றன என்று அவர் மேலும் கூறுகிறார். "இது வணிகமயமாக்கலை ஊக்குவிப்பதாகும். அது நடக்கப் போகிறது."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cvgeddvvyd1o

'நெஞ்சை நோக்கி நேராக சுடுவது போல' பூமியை நோக்கி கதிர்களை வீசும் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு - முக்கியத்துவம் என்ன?

1 week 1 day ago

ராட்சச கருந்துளை கண்டுபிடிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன்

  • பதவி, பேராசிரியர், இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனம், மொஹாலி

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சுமார் 12.9 நூறு கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கேலக்ஸி ஒன்றின் மையத்தில் 700 பத்து லட்சம் சூரியன் நிறையைக் கொண்ட ஒரு ராட்சத கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த 'பிளேசர்' வகை ராட்சத கருந்துளை நெஞ்சை நோக்கி நேராகச் சுடுவது போலப் பூமியை நோக்கி ஆற்றல் வாய்ந்த கதிர்களை வீசுகிறது. இந்தக் கண்டுபிடிப்பின் தொடர்ச்சியாக வானியலாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

பிக் பாங் எனும் பிரபஞ்சம் தோன்றிய பின்னர் வெறும் 800 பத்து லட்சம் ஆண்டு இளம் வயதாக இருந்தபோதே VLASS J041009.05-013919.88 என்கிற (சுருக்கமாக J0410-0139 ) இந்த வினோதப் பெயர் கொண்ட கருந்துளை உருவாகியுள்ளது.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 'பிளேசர்' வகை ராட்சத கருந்துளைகளில் இதுதான் ஆகத் தொன்மை வாய்ந்தது, ஆகத்தொலைவில் உள்ளதும் கூட.

மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபார் அஸ்ட்ரோனமியின் குழுத் தலைவரான எடுவார்டோ பனாடோஸ் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு, டிசம்பர் 2024இல் 'தி அஸ்ட்ரோபிசிகல் ஜர்னல் லெட்டர்ஸ் அண்ட நேசர் அஸ்ட்ரோனமியில்' தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

அட்டகாமா லார்ச் மில்லிமீட்டர் அர்ரே, மாமல்லன் தொலைநோக்கிகள் மற்றும் சிலியில் அமைந்துள்ள ஐரோப்பியத் தெற்கு ஆய்வகத்தின் மிகப் பெரிய தொலைநோக்கி மற்றும் பூமியின் சுற்றுப்பாதையில் உள்ள நாசாவின் சந்திரா விண்வெளி தொலைநோக்கி உள்ளிட்ட பல தொலைநோக்கிகளின் தரவுகளை ஆராய்ச்சிக் குழு பயன்படுத்தியது.

இந்தத் தரவுகளின் அடிப்படையில் இந்த வான் பொருளின் தொலைவு உட்படப் பல்வேறு தரவுகளை இனம் கண்டனர்.

கடந்த காலம்

ராட்சச கருந்துளை கண்டுபிடிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

ஆகப் பெரிய தொலைநோக்கிகள் உள்ளபடியே கடந்தகாலத்தைக் காட்டும் மாயக்கண்ணாடி போலத்தான். நொடிக்குச் சுமார் மூன்று லட்சம் மீட்டர் என ஒளி பயணம் செய்கிறது. எனவே ஒரு பொருளிலிருந்து நம் கண்களுக்கு ஒளி வந்து சேர குறிப்பிட்ட கால இடைவெளி ஏற்படும்.

எடுத்துக்காட்டாக இப்போது சூரியனைப் பார்த்தல் அது எட்டு நிமிடம் முன்பு இருந்த சூரியன். இப்போது காட்சி தரும் நிலவு 1.3 நொடிக்கு முன்பு இருந்த நிலவு. இரவு வானில் மிகப் பிரகாசமான விண்மீன் சிரியஸ் சுமார் 8.6 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையில்தான் காட்சி தரும். அதாவது தொலைவில் உள்ள பொருளைக் காணும்போது கடந்த காலத்தைக் காண்கிறோம்.

ஐம்பது அறுபது வயதில் தலைமுடி நரைப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. ஆனால் பிறந்த கைக்குழந்தையின் தலைமுடி நரைக்கிறது என்றால் நாம் அதிர்ச்சி அடைவோம் அல்லவா? அதுபோலத் தான் இந்தக் கண்டுபிடிப்பு என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை பிக் பாங் நிகழ்வுக்குப் பிறகு 800 பத்து லட்சம் ஆண்டுகள் என்பது சிறு கைக்குழந்தை நிலை. பிரபஞ்சத்தின் இளம் வயதிலேயே இவ்வளவு நிறை கொண்ட குண்டு ராட்சத கருந்துளை எப்படி ஏற்பட்டு இருக்க முடியும் என விஞ்ஞானிகள் மலைத்து நிற்கின்றனர்.

'பிளேசர்' வகை ராட்சத கருந்துளை

கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் சிலர் யானையின் வாலை தடவி கயிறு என்றும், காலை பிடித்துப் பார்த்து தூண் போல என்றும், காதை தடவிப் பார்த்து முறம் போல என்றும் தந்ததைப் பிடித்துப் பார்த்து ஈட்டி போல என்றும் தவறாகக் கருதுவது போல இதுகாறும் பிளேசர் குவாசர் மற்றும் துடிக்கும் ரேடியோ கேலக்ஸி முதலியவற்றைத் தனித்தனியான மூன்று வகை வான் பொருள்கள் எனத் தவறாகக் கருதி இருந்தனர்.

இவை மூன்றும் சூரிய நிறைபோல பத்து லட்சம் நூறு கோடிக் கணக்கில் நிறை கொண்ட குண்டு ராட்சச கருந்துளை கொண்ட உயிர்ப்புள்ள கோலடி கருக்கள் தாம்.

பெரும் அளவு நிறை அடர்த்தியாகச் சிறு வெளியில் சுருங்கும்போது கருந்துளை உருவாகிறது. கருந்துளையின் ஈர்ப்பு ஆற்றல் மிக வலுவானது. ஒளி கூட கருந்துளையிலிருந்து வெளியே வரமுடியாது.

சூரியனைப் போலப் பத்து இருபது மடங்கு நிறைகொண்ட குட்டி கருந்துளை முதல் சூரியனைப் போல பத்து லட்சம்- நூறு கோடி நிறை கொண்ட ராட்சத கருந்துளைகள் வரை இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளன.

சூரியனைப் போலப் பல பத்து லட்சம் நிறை கொண்ட குண்டு ராட்சத கருந்துளைகள் அவற்றின் மீ நிறையின் காரணமாக ஈர்ப்பு புலம் வலுப் பெற்று அருகில் உள்ள பொருள்களைக் கவர்ந்து இழுக்கும். வாயு தூசு நிரம்பிய இந்தப் பொருள்கள் கருந்துளையை மிக வேகமாகச் சுற்றிச் சுழலும்.

தலைச்சுற்றும் வேகத்தில் இவை சுழலுவதால் ரேடியோ அலைகள், காமா கதிர்கள், எசஸ் கதிர்கள் எனப் பல்வேறு வகை மின்காந்த அலைகளை உமிழும்.

சுழலும் இந்தக் கருந்துளையைச் சுற்றி உருவெடுக்கும் காந்தப் புலத்தின் காரணமாகக் கருந்துளையின் இரண்டு துருவங்கள் அருகே ஜெட் போல மீ ஆற்றல் வாய்ந்த கதிர்கள் வெளிப்படும்.

கருந்துளை சுழல்வதால், கலங்கரை விளக்கு சுழல்வது போல் இந்த ஜெட் கதிர் சுழலும். சுழலும் இந்தச் சமதளத்தில் தற்செயலாகப் பூமி அமைந்தால் சுழலும் ஜெட் கதிர் பல்ஸ் துடிப்பு போலப் பூமியில் படும். இதுவே 'பிளேசர்' வகை ராட்சச கருந்துளை.

இதே கருந்துளையின் ஜெட் பூமி நோக்கி இல்லை என்றால் அதை குவாசர் என்றும் மைய கருந்துளை தூசியினால் மறைக்கப்பட்டால் ரேடியோ கேலக்ஸி என்றும் மயங்கிவிடுகிறோம் எனச் சமீபத்தில் விஞ்ஞானிகள் புரிந்து தெளிந்துள்ளனர்.

ராட்சச கருந்துளை கண்டுபிடிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

என்ன பெயர் வைக்கலாம்?

இந்தக் கருந்துளையின் பெயரில் உள்ள VLASS என்பது "வெரி லார்ச் அர்ரே ஸ்கை சர்வே" (The Very Large Array Sky Survey) என்பதன் சுருக்கம் ஆகும்.

செப்டம்பர் 2017 முதல் வாகனத்தில் ஜி. ஜான்ஸ்கி வெரி லார்ச் அர்ரே வானொலி தொலைநோக்கி கொண்டு வானில் உள்ள வானொலி அலைகளை உமிழும் வான் பொருட்களின் கணக்கெடுப்பு செய்கிறனர்.

இதில் இனம் காணும் வான் பொருள்களைப் பட்டியல் செய்கின்றனர். எனவே இந்தக் கருந்துளை VLASS பட்டியலில் உள்ள வன்பொருள் என நாம் புரிந்துகொள்ளலாம்.

ஆங்கில எழுத்து J என்பது 2000 ஆண்டு சம இரவு பகல் புள்ளியிலிருந்து கணிதம் செய்து இந்த வான் பொருளின் இடத்தை நிர்ணயம் செய்துள்ளார் என்று பொருள். பூமியில் ஒவ்வொரு புள்ளியையும் அட்சரேகை தீர்க்கரேகை கொண்டு அடையாளப்படுத்துவது போல வான் மண்டல அட்சரேகை தீர்க்கரேகை தான் 041009.05-013919.88 என்கிற எண்கள். இதைப் பார்த்ததுமே வானவியலாளர்கள் இந்த வான் பொருளின் இருப்பிடம் என்ன என எளிதில் அறிந்துகொள்வார்கள்.

வானில் தோன்றிய ஒளிரும் சுழல் - ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் காரணமா?

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் வளர்த்த செடி எது? பூமியை விட அங்கே வேகமாக வளர்வது ஏன்?

சர்வதேச விண்வெளி நிலையத்தில் மனிதர்கள் போடும் குப்பைகள் என்ன ஆகும்?

மோதியை விமர்சிப்பவர்கள் விரும்பும் ஈலோன் மஸ்கின் 'க்ரோக்' எவ்வாறு இயங்குகிறது?

ஆகத்தொலைவான பிளேசர்

ராட்சச கருந்துளை கண்டுபிடிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

VLASS கணக்கெடுப்பை சாடையாகத் தேடியபோது சுமார் இருபது இடங்களில் பிளேசர் வகைக் கருந்துளை இருக்கலாம் என முதற்கட்டத் தகவல் கூறியது.

இவற்றைக் கூர்ந்து ஆய்வு செய்தபோது J0410−0139 என்கிற ரேடியோ அலைகளை உமிழும் வான் பொருள் பிளேசர் வகைக் கருந்துளை எனவும், இது பிரபஞ்சத்தின் குழந்தைப் பருவத்தைச் சார்ந்தது எனவும் புலனாகியது.

இதுவரை பல்லாயிரக்கணக்கான உயிர்ப்புள்ள கோலடி கருக்களை இனம் கண்டிருந்தாலும் அதில் வெறும் 3000 சொச்சம் மட்டுமே பிளேசர் வகை சார்ந்தது. எனவே ஒரு பிளேசர் கண்டால் பல ஆயிரம் உயிர்ப்புள்ள கோலடி கருக்கள் இருக்கலாம் என முடிவுக்கு வரமுடியும்.

இவற்றில் 2020இல் இனம் காணப்பட்ட SO J0309+27 என்கிற வான்பொருள்தான் இதுவரை ஆகலின்மையான பிளேசர் வகைக் கருந்துளையாக அறியப்பட்டது. இது பிரபஞ்சம் தோன்றி 800-900 பத்து லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு உருவானது.

பிரபஞ்சம் தோன்றி 800-900 பத்து லட்சம் ஆண்டுக்காலத்தில் மீ நிறை கொண்ட ராட்சச கருந்துளை வளரமுடியும், ஆனால் வெறும் 700 பத்து லட்சம் ஆண்டுகளில் இப்படிப்பட்ட ராட்சத கருந்துளை வளர்ந்தது மர்மமே. கருந்துளைகள் குறித்தும் அவை எப்படி சடசடவென உருவாக்கி வளர்கின்றன என்பது குறித்தும் ஏற்கனவே நமக்கு இருந்த கருதுகோள்களை நீக்கி புத்தாக்கம் செய்யவேண்டும் என்கின்றார் சிலர்.

ராட்சத கருந்துளையின் ஜெட் திசை எதுவாகவும் இருக்கலாம். எனவே நம்மை நோக்கி நேராக ஜெட் திசை அமைவது என்பது பரிசுச்சீட்டு பரிசு போல. பல கோடி பேர் பரிசுச்சீட்டு சீட்டு வாங்கி இருந்தால் தானே பத்து கோடி பரிசுச்சீட்டு பரிசு ஒருவருக்குக் கிடைக்கும். எனவே பிரபஞ்சத்தின் குழந்தை நிலையில் நம்மை நோக்கி ஜெட் உள்ள பிளேசர் இருந்தால் வேறு திசை நோக்கி ஜெட் கொண்ட பல லட்சம் ராட்சத கருந்துளைகள் இருக்கவேண்டும்.

எனவே குழந்தைப் பருவப் பிரபஞ்சத்தின் தற்போதைய புரிதலை இந்தக் கண்டுபிடிப்பு கேள்விக்குள்ளாக்குகிறது. குறிப்பாகக் கருந்துளைகளின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சி; அவை எவ்வளவு பெரியதாக இருக்கும், எவ்வளவு விரைவாக வளர்ச்சியடையும், எத்தனை இருந்திருக்கலாம் முதலிய குறித்த நம்முடைய அனுமானங்கள் அனைத்தும் சவால் செய்யப்பட்டுள்ளன.

(த வி வெங்கடேஸ்வரன், முன்னாள் முதுநிலை விஞ்ஞானி, அறிவியல் எழுத்தாளர், தற்போது மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வருகை பேராசிரியராகப் பணியாற்றுகிறார்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8x407d9z4no

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் வளர்த்த செடி எது? பூமியை விட அங்கே வேகமாக வளர்வது ஏன்?

1 week 5 days ago

சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி, தாவரங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், அம்ரிதா பிரசாத்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 24 மார்ச் 2025, 05:44 GMT

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற நாசா விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ் 286 நாட்களுக்குப் பிறகு, கடந்த மார்ச் 19 ஆம் தேதி பூமிக்கு திரும்பினார். அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த போது, விண்வெளியில் தாவரங்கள் வளர்ப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டார்.

'பிளான்ட் ஹேபிடட் -07' என்ற திட்டத்தின் கீழ், புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் அவர் 'ரோமெயின் லெட்யூஸ்' எனப்படும் ஒரு வகை கீரைச் செடியை வளர்த்தார்.

விண்வெளியில் தங்கும் வீரர்கள், தங்களுக்கான உணவை பூமியில் இருந்து எடுத்துச் செல்லும் போதிலும், விண்வெளியில் தாவரங்களை வளர்க்க ஏன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன? விண்வெளியில் தாவரங்கள் வளருமா?

சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி, தாவரங்கள்

பட மூலாதாரம்,NASA

விண்வெளியில் தாவரங்களை வளர்க்கும் ஆய்வு ஏன்?

விண்வெளியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆராய்ச்சி திட்டங்களில் விண்வெளி விவசாயமும் ஒன்று. சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) விவசாயம் குறித்த பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விண்வெளி வீரர்களுக்காக, பூமியில் இருந்து வரும்போதே அவர்களுக்கு தேவையான உணவுகள் முன்கூட்டியே பதப்படுத்தப்பட்டு அனுப்பப்படுகின்றன. இவை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தீர்ந்துவிடும்.

பிற கோள்கள் மற்றும் பூமியில் இருந்து நீண்ட தூரத்தில் உள்ள விண்வெளிப் பொருட்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வாரங்கள், மாதங்கள் மற்றும் பல வருடங்கள் கூட ஆகலாம். அது போன்ற சூழலில்தான் இந்த விண்வெளி விவசாயம் கைகொடுக்கும்.

நாசாவின் கூற்றுப்படி, நீண்ட கால விண்வெளிப் பயணங்கள் மற்றும் பிற கோள்களில் மனிதர்கள் குடியேறுவதற்கு தேவையான தொழில்நுட்பங்களை வளர்ப்பதில் விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பது ஒரு நிலையான உணவு ஆதாரமாக இருக்கும்.

விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களில் ஆக்ஸிஜன் மற்றும் நீரை மறுசுழற்சி செய்வதற்காகவும் அங்கே தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன.

சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி, தாவரங்கள்

பட மூலாதாரம்,NASA

தாவரங்கள் எவ்வாறு வளர்க்கப்படுகின்றன?

ஒரு தாவரம் வளர, சூரிய ஒளி, நீர், ஆக்ஸிஜன், மண் ஆகியன தேவைப்படுகின்றன. அதை விட முக்கியமாக புவியீர்ப்பு விசை தேவைப்படும். இந்த புவியீர்ப்பு விசைதான் வேர்களை கீழ்நோக்கி வளரச் செய்கிறது. இது தாவரங்கள் மண்ணில் உறுதியாக நிற்க உதவுகிறது. நிலத்திற்கு அடியில் இருந்து உறிஞ்சப்படும் நீர் மற்றும் பிற ஊட்டச்சத்துகள் தாவரத்தின் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில், தாவரங்கள் எவ்வாறு வளர்க்கப்படுகின்றன?

நாசாவின் முயற்சிகள்

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பதில் முன்னோடியாக உள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) பல்வேறு பிரத்யேக ஆய்வுகளை நாசா செய்துள்ளது. அதன் மூலம், விண்வெளியில் பல்வேறு வகையான தாவரங்களை நாசா வெற்றிகரமாக வளர்த்துள்ளது.

இந்த ஆராய்ச்சியின் முதல்படியாக, நாசா 2015 ஆம் ஆண்டு விண்வெளியில் எந்தெந்த மாதிரியான தாவரங்களை வளர்க்க முடியும் என்று சோதனை செய்ய தொடங்கியது. அமெரிக்காவின் ஃபேர்சைல்ட் தாவரவியல் பூங்காவுடன் இணைந்து 'கிரோயிங்க் பியாண்ட் எர்த்' என்ற திட்டத்தை நாசா தொடங்கியது.

இந்த திட்டத்தின் கீழ், விண்வெளி நிலையத்தில் உள்ளதைப் போன்ற ஒரு சூழலில் வெவ்வேறு தாவரங்களின் விதைகளை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

புவி ஈர்ப்பு இல்லாத சூழலில் தோட்டங்களை அமைக்கவும் நாசா சோதனை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 'வெஜ்ஜி' என்று அழைக்கப்படும் காய்கறி உற்பத்தி அமைப்பு, விண்வெளியில் தாவரங்களை வளர்க்க உதவும் ஓர் அறையாகும்.

பூமியில் ஒரு தோட்டத்தைப் போலவே இங்கும் தாவரங்கள் விதையில் இருந்து தலையணை போன்ற ஒரு சிறிய அமைப்பில் வளர்க்கப்படுகின்றன. இந்த அமைப்பில் தாவரங்கள் வளர தேவையான மண் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருக்கும். இதற்கு தேவையான தண்ணீர் மட்டும் பரமரிப்பாளர்களால் ஊற்றப்படும். இந்த அமைப்பின் மூலம் , கீரை, தக்காளி உள்ளிட்ட பல வகை பயிர்களை நாசா வெற்றிகரமாக வளர்த்துள்ளது.

சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி, தாவரங்கள்

பட மூலாதாரம்,NASA

வெஜ்ஜி திட்டத்துடன் இணைந்த எக்ஸ்-ரூட்ஸ் என்ற திட்டத்தின் மூலம் தாவரங்கள் வளர தேவையான மண் மற்றும் பிற காரணிகள் இல்லாமல் ஹைட்ரோபோனிக்ஸ் (Hydroponics) அல்லது ஏரோபோனிக்ஸ் (Aeroponics) முறைப்படி விண்வெளியில் தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன.

ஹைட்ரோபோனிக்ஸ் முறைப்படி, தாவரங்கள் மண்ணில் இல்லாமல், நீர் மற்றும் ஊட்டச்சத்து கரைசலில் வளர்க்கப்படுகின்றன. ஏரோபோனிக்ஸ் முறையில், தாவரங்களின் வேர்கள் காற்றில் தொங்கவிடப்பட்டு, நீர் மற்றும் ஊட்டச்சத்துகள் தெளிக்கப்படுகின்றன.

மேம்பட்ட தாவர வாழ்விடம் எனப்படும் Advanced Plant Habitat என்ற மற்றொரு திட்டத்தின் மூலமாகவும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தாவரங்களை நாசா வளர்த்து வருகிறது. இந்த அமைப்பில், தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து சூழல்களும் சென்சார் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன.

வெப்பநிலை, ஈரப்பதம், ஒளி, கார்பன் டை ஆக்சைடு மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகள் போன்ற தாவர வளர்ச்சிக்கு தேவையான உகந்த சூழல் இந்த அமைப்பில் உருவாக்கப்படுகிறது. LED விளக்குகள், நீர்ப்பாசன அமைப்பு போன்ற வசதிகள் கொண்ட இந்த அமைப்பில் குறைந்த அளவிலான பராமரிப்பே தேவைப்படும். விண்வெளி வீரர்கள் இதற்கென அதிக உழைப்பையும், நேரத்தையும் செலவிட வேண்டியதில்லை. இந்த அமைப்பின் மூலம் சிலி பெப்பர்ஸ் எனப்படும் குடை மிளகாயையும், முள்ளங்கியையும், சில பூக்களையும் நாசா விளைவித்துள்ளது.

இந்தியாவின் பங்கு

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) இந்த ஆண்டின் தொடக்கத்தில் PSLV-C60 POEM-4 என்ற ராக்கெட்டில் "CROPS" எனப்படும் Compact Research Module for Orbital Plant Studies எனப்படும் விண்வெளியில் தாவரங்கள் வளர்ப்பது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டது.

இந்த சோதனைக்காக, தாவரங்கள் வளர உகந்த சூழலில் 8 காராமணி விதைகள் முளைப்பதற்காக வைக்கப்பட்டிருந்தன. நான்காவது நாளில், இந்த விதைகள் முளைப்பது காணப்பட்டது. ஐந்தாவது நாளில், முளைத்த விதைகளில் இரண்டு இலைகள் தெரிந்தது. இதுவே இஸ்ரோவின் வெற்றியாக கருதப்பட்டது.

விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பதற்கான தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதிலும், புதிய பயிர் வகைகளை உருவாக்குவதிலும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ESA) மற்றும் மற்ற நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகளும் முயற்சி செய்து வருவதாக இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குநர் பாண்டியன் கூறுகிறார்.

சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி, தாவரங்கள்

பட மூலாதாரம்,ISRO

படக்குறிப்பு,இஸ்ரோவின் CROPS திட்டத்தில் விண்வெளியில் முளைத்த காராமணி பயிர்கள்

பூமியை விட விண்வெளியில் தாவரங்கள் வேகமாக வளர்வது ஏன்?

"விண்வெளி வீரர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து மிக்க ஃபிரெஷ் உணவுகளை இதன் மூலம் வழங்க முடியும். விண்வெளி வீரர்கள் சுவாசிப்பதற்கான ஆக்சிஜனை உற்பத்தி செய்ய இந்த தாவரங்கள் உதவும். இவை குறைவான அளவே இருந்தாலும் இயற்கையான முறையில் இருப்பதால் அவர்களின் உடல்நலனுக்கு நன்மை மற்றும் ஊட்டச்சத்து கிடைக்கும்", என்கிறார் பாண்டியன்.

விண்வெளியில் தாவரங்களை விரைவாக விளைவிக்க முடியும் என்று தெரிவிக்கிறார் அவர்.

"உதாரணமாக பூமியில் பயிரிடும் போது, தாவரங்களுக்கு வைக்கப்படும் உரம் மழை போன்ற காரணிகளால் அடித்து செல்லப்படலாம் அல்லது தாவரங்கள் அதனை உறிஞ்ச நீண்ட நேரம் எடுக்கலாம். ஆனால் விண்வெளியில் தாவரங்களை வளர்க்க உதவும் திட்டங்களின் மூலம், தாவரங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் நேரடியாக செலுத்தப்படுகின்றன. இதனால் தாவரங்கள் அவற்றை வேகமாக உறிஞ்சி இயல்பைவிட விரைவாகவே அவை வளர்கின்றன", என்று விளக்கினார் பாண்டியன்.

இந்த திட்டங்கள் மூலம் பூமியில் உள்ள விவசாய முறைகளை மேம்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். Spin-off technology முறையில் விண்வெளியில் தாவரங்களை வளர்க்க உதவும் புதுவித முயற்சிகளை பூமியில் செய்யப்படும் விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியும். இதன் மூலம் விவசாயத்தை மேம்படுத்தலாம் மற்றும் விளைச்சலை பெருக்கலாம் என்றும் பாண்டியன் கூறினார்.

Spin-off technology என்பது குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக வகுக்கப்பட்ட ஒரு திட்டம், பின்னர் மற்ற துறைகளிலும் பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பமாகும். உதாரணமாக நாசாவால் விண்வெளி வீரர்களின் இருக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட "மெமரி ஃபோம்" (Memory Foam) தொழில்நுட்பம், இன்று மெத்தைகள் மற்றும் தலையணை தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி, தாவரங்கள்

பட மூலாதாரம்,NASA

"எப்போதும் இயந்திரங்களைச் சுற்றியே இருக்கும் விண்வெளி வீரர்களுக்கு, ஆராய்ச்சி செய்வதைத் தவிர இந்த தாவரங்களை பராமரிப்பது மனதை அமைதிப்படுத்த உதவும். விண்வெளி வீரர்களின் பணிச் சுமை, மற்றும் தனிமை உணர்வை குறைத்து அவர்கள் மகிழ்ச்சியடைய இது ஒரு காரணியாக இருக்கும்" என்று உளவியல் ரீதியாகவும் விண்வெளி வீரர்களுக்கு இது பலன் தருவதாக கூறுகிறார் பாண்டியன்.

தற்போது வெறும் சோதனைக்காக சிறிய அளவிலே விண்வெளியில் தாவரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

"இந்த திட்டங்கள் இன்னும் முழு வீச்சில் செயல்படுத்தப்படவில்லை. அவ்வாறு முழு வீச்சில் இது நடந்தால் விண்வெளிக்கு செல்லும் போது, அதிக அளவிலான உணவு பொருட்களை எடுத்துச் செல்வதை குறைக்க முடியும். மனிதர்கள் விண்வெளியிலும், மற்ற கோள்களிலும் வாழ்வதற்குத் தேவையான தொழில்நுட்பங்களை முழுமையாக சோதனை செய்து செயல்படுத்த முடியும்", என்று பாண்டியன் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c0jg3zl6zx6o

ஹிட்லர் படையின் ராக்கெட் தொழில்நுட்பம் மூலம் அமெரிக்கா நிலவில் கால் பதிக்க வித்திட்ட விஞ்ஞானி

2 weeks ago

வார்னர் வான் ப்ரான், அமெரிக்கா, ஜெர்மனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சாரதா வி

  • பதவி, பிபிசி தமிழ்

  • 22 மார்ச் 2025, 01:31 GMT

    புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்

ஹிட்லரின் ராணுவத்திற்கு ராக்கெட் செய்து கொடுத்த விஞ்ஞானிதான், நிலவில் கால் பதித்த அமெரிக்காவின் சாதனைக்கு பின்னால் இருந்தவர்.

அவரின் பெயர் வார்னர் வான் ப்ரான். ஹிட்லரின் ஜெர்மனியில், ராக்கெட் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்தவராக இருந்த அவரின் ஆராய்ச்சியில்தான் வி2 என்ற ஏவுகணை உருவானது. இந்த ஏவுகணையை பயன்படுத்திய ஹிட்லரின் படை, இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கர்களையும் சோவியத் படைகளையும் கதி கலங்க செய்தது.

இந்த விஞ்ஞானி போருக்கு பின் அமெரிக்காவில் தஞ்சமடைந்தார். அவரின் வாழ்க்கை பல வியத்தகு சாதனைகளை உள்ளடக்கியது.

வார்னர் வான் ப்ரான், மனித குலம் ஒரு நாள் நட்சத்திரங்களை அடையும் என்று உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால், நடைமுறையில் அவர் போருக்கான ராக்கெட் தயாரிக்க தொழில்நுட்பம் வகுத்துக் கொடுத்தார். நாஜி ஜெர்மனியிலிருந்து நாசா வரையிலான அவரது வாழ்க்கைப் பயணம் இலக்கும், அறநெறியும், புவிசார் அரசியலும் சந்திக்கும் முரண்பாட்டின் வெளிப்பாடாகும்.

நாஜி பொறியாளர்

ஜெர்மனியின் விர்சிட்ஸ் நகரில் 1912 ஆம் ஆண்டு பிறந்த வான் ப்ரானுக்கு விண்வெளி மீதான ஆர்வம் சிறு வயதிலிருந்தே தொடங்கியது.

"ஒரு புத்திசாலி இளைஞராக இருந்த அவர் கவனம் சிதறியதால் கணிதத்திலும், இயற்பியலிலும் தோல்வியடைந்தார். அதனால் உறைவிடப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். தனது பதின்ம வயதுகளில் விண்வெளி ராக்கெட்டுகள் குறித்து கனவு காண தொடங்கினார். 22 வயதில் இயந்திரவியல், வானூர்தி பொறியியலில் பட்டங்களையும், இயற்பியலில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். ஜெர்மனியில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வருவதற்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அந்த நாட்டின் ராணுவத்தின் ராக்கெட் திட்டத்தின் சிவிலியன் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். 25 வயதில் அவர் பால்டிக் கடற்கரையில் உள்ள பீனெமுண்டே ராக்கெட் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தளத்தின் சிவிலியன் தொழில்நுட்ப இயக்குனராக இருந்தார்" என்று ப்ரானின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதிய பாப் வார்ட் குறிப்பிடுகிறார்.

1928-ல், அவர் ஜெர்மனியின் விண்வெளி பயண சமூகத்தில் இணைந்தார். விரைவில் ஜெர்மன் ராணுவத்தில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். இரண்டாம் உலகப்போரில் பல நாடுகளை மிரட்டிய வி2 என்ற ஏவுகணையை இவரே உருவாக்கினார். இந்த வி2 ஏவுகணை உலகின் முதல் நீண்ட தூர வழிகாட்டப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். வி2 என்றால் அது 'vergeltungswaffen' (பழிவாங்கும் ஆயுதம்) என்ற பொருள் ஆகும்.

வார்னர் வான் ப்ரான், அமெரிக்கா, ஜெர்மனி

பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY

படக்குறிப்பு,வி2 ஏவுகணை உலகின் முதல் நீண்ட தூர வழிகாட்டப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும்.

V2 ராக்கெட் தொழில்நுட்பம்

இரண்டாம் உலகப் போரில் லண்டன், அண்ட்வெர்ப், பாரிஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை தாக்குவதற்கு, V2 ராக்கெட்டை நாஜி ஜெர்மனி பயன்படுத்தியது.

ஒவ்வொரு V2 ராக்கெட்டும் 14 மீட்டர் உயரம் கொண்டது ஆகும். அவை கிட்டத்தட்ட ஒரு டன் வெடிபொருள்களை சுமந்து சென்றன. 1944-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி லண்டன் மீது முதல் தாக்குதல் நடத்தப்பட்டதில் 10 மீட்டர் பரப்பளவில் ஒரு பள்ளத்தை ஏற்படுத்தி மூன்று பேரை கொன்று 22 பேரை அது காயப்படுத்தியது.

இவை ஹிட்லரின் வதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டன.

V2 ராக்கெட் திரவ எத்தனால் மற்றும் ஆக்சிஜனால் உந்தப்படும். சுமார் 190 கி.மீ எறிபாதையில், பூமிக்கு மேலே 80 கி.மீ உயரத்தில் செல்லக் கூடிய V2 , உலகின் முதல் நீண்ட தூர பாலிஸ்டிக் ராக்கெட் ஆகும். அதுவரை உலகம் இதைப் போன்று வேறு எதையும் பார்த்ததில்லை.

வார்னர் வான் ப்ரான், அமெரிக்கா, ஜெர்மனி

பட மூலாதாரம்,SPL

'ஆபரேஷன் பேப்பர்கிளிப்'

இரண்டாம் உலகப் போரின் முடிவில், V2 தொழில்நுட்பத்தை வசப்படுத்த அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகள் போட்டி போட்டன.

1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி தோல்வியை தழுவியது. அதன் பின்னர் ப்ரான் அமெரிக்காவிடம் சரணடைந்தார்.

" ஸ்டாலினுக்கு வேலை செய்ய விருப்பம் கொள்ளாத வான் ப்ரான் அமெரிக்கர்களிடம் சரணடைவது என்ற முடிவை எடுத்தார். அதேநேரம், ரஷ்யர்கள் V2 தொழிற்சாலையை கைப்பற்றினர்" என்று பிபிசியின் செய்தியாளர் ரிச்சர்ட் ஹாலிங்மன் தெரிவிக்கிறார்.

சோவியத்துக்கு எதிராக நாஜி விஞ்ஞானிகளின் திறனை பயன்படுத்தும் அமெரிக்காவின் 'ஆப்பரேஷன் பேபர்கிளிப்' திட்டத்தில் வான் ப்ரானுடன் சேர்ந்து 125 நாஜி விஞ்ஞானிகள் அமெரிக்காவிடம் சரணடைந்தனர்.

நாசா விஞ்ஞானியாக

அமெரிக்காவில் ப்ரானுக்கு வாய்ப்புகள் ஏராளமாக இருந்தன. அவரது குழு அமெரிக்காவின் முதல் பாலிஸ்டிக் ஏவுகணையான ரெட்ஸ்டோனை உருவாக்கியது. இந்த ஏவுகணை ஒரு அணு ஆயுதத்தை 250 மைல்கள் வரை வீசக்கூடியது ஆகும். ரெட்ஸ்டோனின் மாற்றியமைக்கப்பட்ட புதிய பதிப்பான ஜூபிடர்-சி, 1958 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் முதல் செயற்கைக்கோளான எக்ஸ்ப்ளோரர் 1-ஐ விண்ணில் ஏவியது.

அவர் 1960-ல் நாசாவில் மார்ஷல் விண்வெளி பயண மையத்தின் இயக்குநராக பொறுப்பேற்றார். அங்கே, அமெரிக்காவின் விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு உந்திச் சென்ற சாட்டர்ன் V (Saturn V) ராக்கெட் அவரது தலைமையில் உருவாக்கப்பட்டது.

1950 களில் வால்ட் டிஸ்னியுடன் இணைந்து விண்வெளிப் பயணத்தை பிரபலப்படுத்திய Man in Space (விண்வெளியில் மனிதன்) என்ற தொலைக்காட்சி தொடரில் பணியாற்றினார். "மனிதன் எங்கு செல்ல விரும்புகிறானோ அங்கெல்லாம் அவன் சொந்தமாகிறான்" என்று ப்ரான் கூறுவார். பனிப்போர் கால விண்வெளிப் போட்டியின் போது அவரது இந்த நம்பிக்கை அமெரிக்காவை உற்சாகப்படுத்தியது.

1969-ல் அமெரிக்காவின் அப்பல்லோ 11 நிலவில் தரையிறங்கியது. இந்த நிகழ்வு வரலாற்றின் மிகச் சிறந்த ராக்கெட் பொறியாளர்களில் ஒருவராக ப்ரானை நிலை நிறுத்தியது. அப்போதும் அவரது கடந்த காலம் குறித்த கேள்விகள் நீடித்தன. "இயற்கை அழிவை அறியவில்லை; அதற்குத் தெரிந்ததெல்லாம் உருமாற்றம்" என்று கூறிய ப்ரான் இந்த சந்தேகங்களை மறைமுகமாக ஒப்புக் கொண்டார் என்றே கூறலாம்.

வார்னர் வான் ப்ரான், அமெரிக்கா, ஜெர்மனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த காலம் அவரை விடவில்லை

ப்ரான் ஆராய்ச்சியில் உருவான V-2 பொறியியல் அதிசயமாக இருந்தது, ஆனால் ஒரு இருண்ட வரலாற்றையே கொண்டிருந்தது. வதை முகாம்களில் இருந்து கட்டாய உழைப்பைப் பயன்படுத்திக் கொண்டு மிட்டல்வெர்க் ஆலையில் தயாரிக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம் - முன்னேற்றத்தையும், மனிதத் துயரத்தையும் ஒருசேர அடையாளப்படுத்தியது.

"வான் ப்ரான் இந்த கொடூரங்களை அரிதாகவே எதிர்த்தார்" என்று குறிப்பிடுகிறார் வான் ப்ரான்: ட்ரீமர் ஆஃப் ஸ்பேஸ், இன்ஜினியர் ஆஃப் வார் என்ற புத்தகத்தின் ஆசிரியரான மைக்கேல் நியூஃபெல்ட்.

அவர் நிலவுக்கு அப்பால் செல்வதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த 1964ஆம் ஆண்டில், அவர் சமர்ப்பித்த மாநாட்டு அறிக்கை ஒன்று என்னிடம் உள்ளது. இந்த அறிக்கையில் அவர் நிலவில் மனிதனை தரையிறக்குவதற்கான ஜெமினி திட்டத்திற்கு முன்பே, அவர் தனது சகாக்களிடம் செவ்வாய்க்கு பயணம் செய்வதற்கான திட்டமிடலை தொடங்க வேண்டும் என கூறியதை உள்ளடக்கியிருந்தது," என்று, மார்ஷல் விண்வெளி மையத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப வல்லுனரான ஜான்சன் குறிப்பிடுகிறார்.

"இன்று நாம் செய்யும் முயற்சிகளுடன் ஒப்பிடும் போது, 1964ஆம் ஆண்டிலேயே இன்று நாம் தீர்க்க முயற்சிக்கும் பல பிரச்னைகளை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்" என்று அவர் கூறினார்.

வரலாற்று ஆசிரியரும், வான் ப்ரான் குறித்து நூல்கள் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ள மைக்கேல் நியூஃபெல்ட், "வான் ப்ரான் முழுவதுமாக வில்லனும் இல்லை, முழுவதுமாக ஹீரோவும் இல்லை. அவர் லட்சியமும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட மனிதர்" என தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5yx4xz8jllo

ரஷ்யாவின் சோயுஸ் 3 மணிநேரத்தில் பூமி திரும்பும்போது டிராகன் விண்கலனுக்கு 17 மணிநேரம் ஆனது ஏன்?

2 weeks 2 days ago

ரஷ்யாவின் சோயுஸ் 3 மணிநேரத்தில் பூமி திரும்பும்போது டிராகன் விண்கலனுக்கு 17 மணிநேரம் ஆனது ஏன்?

பட மூலாதாரம்,NASA

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சாரதா வி

  • பதவி, பிபிசி தமிழ்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதங்களைக் கழித்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் இந்திய நேரப்படி செவ்வாய்கிழமை காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு பூமி வந்தடைந்தனர்.

அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ்-இன் டிராகன் விண்கலத்தில் மொத்தம் 17 மணிநேரம் அவர்கள் பயணம் செய்துள்ளனர்.

ஆனால், ரஷ்யாவின் 'சோயுஸ்' விண்கலனால், அதே சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்வெளி வீரர்களை ஏற்றிக் கொண்டு மூன்று மணிநேரத்தில் பூமிக்கு வந்தடைய முடியும்.

ஒரே இடத்திலிருந்து புறப்படும் இரண்டு விண்கலன்களுக்கு இடையே பயண நேரத்தில் ஏன் 14 மணி நேர வித்தியாசம் உள்ளது?

விண்கலன் பூமிக்குத் திரும்பும் நேரத்தை எவை தீர்மானிக்கின்றன?

விண்வெளிப் பயணங்கள் இயற்பியல் விதிகளை அடிப்படையாகக் கொண்டவை. விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பும்போது, விண்கலன்கள் விண்வெளியில் இருந்து நேரடியாகக் கீழே இறங்கி விடுவதில்லை.

அவர்கள் மெதுவாக வர வேண்டும், பத்திரமாகத் தரையிறங்க வேண்டும். இதற்குத் தேவையான நேரம் என்பது விண்கலத்தின் வடிவம், தரையிறங்கப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைப் பொருத்து அமையும்.

டிராகன் மற்றும் சோயுஸ் விண்கலன்கள் இருவேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியேறுவது முதல் தரையிறங்குவதை வரை வெவ்வேறு கால அவகாசங்களை இரு விண்கலன்களும் கொண்டுள்ளன.

சோயுஸ் விண்கலன் எந்தக் கோணத்தில் பூமிக்கு திரும்பும்?

ரஷ்யாவின் சோயுஸ் 3 மணிநேரத்தில் பூமி திரும்பும்போது டிராகன் விண்கலனுக்கு 17 மணிநேரம் ஆனது ஏன்?

பட மூலாதாரம்,NASA

ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் 1960களில் வடிவமைக்கப்பட்டது. விண்வெளி வீரர்களை விரைவாக பூமிக்குக் கொண்டு வரும் சிறிய கடினமான விண்கலன் வடிவத்தைக் கொண்டது. இதில் அதிகபட்சமாக ஒரு நேரத்தில் மூன்று பேர் மட்டுமே பயணம் செய்யலாம்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட பிறகு, அந்த விண்கலன் செங்குத்தான பாதையில் பூமியை நோக்கிப் பயணிக்கும். அதன் மூலம், மூன்றே மணிநேரத்தில் விண்வெளி வீரர்களை பூமியில் தரையிறக்கிவிடும்.

"கஜகஸ்தானில் உள்ள புல்வெளிப் பரப்பில் தரையிறங்குவது மிகவும் விரைவாக மூன்றரை மணிநேரத்துக்கு உள்ளாக நடைபெறும் நிகழ்வு," என்று ஐரோப்பிய விண்வெளி மையம் சோயுஸ் விண்கலன் குறித்துக் கூறுகிறது.

சோயுஸ் விண்கலனில் உள்ள மூன்று பகுதிகளில் இரண்டு பகுதிகள் பூமிக்குள் நுழையும்போது எரிந்துவிடும். ஒரு பகுதி மட்டுமே தரையிறங்கும். தரையிறங்குவதற்கு 15 நிமிடங்கள் முன்பாக நான்கு பாராசூட்கள் விரியும்.

முதலில் இரண்டு பாராசூட்கள் விரியும். பிறகு பெரிதாக உள்ள மூன்றாவது பாராசூட் விரியும். இதன் மூலம் விண்கலனின் வேகம் நொடிக்கு 230 மீட்டர் என்பதில் இருந்து நொடிக்கு 80 மீட்டர் என்று குறையும்.

கடைசியாக நான்காவது பாராசூட் விரியும். இது மூன்றாவது பாராசூட்டைவிட 40 மடங்கு பெரியது. விண்கலன் நேராகத் தரையிறங்கும் வகையில் அதன் சாய்வு சரி செய்யப்படும். மேலும் விண்கலனின் வேகம் நொடிக்கு 7.3 மீட்டராகக் குறைக்கப்படும்.

இருப்பினும், இதுவும் தரையிறங்கப் பாதுகாப்பற்ற அதிக வேகம்தான். அதைக் குறைப்பதற்காக, தரையிறங்குவதற்கு ஒரு நொடி முன்பாக, விண்கலனின் அடிப்பகுதியில் இரண்டு இயந்திரங்கள் எரியத் தொடங்கும். இவை விண்கலனின் வேகத்தை மேலும் குறைக்கும்.

சோயுஸ் விண்கலன் தரையிறங்கும்போது என்ன ஆகும்?

ரஷ்யாவின் சோயுஸ் 3 மணிநேரத்தில் பூமி திரும்பும்போது டிராகன் விண்கலனுக்கு 17 மணிநேரம் ஆனது ஏன்?

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு, சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் பூமிக்குத் திரும்பிய டிராகன் விண்கலன் கடலில் இறங்கிய காட்சி

சோயுஸ் தனது இயந்திரங்களை எரியூட்டி வேகத்தைக் குறைத்து, பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகுகிறது. பிறகு பூமியின் வளிமண்டலத்துக்குள் செங்குத்தான கோணத்தில் நுழையும்.

செங்குத்தாக உள்ளே நுழையும்போது, காற்றின் எதிர்ப்புவிசை காரணமாக அதிவேகமாக வந்து கொண்டிருக்கும் விண்கலனின் வேகம் குறைக்கப்படும்.

இந்தச் செயல் அதிக வெப்பம் மற்றும் விசைகளை விண்கலத்தின் மீது உருவாக்கும். இந்த வெப்பத்திலிருந்து விண்வெளி வீரர்களைப் பாதுகாக்க வெப்பப் பாதுகாப்பான் உதவும். ஆனால் அந்தப் பாதுகாப்பான்கள் ஈர்ப்பு விசையைவிடப் பல மடங்கு வலுவான சக்தியை எதிர்கொள்ளும்.

வளிமண்டலம், விண்கலனின் வேகத்தைக் குறைத்த பிறகு, சோயுஸ் தனது பாராசூட்களை விரிக்கத் தொடங்கும். இது விண்கலனின் வேகத்தை மேலும் குறைக்கும். சோயுஸ் விண்கலனைப் பொறுத்தவரை, அதன் சாதகமான அம்சம் அதன் வேகம். விண்வெளி கதிர்வீச்சு மற்றும் குறைந்த ஈர்ப்பு விசையின் தாக்கத்தை விண்வெளி வீரர்கள் குறைவான நேரமே அனுபவிக்க வேண்டியிருக்கும். ஆனால், அதன் தரையிறக்கம் மிகக் கடுமையாக இருக்கும்.

ரஷ்யாவின் சோயுஸ் 3 மணிநேரத்தில் பூமி திரும்பும்போது டிராகன் விண்கலனுக்கு 17 மணிநேரம் ஆனது ஏன்?

பட மூலாதாரம்,EUROPEAN SPACE AGENCY

படக்குறிப்பு, சோயுஸ் விண்கலன் தரையிறங்கும் நிகழ்வு

டிராகன் விண்கலன் எந்தக் கோணத்தில் பூமிக்கு திரும்பும்?

ஏழு பேரை ஏற்றிச் செல்லும் வகையிலான டிராகன் விண்கலம் தரையிறங்குவதில் வேறு மாதிரியான அணுகுமுறையைக் கொண்டுள்ளது. பூமிக்குத் திரும்பும்போது வேகமான, செங்குத்தான பயணத்திற்குப் பதிலாக, மெதுவாக, படிப்படியான பயணத்தை அது மேற்கொள்கிறது.

பாதுகாப்பு மற்றும் வசதியை முன்னிலைப்படுத்தி, பூமிக்குத் திரும்பும் பயணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிராகன் விண்கலன் தனது சுற்றுவட்டப் பாதையைச் சரி செய்ய மட்டுமே பல மணிநேரம் எடுத்துக் கொள்ளும். டிராகன் விண்கலனில் உள்ள 16 டிராகோ த்ரஸ்டர்கள் எனும் இயந்திரங்கள் இதைச் செய்யும். இதனால் திட்டத்தைக் கட்டுப்படுத்துவோர் தரையிறங்குதலின்போது சீரான நிலைமைகள் இருப்பதை உறுதிசெய்ய உதவுகிறது.

சோயுஸ் விண்கலன் போலன்றி, டிராகன் விண்கலன் பூமியின் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழையும்போது சாய்வான கோணத்தில் இருக்கும். இதனால், வளிமண்டலத்தை எதிர்கொள்ளும்போது உருவாகும் வெப்பம் பரவலாகவும், நீண்ட நேரமும் கிடைக்கும். இதன் மூலம் விண்வெளி வீரர்கள் மீதான தாக்கம் குறைவாக இருக்கும். அதோடு, விண்கலன் தனது வேகத்தை மெதுவாகக் குறைத்துக் கொள்ளும்.

வளிமண்டலத்திற்குள் நுழைந்த பிறகு விண்கலனை நிலையாக வைத்துக் கொள்ள இரண்டு பெரிய பாராசூட்கள் உள்ளன. இது தவிர, தரையிறங்குவதற்கு முன்பாக விண்கலனின் வேகத்தைக் குறைக்க நான்கு பாராசூட்கள் உள்ளன.

தரையிறங்குதல் உத்தியில் உள்ள வேறுபாடுகள் என்ன?

ரஷ்யாவின் சோயுஸ் 3 மணிநேரத்தில் பூமி திரும்பும்போது டிராகன் விண்கலனுக்கு 17 மணிநேரம் ஆனது ஏன்?

பட மூலாதாரம்,NASA

சோயுஸ் விண்கலன் நிலபரப்பில் தரையிறங்கும், ஆனால் ட்ராகன் கடல் மீது தரையிறங்கும். சோயுஸ் வழக்கமாக ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள கஜகஸ்தான் நாட்டின் பரந்த புல்வெளிகளில் தரையிறங்கும்.

டிராகன், கடலின் நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்திற்கு அருகிலுள்ள கடல் பரப்பில் தரையிறங்கும்.

நிலத்தில் அல்லாமல் நீரில் தரையிறங்குவதற்கு அதிக ஏற்பாடுகள் தேவைப்படும். கடலில் இருந்து விண்கலனையும் விண்வெளி வீரர்களையும் மீட்பதற்கு நிறைய ஏற்பாடுகள் தேவை.

தண்ணீரில் விண்கலன் எங்கு தரையிறங்கும் என்று கணிக்கப்படுகிறதோ அதற்கு அருகில் படகுகளில் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

அவர்கள் விண்கலனுக்கு அருகில் வந்து, விண்கலன் மீது ஏதேனும் நச்சுக் கதிர்கள் இருக்கின்றனவா என்று சோதனை செய்ய வேண்டும். பிறகு விண்கலனை அருகிலுள்ள மீட்புத் தளத்திற்குக் கொண்டு சென்று, அங்கு வைத்து விண்வெளி வீரர்களை வெளியே கொண்டுவர வேண்டும். தரையிறங்கும் இடத்தின் மீது அதிக கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க முடியும் என்பதே இதன் சாதகமான அம்சம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cedl4635d19o

ஒளியை “சூப்பர்சொலிட்” ஆக மாற்றிய அதிசய கண்டுபிடிப்பு – இத்தாலிய விஞ்ஞானிகள் புரட்சிகர சாதனை..!

3 weeks ago

அண்மையில் இத்தாலிய விஞ்ஞானிகள் ஒளியை “சூப்பர்சொலிட்” (Supersolid) எனப்படும் அதிசயமான திண்ம நிலையாக மாற்றியுள்ளனர்…

இது குவாண்டம் இயற்பியலில் (Quantum Physics) ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது... இந்த கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் பல தொழில்நுட்ப புரட்சிகளுக்கு வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது... மேலும், இது ஒளியின் நடத்தை பற்றிய புதிய புரிதல்களை வழங்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்..

சரி இப்போ “சூப்பர்சொலிட்” என்றால் என்னவென்று பார்ப்போம்..

“சூப்பர்சொலிட்” என்பது ஒரு விநோதமான திண்ம நிலை… இது ஒரு பொருள் திண்மமாக (solid) இருக்கும் போதும், அதே நேரத்தில் திரவமாக (liquid) பாயும் தன்மை கொண்டிருக்கும்..

சூப்பர்சொலிடில் உள்ள அணுக்கள் (atoms) ஒழுங்காக (crystalline) ஒருங்கிணைந்து இருக்கும் போதிலும், அவை எந்த தடையுமின்றி (without friction) நகர முடியும்...

சூப்பர்சொலிட் தன்மை 1969 ஆம் ஆண்டு முதலில் முன்மொழியப்பட்டது... ஆனால், இதை ஆய்வகத்தில் உருவாக்கி, கண்கூடாக காண்பது கடினமானது...

இதை வெற்றிகரமாக உருவாக்கும் முயற்சியில்தான் இத்தாலிய விஞ்ஞானிகள் அண்மையில் வெற்றி கண்டுள்ளனர்… அதுவும் ஒளியை..

சாதாரணமாக, சூப்பர்சொலிட் நிலை, குறைந்த வெப்பநிலையிலான அணுக்கள் (ultracold atomic gases) மூலம் உருவாக்கப்பட்டன… ஆனால், இத்தாலிய விஞ்ஞானிகள் இதை ஒளி (light) மூலம் உருவாக்கியுள்ளனர் என்பது ஒரு புரட்சிகர கண்டுபிடிப்பு ஆகும்...

சரி இப்போ இவர்கள் எப்படி ஆய்வுகூட மட்டத்தில் இதைச் சாதித்தார்கள், அதுவும் தன்னைவிட இந்த பிரபஞ்சத்தின் உள்ளே யாரும் வேகமாக போகமுடியாது என்று அனைத்து விஞ்ஞானிகளுக்கும் ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கும் ஒளியை என்பதைப் பார்ப்போம்…

large.974F7EAA-698B-4E19-A50F-8BEA02ED4F74.jpeg

சூப்பர்சொலிட் உருவாக்கத்தில் பயன்படுத்திய உயர் துல்லிய படமெடுப்புக் கருவி(high resolution imaging system)

large.E0AD1E5B-9A6A-4D2A-B18F-9AB96A5BF3EB.jpeg

சூப்பர்சொலிட் தன்மை கொண்ட ஒளியின் ஒழுங்கமைப்பு…

large.0F2CA5A7-5601-414B-AA74-10DE5271917F.jpeg

விஞ்ஞானிகள் இது குறித்து ஆய்வு செய்யும் தருணம்…

விஞ்ஞானிகள் ஒளியை ஒரு சிறப்பான செமிகண்டக்டர் (semiconductor) கட்டமைப்பில் சிறப்பாக கட்டுப்படுத்தினர்…

ஒளியின் துகள்கள் (photons) ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்ளும் (interact) விதமாக அமைக்கப்பட்டது…

இதன் விளைவாக, ஒளி திண்மமாகவும் (solid-like) திரவமாகவும் (fluid-like) நடந்துகொள்ளும் நிலை உருவானது...

இவ்வாறு ஒளி “சூப்பர்சொலிட்” ஆக மாறியது... இதை முதன்முறையாக வெற்றிகரமாக உருவாக்கியுள்ள இத்தாலிய விஞ்ஞானிகள், இது எதிர்காலத்தில் குவாண்டம் இயற்பியலுக்கு (quantum physics) புதிய வாசல்கள் திறக்கும் என நம்புகின்றனர்...

இந்த கண்டுபிடிப்பு மூலம் கிடைக்கக்கூடிய பயன்கள்..👇

1. குவாண்டம் கணிப்பொறிகள் (Quantum Computing):

சூப்பர்சொலிட் ஒளி (supersolid light) புதிய வகை குவாண்டம் பிட்டுகள் (qubits) உருவாக்க உதவும்… இது மிகுந்த செயல்திறன் கொண்ட குவாண்டம் கணிப்பொறிகளை உருவாக்க வழிவகுக்கும்...

2. அளவீட்டு கருவிகள் (Precision Measurement):

சூப்பர்சொலிட் ஒளியின் தன்மை, மிகுந்த துல்லியத்துடன் (high precision) அளவீடுகளை மேற்கொள்ள உதவும்…இது அடிப்படை இயற்பியல் மாறிலிகளை (physical constants) கண்டறியவும், gravitational waves களை கண்டறியவும் உதவும்...

3. புதிய பொருட்கள் (Advanced Materials):

ஒளியை சூப்பர்சொலிட் நிலை வரை கட்டுப்படுத்தும் திறன், புதிய வகை பொருட்கள் (materials) உருவாக்க உதவும்… இது புதிய மெக்கானிக்கல் (mechanical) மற்றும் ஒளி (optical) பண்புகளைக் கொண்ட பொருட்களை உருவாக்க வழிவகுக்கும்...

இந்த கண்டுபிடிப்பின் எதிர்கால தாக்கம்..

இது குவாண்டம் கணிப்பொறிகள், தகவல் தொடர்பு, மற்றும் மருத்துவத் தொழில்நுட்பத்தில் (medical technology) புதிய புரட்சிகளை ஏற்படுத்தும்…

புதிய அளவீட்டு கருவிகள் மற்றும் அதிக செயல்திறனுள்ள தகவல் தொடர்பு முறைகளை உருவாக்கும்…

விஞ்ஞான உலகத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது…

ஆக மொத்தத்தில் அறிவியல் உலகில் ஒளியின் புதிய வடிவம் – இது ஒரு புதிய அதிசயம்..!

இத்தாலிய விஞ்ஞானிகள் சாதித்துள்ள இந்த கண்டுபிடிப்பு, எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது… இது ஒளி பற்றிய மனிதரின் புரிதலை முற்றிலும் மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை…!

-பாலபத்திரஓணாண்டி

விமானத்தை விட வேகமான 'ஹைப்பர்லூப்' எப்போது வரும்?

3 weeks 6 days ago

'வெறும் 30 நிமிடங்களில் சென்னை டூ பெங்களூரு' - விமானத்தை விட வேகமான 'ஹைப்பர்லூப்' எப்போது வரும்?

ஹைப்பர்லூப், ஐஐடி மெட்ராஸ், தொழில்நுட்பம், இந்திய ரயில்வே, ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்

  • எழுதியவர்,சிராஜ்

  • பதவி,பிபிசி தமிழ்

  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

'வான்வழி தவிர்த்து, சென்னையிலிருந்து- பெங்களூருக்கு 30 நிமிடத்தில் அல்லது சென்னையிலிருந்து மதுரைக்கு ஒரு மணிநேரத்தில் பயணிப்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?'

ஹைப்பர்லூப் எனும் தொழில்நுட்பத்தைக் குறித்து பேசும் போதெல்லாம், இத்தகைய உதாரணங்களே முன்வைக்கப்படும்.

ரயில் பயணத்திற்கு ஆகும் செலவை விட சற்று கூடுதலாக, அதேசமயம் விமானத்தை விட வேகமாக (சுமார் 1000 கிமீ வேகத்தில்) நிலத்தில் செல்லக்கூடிய ஒரு பயண அமைப்பாக ஹைப்பர்லூப் விவரிக்கப்படுகிறது.

ஹைப்பர்லூப் (Hyperloop) என்ற பெயரில் ஒரு தொழில்நுட்பத்தை 2013இல் முன்மொழிந்தார் ஈலோன் மஸ்க். இதுதொடர்பாக 'ஹைப்பர்லூப் ஆல்பா' என்ற பெயரில் ஒரு 58 பக்க ஆய்வறிக்கையையும் அவர் வெளியிட்டார்.

அவரது ஹைப்பர்லூப் திட்டத்தின் மூலம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலிருந்து சான் பிரான்சிஸ்கோ வரையிலான தூரத்தை (563 கிமீ) வெறும் 35 நிமிடங்களில் கடக்க முடியும் என்றும், இந்த திட்டத்திற்கு 6 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் (இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் 52,266 கோடிகள்) என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது.

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

உலகில் நடைமுறையில் இருக்கும் ரயில், சாலை, நீர்வழி மற்றும் வான்வழி போக்குவரத்தைக் காட்டிலும், இந்த ஹைப்பர்லூப் மூலம் அதிவேகமாகவும் குறைவான செலவிலும் மக்களையும் பொருட்களையும் கொண்டுசெல்ல முடியும் என்று மஸ்கின் ஆய்வறிக்கை கூறியது.

இந்த ஹைப்பர்லூப் ஒரு ஓபன்சோர்ஸ் தொழில்நுட்பம் என்றும், இதில் பங்களிக்க பலரும் முன்வரவேண்டும் என்றும் அப்போது ஈலோன் மஸ்க் வேண்டுகோள் விடுத்திருந்தார். 12 வருடங்கள் கழித்துப் பார்க்கும் போது, உலகின் மிகச் சில நிறுவனங்களே இந்த ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில் இதுவரை ஆர்வம் காட்டியுள்ளன. காரணம், இந்தத் திட்டத்தில் இருக்கும் சவால்கள்.

ஹைப்பர்லூப், ஐஐடி மெட்ராஸ், தொழில்நுட்பம், இந்திய ரயில்வே, ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம்,Boringcompany

ஹைப்பர்லூப் என்றால் என்ன?

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் நிதி உதவியோடு, 410 மீட்டர் தொலைவுக்கு ஒரு ஹைப்பர்லூப் சோதனைப் பாதையை நிறுவியுள்ளது, ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனம். செங்கல்பட்டு மாவட்டத்தின் தையூர் எனும் கிராமத்தில் உள்ள ஐஐடி மெட்ராஸின் டிஸ்கவரி வளாகத்தில் இந்த பாதை நிறுவப்பட்டுள்ளது.

எஃகு குழாய்களைக் கொண்டு, முழுவதுமாக சீல் செய்யப்பட்ட ஒரு வலையமைப்பு உருவாக்கப்பட்டு, அதில் குறைந்த அழுத்தச் சூழலில் பாட்களை (Pods- பயணிகள் அமர்வதற்கான, ரயில் கோச்கள் போன்ற ஒரு வசதி) அதிவேகமாகச் செலுத்துவதே இதன் முக்கிய அம்சம்.

"ஹைப்பர்லூப் ஒரு நவீன போக்குவரத்து அமைப்பாகும், அங்கு அதிவேக பாட்கள், காற்றின் உராய்வு இல்லாத குறைந்த அழுத்த குழாய்கள் வழியாக பயணிக்கின்றன. அதாவது வெற்றிடச் சுரங்கப்பாதையில் (Vaccum tunnel), விமானத்தின் வேகத்தில் நகரும் ஒரு ரயில் போல" என்கிறார் ஐஐடி மெட்ராஸ் பேராசிரியரும் ஹைப்பர்லூப் குழுவுக்கான ஆலோசகருமான சத்ய சக்கரவர்த்தி.

"இதில் சக்கரங்களுக்கு பதிலாக, மேக்னடிக் லெவிட்டேஷன் (மாக்லேவ்- Maglev) எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாட்கள் மிதக்கின்றன. பின்னர் அவை மின்சாரத்தால் இயக்கப்படுகின்றன. இதனால் அதிவேகமாக, குறைந்த ஆற்றலுடன், குறைந்தபட்ச உராய்வு விசையுடன் ஹைப்பர்லூப்பை இயக்க முடியும்" என்றும் சத்ய சக்கரவர்த்தி கூறுகிறார்.

ஹைப்பர்லூப், ஐஐடி மெட்ராஸ், தொழில்நுட்பம், இந்திய ரயில்வே, ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம்,IIT-Madras

படக்குறிப்பு,இந்திய ரயில்வே அமைச்சகத்தின் நிதி உதவியோடு, ஐஐடி மெட்ராஸ் நிறுவியுள்ள 410 மீட்டர் ஹைப்பர்லூப் சோதனைப் பாதை

இந்த மேக்னடிக் லெவிட்டேஷன், அதாவது காந்த சக்தியைக் கொண்டு பாட்களை பாதையிலிருந்து சற்று மேலே மிதக்க வைத்து, பிறகு அதை அதிவேகமாக செலுத்தும் மாக்லேவ் தொழில்நுட்பம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான்.

உதாரணமாக சீனாவின் 'ஷாங்காய் மாக்லேவ்' ரயில், உலகின் 'அதிவேக ரயில் சேவைகளில்' ஒன்று. இது மணிக்கு 300 கிமீ வேகத்தை எட்டக்கூடியது.

ஆனால், ஹைப்பர்லூப் மூலம் மணிக்கு 1000 கிமீ என்ற வேகத்தைக் கூட எட்டமுடியும் என்கிறார் பேராசிரியர் சத்ய சக்கரவர்த்தி.

இருப்பினும், மாக்லேவ் ரயில்கள் மூலம் நூற்றுக்கணக்கான மக்கள் ஒரே சமயத்தில் பயணிக்க முடியும் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், "ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, அவை பொதுப் போக்குவரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டால், நிச்சயம் அதில் அதிகமான மக்கள் பயணிக்க முடியும்" என்கிறார்.

ஹைப்பர்லூப், ஐஐடி மெட்ராஸ், தொழில்நுட்பம், இந்திய ரயில்வே, ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சீனாவின் 'ஷாங்காய் மாக்லேவ்' ரயில்

ஹைப்பர்லூப் திட்டத்தில் இருக்கும் சவால்கள் என்ன?

நீண்ட தூரத்திற்கு சீல் செய்யப்பட்ட 'வெற்றிடக் குழாய் அமைப்பை' உருவாக்குவது அல்லது அதற்கான பிரத்யேக மாக்லேவ் பாதைகளை நிறுவுவது பொருளாதார ரீதியில் மிகவும் சவாலான ஒன்று.

"நகர அமைப்புகள் அல்லது இயற்கையை சீர்குலைக்காமல் ஹைப்பர்லூப்பிற்கு ஏற்ற நிலத்தைக் கண்டுபிடிப்பதும், கையகப்படுத்துவதும் எளிதல்ல. இதற்கு தீர்வு, ஏற்கனவே இருக்கும் நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகளுக்கு அருகிலேயே ஹைப்பர்லூப் பாதைகளை உருவாக்குவது தான்," என்கிறார் பேராசிரியர் சத்ய சக்கரவர்த்தி.

ஹைப்பர்லூப்பில் இருக்கும் மற்றொரு சவால், அதன் அதீத வேகத்தைக் கருத்தில் கொள்ளும்போது, பயணிகள் பாதுகாப்புக்கு என எவ்வித விதிமுறைகளும், மத்திய அல்லது மாநில அரசுகளால் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

"ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் நமக்கு மட்டுமல்ல உலகிற்கே புதிது. அது இன்னும் எங்கும் நடைமுறைக்கு வரவில்லை. இந்தியாவில் அப்படி வர தயாராக இருக்கும்போது, அதற்கு என புதிய விதிகளை அரசு கொண்டுவரும்" என்கிறார் அவர்.

ஹைப்பர்லூப், ஐஐடி மெட்ராஸ், தொழில்நுட்பம், இந்திய ரயில்வே, ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

பயணிகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகள்

ஹைப்பர்லூப் என்பது காற்றுப் புகாத, சீலிடப்பட்ட குழாய்கள் வழியாக அதிவேகத்தில் செல்லும் ஒரு போக்குவரத்து அமைப்பு எனும்போது, அவசர காலத்தில் பயணிகளின் பாதுகாப்பு குறித்த சந்தேகங்கள் எழுவது இயற்கையே.

"அதிக வேகத்தில் பாட் நகர்ந்தாலும், ஏதாவது தவறு கண்டறியப்பட்டால் அவற்றின் வேகம் படிப்படியாகக் குறைக்கப்படும். எனவே அது மோதுவதற்கான வாய்ப்புகள் கிடையாது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக குழாயின் உள்ளே அவசரகால வெளியேற்ற அமைப்புகளும் நிறுவப்படும்.

மேம்பட்ட கண்காணிப்பு அமைப்புகள் மூலம் சிக்கல்கள் கண்டறியப்பட்டு, அவை ஆபத்தாக மாறுவதற்கு முன்பே தீர்க்கப்படும்" என்கிறார் பேராசிரியர் சத்ய சக்கரவர்த்தி.

சீலிடப்பட்ட குழாய்கள் வழியாக செல்வதால், பெருமழை, வெள்ளம் போன்றவற்றால் ஹைப்பர்லூப் போக்குவரத்து பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவு என்று அவர் கூறுகிறார்.

"இங்கே 1000 கி.மீ வேகம் ஒருசில வினாடிகளில் எட்டப்படாது. உள்ளே பயணிப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு, படிப்படியாக அந்த வேகம் எட்டப்படும். அதேபோல நிறுத்தும் போது ஒரு குறிப்பிட்ட முறையில் வேகம் குறைக்கப்படும். இதனால் உள்ளே இருக்கும் பயணிகள் அதன் அதிர்வுகளை உணர மாட்டார்கள்" என்றும் அவர் கூறுகிறார்.

மற்றொரு முக்கியமான கேள்வி, ஹைப்பர்லூப் நடைமுறைக்கு வந்தால், அதில் பயணிப்பதற்கான கட்டணம் எவ்வளவு இருக்கும்? சாமானிய மக்களால் பயணிக்க முடியுமா?

"நிச்சயமாக முடியும். கட்டணம் குறித்த முடிவுகள் இதுவரை எடுக்கப்படவில்லை. ஆனால், ரயில் பயணத்திற்கு இணையான கட்டணத்தை நிர்ணயிப்பதே இலக்கு" என்கிறார் பேராசிரியர் சத்ய சக்கரவர்த்தி.

உலகில் இதற்கு முன் செய்யப்பட்ட ஹைப்பர்லூப் சோதனைகள்

ஹைப்பர்லூப், ஐஐடி மெட்ராஸ், தொழில்நுட்பம், இந்திய ரயில்வே, ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,வில்லியம் ஹீத் என்ற ஓவியரால், 1829இல் வரையப்பட்ட ஓவியம்

ஹைப்பர்லூப் என்ற பெயரில் ஒரு தொழில்நுட்பத்தை முதலில் முன்மொழிந்தவர் ஈலோன் மஸ்க் தான் என்றாலும், ஒரு குழாய் வழியாக மக்கள் பயணிப்பது என்ற யோசனை மிகவும் பழமையானது.

வில்லியம் ஹீத் என்ற ஓவியரால், 1829-இல் வரையப்பட்ட ஓவியம் ஒன்று, வங்கத்தில் இருந்து (இந்தியா பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்டிருந்த போது) லண்டனுக்கு ஹைப்பர்லூப் போன்ற ஒரு அமைப்பில் மக்கள் பயணம் செய்வதைச் சித்தரித்தது.

ஆனால் அது, எதிர்காலத்தில் இத்தகைய போக்குவரத்து அமைப்புகள் இருக்கலாம் என்ற யோசனையை பகடி செய்து, கற்பனையின் அடிப்படையில் வரையப்பட்ட ஒரு ஓவியமே.

2013இல் ஈலோன் மஸ்க் வெளியிட்ட 'ஹைப்பர்லூப் ஆல்பா' ஆய்வறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, அவரது 'தி போரிங் கம்பெனி' என்ற நிறுவனம் ஹைப்பர்லூப் சோதனையில் ஈடுபட்டது.

இதற்காக 2016இல், கலிபோர்னியாவில் அந்நிறுவனம் 1287 மீட்டருக்கு ஒரு சோதனை ட்ராக்கையும் வடிவமைத்தது. சில சோதனைகள் நடைபெற்று, ஹைப்பர்லூப் பாட்கள் மணிக்கு 463 கிமீ என்ற வேகத்தை எட்டின என்று அந்நிறுவனத்தின் இணையதளம் கூறுகிறது.

ஆனால், தற்போது வரை அதன் ஹைப்பர்லூப் நடைமுறைக்கு வரவில்லை. நகரங்களில் ஹைப்பர்லூப் அமைப்பை கொண்டுவருவதற்கான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அதன் இணையதளம் கூறுகிறது.

ஹைப்பர்லூப், ஐஐடி மெட்ராஸ், தொழில்நுட்பம், இந்திய ரயில்வே, ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம்,Virginhyperloop

படக்குறிப்பு,'ஹைப்பர்லூப் ஒன்' நிறுவனத்தின் ஹைப்பர்லூப் பாட் அதிகபட்சமாக மணிக்கு 172 கிமீ என்ற வேகத்தையே எட்டியது

இந்தியாவில் ஹைப்பர்லூப் எப்போது சாத்தியம்?

2020இல் 'ஹைப்பர்லூப் ஒன்' எனும் நிறுவனம் (2022 வரை விர்ஜின் ஹைப்பர்லூப் என்ற பெயரில் இயங்கியது), தனது இரு ஊழியர்களை பயணிகளாகக் கொண்டு, உலகின் முதல் ஹைப்பர்லூப் சோதனையை நடத்தியது. அமெரிக்காவின், நெவெடா பாலைவனத்தில் இதற்காக அமைக்கப்பட்ட பிரேத்யேக 500 மீட்டர் நீள பாதையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

அந்த சோதனையில் 'ஹைப்பர்லூப் ஒன்' நிறுவனத்தின் ஹைப்பர்லூப் பாட் அதிகபட்சமாக மணிக்கு 172 கிமீ என்ற வேகத்தையே எட்டியது. ஆனாலும், ஹைப்பர்லூப் போக்குவரத்து, உலகின் அதிவேக மாக்லேவ் ரயில்களை விட 10 மடங்கு அதிக செயல்திறன் கொண்டது என அந்த நிறுவனம் கூறியது.

அதன் பின்னர் 2022இல் பயணிகளுக்காக அல்லாமல், ஹைப்பர்லூப் மூலம் பொருட்களை (Cargo) கொண்டுசெல்வதில் மட்டும் கவனம் செலுத்தப்போவதாக அந்நிறுவனம் அறிவித்தது. பிறகு, 2023 டிசம்பரில் பல்வேறு காரணங்களுக்காக 'ஹைப்பர்லூப் ஒன்' நிறுவனம் மூடப்பட்டது.

ஹைப்பர்லூப் போக்குவரத்தை நடைமுறைக்கு கொண்டுவருவதில் பல சிக்கல்கள் இருக்கும் நிலையில், அதை இந்திய ரயில்வே துறையுடன் இணைந்து மெட்ராஸ் ஐஐடி-யின் குழு சாதித்தால், உலக அங்கீகாரம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதேசமயம் அது அவ்வளவு எளிதல்ல என்பதையும் பேராசிரியர் சத்ய சக்கரவர்த்தி ஒப்புக்கொள்கிறார்.

"இன்னும் சோதனை கட்டத்தில் தான் இருக்கிறோம். எல்லாம் சரியாக நடந்தால் அடுத்த 10-15 ஆண்டுகளில் இந்தியா தனது முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்து அமைப்பைப் பெறும்," என்கிறார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c93k0wll19po

பூமிக்கு பயம் காட்டுகிறதா 2024 YR4 விண்கல்? இது மோதும்போது உயிருக்கே பாதிப்பு ஏற்படுமா? Explained

4 weeks 1 day ago

2024 YR4 என்று பெயரிடப்பட்ட ஒரு பெரிய Asteroid பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விண்கல் பூமியைத் தாக்கக்கூடும் என்று Scientists ஆரம்பத்தில் கவலைப்பட்டனர். பின்னர் அவ்வாறு நடக்க வாய்ப்பு குறைவாக இருப்பதாக அறிவித்தனர்.

இந்த Asteroid பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு 3.1 சதவீதம் உள்ளது என ஆரம்பத்தில் மதிப்பிட்ட விஞ்ஞானிகள், பின்னர் 2032ஆம் ஆண்டில் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு 0.28 சதவீதம் மட்டுமே உள்ளது என்று கூறினர்.

ஆனால் இது Moon-ஐ தாக்க ஒரு சதவீதம் வாய்ப்பு இருப்பதாக NASA மதிப்பிட்டுள்ளது.

#NASA #Earth #Space

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

நிலவில் தரையிறங்கிய தனியார் லேண்டர் - என்ன செய்யப் போகிறது?

1 month ago

6 மணி நேரங்களுக்கு முன்னர்

நிலவின் மேற்பரப்பில் ஆய்வு மேற்கொள்ள புதிய லேண்டர் ஒன்று தரையிறங்கியுள்ளது. இதுவே நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் இரண்டாவது தனியார் லேண்டராகும்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (நாசா) தனியார் நிறுவனங்களுடன் மேற்கொள்ளும் கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக ஃபயர்ஃப்ளை விண்வெளி நிறுவனத்தின் லேண்டர், நிலாவில் "sea of crises" எனப்படும் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

இந்தப் பகுதி பூமியிலிருந்து தெரியும் நிலவில் உள்ள ஒரு பெரிய பள்ளமாகும்.

லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கும் தருணம் காணொளியில்...

https://www.bbc.com/tamil/articles/cx2eqgn7w6lo

பூமியை நெருங்கிய பிரமாண்ட விண்கல் நிலவின் மீது மோதுமா? நாசா புதிய தகவல்

1 month 1 week ago

2024 YR4 விண்கல் நிலவை மோதுமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட்

  • பதவி, பிபிசி செய்தியாளர்

  • 25 பிப்ரவரி 2025

    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்த வாரம், 2024 YR4 என்று பெயரிடப்பட்ட ஒரு பெரிய விண்கல் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விண்கல் பூமியைத் தாக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் ஆரம்பத்தில் கவலைப்பட்டனர், ஆனால் பின்னர் அது பாதுகாப்பானது என்று அறிவித்தனர்.

இந்த விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு 3.1 சதவீதம் என்று விஞ்ஞானிகள் ஆரம்பத்தில் மதிப்பிட்டனர். ஆனால், இந்த விண்கல் 2032ஆம் ஆண்டில் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு 0.28 சதவீதம் மட்டுமே என்று சமீபத்தில் தெரிய வந்தது.

அதே விண்கல் நிலவைத் தாக்க ஒரு சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா இப்போது மதிப்பிட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, 2024 YR4 என்ற விண்கல் சிலியில் உள்ள ஒரு பாலைவனத்தில் தொலைநோக்கி மூலம் விண்வெளியைக் கவனித்துக் கொண்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் பத்து வான் பொருட்கள் பூமியை நெருங்கி வருவதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். வானியல் ரீதியாகப் பார்த்தால், இவை மிகச் சிறிய விண்கற்கள். அவற்றில் பெரும்பாலானவை பூமிக்கு அருகில் வந்திருக்கலாம் அல்லது பூமியுடன் மோதியிருக்கலாம். சில விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்த பிறகு எரிந்திருக்கலாம். அவை அனைத்தும் மனிதர்களின் கண்ணில் தென்படாமலேயே நடந்திருக்கும்.

பூமிக்கு நெருக்கமாக வரும் விண்கற்கள்

பூமிக்கு அருகில் அல்லது தொலைவில் விண்வெளியில் பயணிக்கும் விண்கற்கள் ஃப்ளை-பைஸ் (fly-bys) என்று அழைக்கப்படுகின்றன.

இவற்றில் பெரும்பாலான விண்கற்களால் ஆபத்து இல்லை. இருப்பினும், பிரபஞ்சத்தில் மனிதனால் தீர்க்கப்படாத பல மர்மங்களை அவை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. அவை விண்வெளி குறித்த நிறைய அறிவையும் தகவல்களையும் வழங்குகின்றன.

இந்தக் கற்கள் சில நேரங்களில் சிறிய கோள்களாகவும் அடையாளம் காணப்படுகின்றன. மேலும், அவை 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நமது சூரிய மண்டலம் உருவாக்கப்பட்டபோது உருவான எச்சங்கள் எனவும் கூறப்படுகின்றன.

இந்த விண்கல் துண்டுகள் கோள்களின் ஈர்ப்பு விசைக்கு உட்பட்டவை மற்றும் பூமிக்கு நெருக்கமாகச் சுற்றி வரக்கூடியவை. இப்போது வரை, ஒரு பெரிய விண்கல் பூமிக்கு எவ்வளவு அருகில் வரும், அது எவ்வளவு கடினமாகத் தாக்கும் என்பதை மனிதர்களால் சரியாக அறிய முடியவில்லை.

நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மார்க் போஸ்லாஃப் கூறுகையில், பூமிக்கு அருகிலுள்ள பொருட்களைத் தீவிரமாகக் கண்காணிப்பது 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கியதாகவும் அதற்கு முன்பு யாரும் அவற்றை அதிகம் கவனிக்கவில்லை என்றும் கூறினார்.

நாற்பது மீட்டர் அகலம் அல்லது அதைவிடப் பெரிய வான் பொருட்கள் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் ஒவ்வோர் ஆண்டும் பலமுறை கடந்து செல்வதை ஆராய்ச்சியாளர்கள் கவனித்து வருகின்றனர்.

கடந்த 1908ஆம் ஆண்டில் சைபீரியா மீது அத்தகைய பெரிய விண்கல் ஒன்று வெடித்தது. இது 500 சதுர கி.மீ பரப்பளவில் உள்ள கட்டடங்களைச் சேதப்படுத்தியது, மக்கள் பலர் காயமடைந்தனர்.

விண்கல் நகரத்தைத் தாக்கினால் என்ன ஆகும்?

2024 YR4 விண்கல் நிலவை மோதுமா?

பட மூலாதாரம்,DRS. BILL AND EILEEN RYAN, MAGDALENA RIDGE OBSERVATORY 2.4M TELESCOPE, NEW MEXICO TECH

முன்னதாக, 2004ஆம் ஆண்டில் அபோபிஸ் என்ற விண்கல்லும் YR4-ஐ போலவே பூமிக்கு அருகில் வருவதாக அடையாளம் காணப்பட்டது. இது 375 மீட்டர் அகலம் மற்றும் ஒரு பயணக் கப்பல் போன்ற வடிவத்தில் இருக்கும் என்று கருதப்பட்டது.

பிரெஞ்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் (சி.என்.ஆர்.எஸ்) பேராசிரியர் பேட்ரிக் மைக்கேல், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட விண்கற்களில் இது மிகவும் ஆபத்தான விண்கல் என்று கூறினார்.

அதை அவதானித்த பிறகு, கடந்த 2013ஆம் ஆண்டு வரை அது பூமியைத் தாக்காது என்பதை விஞ்ஞானிகளால் தீர்மானிக்க முடிந்தது. இவ்வளவு பெரிய விண்கல் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளைத் தாக்கியிருந்தால், அது பேரழிவை ஏற்படுத்தியிருக்கும்.

YR4 விண்கல் எவ்வளவு பெரியது என்பது இன்னும் தெரியவில்லை, ஆனால் சில மதிப்பீடுகள் அதன் மேல்முனை 90 மீட்டர் அகலமாக இருந்தால், அது பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது சேதமடையால் வரக்கூடும் என்று கூறுகின்றன.

"இத்தகைய விண்கற்களால் பூமியில் ஒரு பெரிய பள்ளத்தை உருவாக்க முடியும். அவை பூமியில் மோதக்கூடிய பகுதிக்கு அருகிலுள்ள கட்டமைப்புகள் சேதமடையும். ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளவர்களுக்குக் கடுமையான காயம் ஏற்படும் அபாயம் உள்ளது," என்று லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வகத்தின் பேராசிரியர் கேத்தரின் குனமோட்டோ கூறினார். இது நடந்தால், உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளதாகக் கூறினார் அவர்.

அபோபிஸ் விண்கல் பற்றி அறிந்ததில் இருந்து விஞ்ஞானிகள் பூமியை விண்கற்களில் இருந்து பாதுகாப்பதுல் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

பேராசிரியர் மைக்கேல் சர்வதேச விண்வெளி மிஷன் திட்டமிடல் ஆலோசனைக் குழுவின் ஒரு பகுதியாகவும் உள்ளார்.

விண்கல் தாக்கங்களை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்து அவர்கள் அரசுகளுக்கு ஆலோசனை வழங்குகிறார்கள். அது நேரடியாகத் தாக்கும்போது என்ன தாக்கம் இருக்கும் என்பதை அறிய அவர்கள் ஒத்திகை பார்க்கிறார்கள்.

2024 YR4 விண்கல் நிலவை மோதுமா?

பட மூலாதாரம்,NASA

ஒரு விண்கல் ஒரு நகரத்தைத் தாக்கினால், அதன் தாக்கம் ஒரு பெரிய சூறாவளியைப் போலவே இருக்கும் என்று மார்க் போஸ்லாஃப் கூறுகிறார். உள்கட்டமைப்பைப் பாதுகாக்கவும், அப்பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறுகிறார்.

YR4 பற்றி என்ன செய்வது என்பதைத் தீர்மானிக்க விண்வெளிப் பணி திட்டமிடல் ஆலோசனைக் குழு ஏப்ரல் மாதம் மீண்டும் கூடும். நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆகியவை ஆபத்தான விண்கற்களைத் தவிர்ப்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளன.

டிமோர்போஸ் என்ற விண்கல்லின் பாதையை திசை திருப்ப இரட்டை விண்கல் திசை திருப்பல் சோதனையில் (Double Asteroid Redirection Test) ஒரு விண்கலத்தை நாசா வெற்றிகரமாக அனுப்பியது. இருப்பினும், YR4 விஷயத்தில் இது செயல்படுமா என்பது விஞ்ஞானிகளுக்குத் தெரியவில்லை. அதை வெற்றிகரமாகத் திசை திருப்பிவிட மிகக் குறைந்த நேரமே உள்ளது.

அன்டார்டிகாவில் சுமார் 50,000 விண்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் மிகவும் பிரபலமானது ALH84001. இது செவ்வாய் கோளில் தோன்றியதாக நம்பப்படுகிறது. இதில், கோள்களின் வரலாற்றுக்கான முக்கியத் தடயங்களும் கனிமங்களும் உள்ளன. இது மிகவும் சூடாக இருந்ததாகவும், அதன் மேற்பரப்பில் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

விஞ்ஞானிகள் 2023இல், விண்வெளியில் 33 பாலிஹிம்னியா என்ற விண்கல்லைக் கண்டுபிடித்தனர். பூமியில் காணப்படும் அனைத்துக் கனிமங்களையும்விட கனமான கனிமங்கள் அதில் நிரம்பியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது பூமிக்கு முற்றிலும் புதியது. 33 பாலிஹிம்னியா, குறைந்தது 170 மில்லியன் கி.மீ தொலைவில் உள்ளது. இந்த விண்கற்கள் அறிவியலை மேலும் புரிந்துகொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளன.

விண்வெளியை அவதானிக்க பெரிய டிஜிட்டல் கேமரா

2024 YR4 விண்கல் நிலவை மோதுமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

சில விஞ்ஞானிகள் YR4இன் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள், ஏனெனில் அது சந்திரனைத் தாக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று தெரிகிறது.

லண்டன் இம்பீரியல் கல்லூரியின் பேராசிரியர் கரேத் காலின்ஸ் கூறுகையில், "நிஜ வாழ்க்கை நிகழ்வுகளில் இருந்து கிடைக்கும் தரவுகளுக்கு அதிக பயன்பாடு உள்ளது" என்கிறார்.

விண்கல் மோதலுக்குப் பிறகு எவ்வளவு பொருள் வெளியேற்றப்படும்? அது எவ்வளவு வேகமாகப் பயணிக்கும்? அது எவ்வளவு தூரம் பயணிக்கும்?

பூமியில் விண்கற்களின் தாக்கங்களைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் இதுவரை உருவாக்கிய கருவிகளைச் சோதிக்கவும் மேம்படுத்தவும் இது பயனுள்ளதாக இருக்கும். சிறந்த கணிப்புகளைச் செய்வதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

சூரிய குடும்பம் முழுவதும் சிதறிக் கிடக்கும் பாறைச் சிதைவுகள் ஒரு கட்டத்தில் பூமியைத் தாக்கும் என்பதை YR4 மீண்டும் நினைவூட்டுகிறது.

ஒரு பெரிய விண்கல் எப்போது மனித உயிர் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதை அறிவது முக்கியம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இது வரவிருக்கும் ஆண்டுகளில் இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் வரவிருக்கும் நூற்றாண்டுகளில் அபாயங்களைக் கணிக்க உதவும்.

மேலும், மனிதர்கள் விண்வெளியைக் கண்காணிக்கும் திறனை மேம்படுத்த வேண்டும். இந்த ஆண்டின் பிற்பகுதியில், மிகப் பெரிய அளவிலான டிஜிட்டல் கேமரா கிடைக்கும். அது சிலியில் உள்ள வேரா ராபின் ஆய்வகத்தில் இருந்து செயல்படும். இரவு வானத்தின் பல அதிசயங்களை அந்த டிஜிட்டல் கேமரா படம்பிடிக்கும். நாம் எவ்வளவு அதிகமாக விண்வெளியைக் கவனிக்கிறோமோ, அவ்வளவு அதிகமான விண்கற்களை பூமிக்கு அருகில் கண்டறிய முடியும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2013j5rn7xo

Pi Network Cryptocurrency

1 month 1 week ago

கடந்த 20.02.2025 இலிருந்து இந்த coins சந்தைக்கு வந்திருக்கிறது.

இது crypto உலகில் தூரநோக்கில் பெரும் மாற்றத்தை கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு இந்த ப்ரொஜெக்ட் தொடங்கப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே நான் இதில் இணைத்திருக்கிறேன்.

கடந்த 5 வருடங்களாக இந்த திட்டம் சோதனை முயற்சியில் இருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் விரும்பியவர்கள் pi coinsஇனை கைத்தொலைபேசி மூலம் மைனிங் செய்துகொள்ளும் வாய்ப்பும் இருந்தது.

இது ஒரு ஏமாற்று வேலை, snowball system என்றெல்லாம் கல்லெறிகள் விழுந்த போதும் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டு தான் இருந்தது. இப்பொழுது 55 மில்லியன் மக்கள் இணைந்து இதனை சந்தைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள். இந்த 55 மில்லியன் மக்களும் தங்களின் தகவல்களை அரசபத்திரம் மூலம் உறுதிப்படுத்திய பின்னரே சந்தைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

எந்த விதமான அறிவியல் அறிவும் இதற்கு தேவையில்லை. ஒரு கைத்தொலைபேசி போதும்.

சந்தைக்கு வந்து முதல் நாளே எதிர்பார்ப்பினை விட அதிக விலைக்கு சென்றது. இதன் அடுத்தகட்ட வளர்ச்சி Web3 நோக்கியது.

யாழ் உறவுகள் யாராவது இந்த coins வைத்திருக்கிறீர்களா?

சீனாவின் விண்வெளி சாதனை: பூமியில் இருப்பவரின் முகத்தை கண்டறியும் புதிய கேமரா..!

1 month 1 week ago

சீனாவின் Chinese space research teams அண்மையில் ஒரு புரட்சிகரமான ஒளிப்பட தொழில்நுட்ப சாதனையை அறிவித்துள்ளன… இக்கேமரா, விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி இயங்குவதால், பூமியில் உள்ள எந்த நபரின் முகம்மும் மிகத் தெளிவாகப் பதிவு செய்யக்கூடியது என்று கூறப்படுகிறது... இந்த கண்டுபிடிப்பு, விண்வெளி தொழில்நுட்பத்தில் ஒரு அற்புத முன்னேற்றமாகும் என்பதுடன், அதன் செயல்பாடு மற்றும் பயன்பாடுகள் பல துறைகளில் புரட்சியைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது…

தொழில்நுட்ப முன்னேற்றம்!

இந்த புதிய கேமராவை வடிவமைப்பதில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் மிகவும் முன்னேற்றமடைந்தது…

  • High Resolution: அதிநவீன ஒப்ரிக்கல் சென்சார்களைப் பயன்படுத்துதல், நுணுக்கமான மிரர் அமைப்பு மற்றும் கணினி ஆட்டிபிசியல் இன்ரெலிஜன்(AI) அல்கோறித தொழில்நுட்பங்களின் உதவியுடன், இந்த கேமரா மிகச்சிறிய விவரங்களைக் கூட மிகத் தொலைவில் இருந்து படம்பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது...

  • பரந்த coverage : பூமியின் பரப்பளவை விரிவாக கவர் செய்யும் விதமாக, கேமரா பல்வேறு ஸ்கேல் மற்றும் கோணங்களில் இயங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது…

  • ஆர்.சி.சி மற்றும் செயற்கை நுண்ணறிவு(Real-Time Processing): capture செய்த படங்களை உடனடியாக கணினி அல்கோரிதம்கள் மூலம் பகுப்பாய்வு செய்து, நுட்பமான முக அம்சங்கள் மற்றும் பிற விவரங்களை விவரிக்கக் கூடிய தனித்துவமான செயல்முறைகளை கொண்டுள்ளது…

பயன்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள்..

இந்த சாதனையின் முக்கிய பயன்பாடுகள் பல துறைகளில் எதிர்பார்க்கப்படுகிறது:

  • நகர்ப்புற மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு: பூமியின் பரப்பில் நிகழும் இயற்கை நிகழ்வுகள், பருவநிலை மாற்றங்கள் மற்றும் பிற சூழல் மாற்றங்களை மேலும் நுணுக்கமாக கண்காணிக்க உதவும்.

  • பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு: விண்வெளியில் இருந்து உயர் தெளிவுத்திறன் கொண்ட முகப் படங்களைப் பிடிக்கும் இதன் திறனானது பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்தி, சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் அல்லது தனிநபர்களை விரைவாக அடையாளம் காண உதவும்.

  • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்: விண்வெளியில் இருந்து நேரடி தரவுகளை பெறுவதன் மூலம், பூமியின் நிலவரம், நகரங்களின் வளர்ச்சி மற்றும் பிற பல துறைகளில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளது.:.

சமூகப் பார்வையும் சர்வதேச விவாதமும்..!

இத்தகைய சாதனைகள் பாராட்டுதலையும், அதே சமயம் பலவகை சர்ச்சைகளையும் உண்டாக்கும்…

  • தனியுரிமை மற்றும் பாதுகாப்பு: ஒருவரின் முகத்தை விண்வெளியில் இருந்து தெளிவாக பதிவுசெய்யக் கூடிய திறன், தனியுரிமை மீறலுக்கான அபாயத்தை உண்டாக்கும் எனக் கருத்துக்கள் எழுந்துள்ளன…

  • சர்வதேச ஒத்துழைப்பு: இதுபோன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்களை சர்வதேச அளவில் பகிர்ந்து, அவற்றை எந்த வகையில் ஒழுங்குபடுத்துவது என்பது முக்கியமான கேள்வியாக மாறியுள்ளது…

எதிர்காலத்தில் சாத்தியமான தாக்கங்கள்..!

சீனாவின் இந்த சமீபத்திய தொழில்நுட்ப சாதனை பொறியியலில் ஒரு மாபெரும் பாய்ச்சல் - இது அறிவியல், பாதுகாப்பு மற்றும் சட்டம் ஆகிய துறைகளில் புதிய விவாதங்களையும் களங்களையும் திறக்கிறது:

  • தொழில்நுட்பம்,ஒழுங்கு முறை கட்டமைப்புக்கள் மற்றும் சட்டங்கள்: மேம்பட்ட கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் அதிகமாகப் பரவி வருவதால், தனியுரிமை மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதோடு புதுமையான விஞ்ஞான தொழில்நுட்ப கண்டுபுடிப்புகளின் பாவனைகளை சமநிலைப்படுத்தும் வலுவான சட்ட கட்டமைப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது…

சீனாவின் இந்த புதிய கேமரா கண்டுபிடிப்பு, விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகளில் ஒரு மிக முக்கியமான மைல்கல் என கருதப்படுகிறது. இது விஞ்ஞான உலகிற்கும், சமூக பாதுகாப்பிற்கும் புதிய உத்தேசங்களை அளிக்கும் அதேவேளை, தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்பு சார்ந்த சிக்கல்களையும் உருவாக்கும்... எதிர்காலத்தில் இந்த சாதனையின் பயன்கள் மற்றும் அதன் ஒழுங்குபடுத்தல் குறித்து சர்வதேச மன்றங்களில் விசாரிக்கப்பட்டு, தேவையான விதிமுறைகள் உருவாக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…

இக்கேமரா கண்டுபிடிப்பு, தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அடையாளமாக மட்டுமின்றி, சமூகத்தில் புதிய விவாதங்களையும், மாற்றங்களையும் உருவாக்கும் என நம்பப்படுகிறது…

மேலும் தகவலுக்கு 👇

விண்வெளியில் இருந்து பூமியில் உள்ளோரின் முகங்களை அடையாளம் காணும் கமராவை அறிமுகப்படுத்தியது சீனா

1 month 1 week ago

Published By: DIGITAL DESK 3

23 FEB, 2025 | 11:34 AM

image

விண்வெளியில் இருந்து பூமியில் உள்ளோரின் முகங்களை அடையாளம் காணும் அதி திறன் கொண்ட உலகின் மிக சக்திவாய்ந்த உளவு கமராவை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகளாவிய கண்காணிப்பு திறன்களை மறுவரையறை செய்யக்கூடிய சக்திவாய்ந்த லேசர் அமைப்புடன் சீன விஞ்ஞானிகள் ஆப்டிகல் இமேஜிங் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். 

மேம்பட்ட இந்த இமேஜிங் சாதனம் 100 கிலோமீட்டர் (62 மைல்) தொலைவில் இருந்து மில்லிமீட்டர் அளவிலான விவரங்களைப் பிடிக்கும் திறன் கொண்டது. இது உளவுத்துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தும்.

https://www.virakesari.lk/article/207434

இரவைப் பகலாக்கும் திட்டம்: ரஷ்யாவின் பிரமாண்ட விண்வெளி கண்ணாடி பூமிக்கு புது வெளிச்சம் பாய்ச்சியது எப்படி?

1 month 2 weeks ago

இரவைப் பகலாக்கும் திட்டம்: ரஷ்யாவின் பிரமாண்ட விண்வெளி கண்ணாடி பூமிக்கு புது வெளிச்சம் பாய்ச்சியது எப்படி?

ஸ்னாமியா, ரஷ்யா, விண்வெளி கண்ணாடி, இரவைப் பகலாக்கும் திட்டம்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், மைல்ஸ் பர்க்

  • பதவி, பிபிசி நியூஸ்

  • 19 பிப்ரவரி 2025

32 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு விண்வெளி கண்ணாடியைப் பயன்படுத்தி சைபீரியாவை ஒளிரூட்டுவதற்கான விளாடிமிர் சைரோமியட்னிகோவின் துணிச்சலான முயற்சி சர்வதேச கவனத்தை ஈர்த்தது. 1993, பிப்ரவரி 4ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த பரிசோதனை குறித்து 'பிபிசியின் டுமாரோஸ் வேர்ல்ட்' செய்தி வெளியிட்டது.

ஒரு பிரமாண்ட கண்ணாடியை பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தி சூரியனின் கதிர்களை கிரகித்து அதை பூமியிலுள்ள ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி திருப்புவது இத்திட்டத்தின் நோக்கம். இது ஏதோ ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வில்லன் கதாபாத்திரம் உருவாக்கிய திட்டம் போல் தோன்றலாம். ஆனால், ரஷ்ய விண்வெளி முகமையான ரோஸ்கோஸ்மோஸ் 1993 பிப்ரவரி 4ஆம் தேதி செய்ய முயன்றது இதைத் தான்.

ஆனால் ஸ்னாமியா (ரஷ்ய மொழியில் பதாகை எனப் பொருள்) திட்டத்தின் நோக்கம் உலகை மிரட்டி பணம் பறிப்பது போன்ற ஒரு கொடூரமான திட்டம் அல்ல.

ஸ்னாமியா ஏவப்படும் முன்னர் பிபிசியின் டுமாரோஸ் வேர்ல்ட் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கேட் பெல்லிங்ஹாம், "இதன் நோக்கம், சைபீரியாவில் உள்ள ஆர்டிக் நகரங்களை இருண்ட குளிர்காலத்தின் போது ஒளிரூட்டுவது. அடிப்படையில் ரஷ்யாவின் துருவப் பகுதிகளில் இரவு கவிழ்ந்த பின்னர் சூரியனை ஒளிரச் செய்யும் முயற்சிதான் இந்த திட்டம்." என்று விவரித்தார்.

இன்றுமே கேட்பதற்கு இது ஒரு புதிய திட்டம் போல தோன்றுகிறது. இருப்பினும் ஒளியை பூமியின் மேற்பரப்பை நோக்கி பிரதிபலிக்க விண்வெளியில் கண்ணாடிகளை பயன்படுத்துவது என்ற நோக்கம் உண்மையில் புதுமையான ஒன்றல்ல. 1923இல் ஜெர்மனியின் ராக்கெட் முன்னோடி ஹெர்மன் ஓபெர்த் இதை தனது 'ராக்கெட் இண்டூ பிளானட்டரி ஸ்பேஸ்' என்ற புத்தகத்தில் முன்வைத்தார்.

மிகவும் சாத்தியமற்றதாக தோன்றுகிறது என்ற காரணத்திற்காக ஹைடெல்பர்க் பல்கலைக் கழகத்தால் நிராகரிக்கப்பட்ட அவரது பி.ஹெச்டி ஆய்வறிக்கையின் அடிப்படையில், அவர் சுயமாக வெளியிட்ட புத்தகம். இது, ஒரு ராக்கெட் பூமியின் சுற்றுப்பாதையை விட்டு வெளியேறுவது எப்படி சாத்தியம் என்பதை கணித ரீதியாக காட்டியது.

விண்வெளி பயணத்தால் மனிதர்கள் உடலில் ஏற்பட சாத்தியமுள்ள பாதிப்புகள், செயற்கைக்கோள்களை எப்படி சுற்றுவட்டப்பாதையில் செலுத்துவது மற்றும் பூமியில் ஒரு குறிப்பிட்ட பகுதியை நோக்கி ஒளியை குவிக்கும் வகையில் விண்வெளியில் மிகப்பெரிய குழிவான கண்ணாடிகளை அமைப்பது ஆகியன குறித்த தகவல்கள் அந்த புத்தகத்தில் இடம்பெற்றிருந்தன.

'டைட்டானிக் மூழ்கியது போன்ற பேரிடர்களை தவிர்க்க உதவும்'

ஸ்னாமியா, ரஷ்யா, விண்வெளி கண்ணாடி, இரவைப் பகலாக்கும் திட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,1912, டைட்டானிக் கப்பல் விபத்தைச் சித்தரிக்கும் ஓவியம்

இவ்வாறு ஒளிரூட்டுவது 1912-ல் டைட்டானிக் மூழ்கியது போன்ற பேரிடர்களை தவிர்க்க உதவும் அல்லது அதில் உயிர் பிழைத்தவர்களை மீட்க உதவும் என ஓபெர்த் தெரிவித்தார். பனிப்பாறைகளை உருக்குவதன் மூலம் கப்பல்களுக்கு பாதைகளை உருவாக்குவது அல்லது பூமியின் தட்பவெட்ப நிலையை மாற்றக் கூட விண்வெளி கண்ணாடிகளை பயன்படுத்தலாம் என ஓபெர்த் பேசியிருந்தார்.

விண்வெளியில் கண்ணாடி திட்டம் இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மானிய இயற்பியலாளர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஹில்லர்ஸ்லெபனில் இருந்த நாஜி ஆயுத ஆய்வு நிலையத்தில், ஒளியை பிரதிபலிக்கும் ஒரு சூரிய துப்பாக்கியை (சானெங்வெயர் என ஜெர்மன் மொழியில் அறியப்படும்) உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தனர்.

சூரிய ஒளியை குவியச் செய்து பூமியில் நகரங்களை எரியச் செய்வது அல்லது ஏரிகளில் உள்ள நீரை ஆவியாக்குவதுதான் சானெங்வெயரின் நோக்கம் என்று கைது செய்யப்பட்ட ஜெர்மானிய விஞ்ஞானிகள் அமெரிக்க ராணுவ அதிகாரிகளிடம் கூறியதாக, 1945ஆம் ஆண்டில் டைம் இதழ் செய்தி வெளியிட்டது.

அவர்கள் தங்களது தகவல் தொழில்நுட்ப வரைபடங்களை அளித்த பின்னர் அமெரிக்க அதிகாரிகள் நம்பிக்கையின்மை தெரிவித்தாலும், ஜெர்மனிய விஞ்ஞானிகள் தங்களது சூரிய துப்பாக்கி 50 வருடங்களில் செயல்பாட்டிற்கு வரும் என நம்பியதாக நேச நாடுகளின் தொழில்நுட்ப உளவுப்பிரிவின் தலைவர் லெப்டினன்ட் கர்னல் ஜான் கெக் அந்த சமயத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

1970-களில் மற்றொரு ராக்கெட் பொறியாளர் கிராஃப்ட் எரிக்கே இந்த சாத்தியத்தை ஆராயத் தொடங்கினார். இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் வி-2 ராக்கெட் குழுவில் எரிக்கே ஒரு உறுப்பினராக இருந்திருக்கிறார்.

யுத்தத்திற்கு பிறகு அவர் அமெரிக்காவிடம் சரணடைந்து, ஆபரேசன் பேப்பர்கிளிப் என்ற திட்டத்தின் கீழ் அமெரிக்காவிற்காக பணியாற்ற தொடங்கினார். 1,600 ஜெர்மானிய விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மதிப்பு மிக்கவர்கள் என வகைப்படுத்தப்பட்டு, வழக்குகளிலிருந்து பாதுகாக்கப்பட்டு ஜெர்மனியில் இருந்து அமெரிக்காவிற்கு அழைத்து வரப்பட்டு, தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர்.

எரிக்கே அமெரிக்க விண்வெளி திட்டத்தின் ஒரு அங்கமாக மாறி, விண்வெளியில் கண்ணாடிகளை அமைக்கும் திட்டத்தை 1970-களில் தொடங்கினார். பூமியைச் சுற்றிவரும் பிரமாண்ட கண்ணாடிகள் இரவு வானை எப்படி ஒளிரூட்டி, விவசாயிகள் இரவு பகலாக 24 மணி நேரமும் சாகுபடி அல்லது அறுவடை மேற்கொள்ளலாம் அல்லது அந்த ஒளியை சூரிய ஒளி தகடுகளை நோக்கி திருப்பி உடனடியாக மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என விளக்கி 1978-ல் அவர் ஒரு கட்டுரையை வெளியிட்டார்.

இதை அவர் பவர் சொலெட்டா என அழைத்தார். குழந்தைப் பருவம் முதலே விண்வெளி பயணத்தின் மீது ஆர்வம் கொண்டவரும், பிற கோள்களில் மனிதர்கள் குடியேற வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவருமான எரிக்கே, பவர் சொலெட்டா செயல்பாட்டுக்கு வருவதை பார்க்காமலேயே 1984ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

ஆனால் அவருடைய விண்வெளி பயண கனவு அவரது இறப்பிற்கு பிறகு நனவானது. 1984-ல் தகனம் செய்யப்பட்ட அவரது எச்சங்கள், ஸ்டார் டிரெக்கை உருவாக்கிய ஜீன் ராடென்பெர்ரி மற்றும் 1960-களின் முக்கியமான உளவியலாளர் திமோதி லியரி ஆகியோரின் எச்சங்களுடன் சேர்த்து, பூமி சுற்றுப்பாதையில் 1997ஆம் ஆண்டு செலுத்தப்பட்டன.

1980-களில், சோலரெஸ் என்று அழைக்கப்படும் பூமியை சுற்றி வரும் கண்ணாடி அமைப்பு மூலம் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பு குறித்து நாசா மீண்டும் மீண்டும் ஆய்வு செய்தது, ஆனால் அரசு ஆர்வம் காட்டினாலும் அந்த திட்டத்திற்கு போதிய நிதியை திரட்ட முடியாமல் போய்விட்டது. ஆனால் அதே நேரம் ரஷ்யாவில் சூரிய கண்ணாடிகள் குறித்த ஆர்வம் வேரூன்றியது.

ஸ்னாமியா, ரஷ்யா, விண்வெளி கண்ணாடி, இரவைப் பகலாக்கும் திட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பகல் நேரம் மிகவும் குறைவாக இருக்கும் ரஷ்யாவின் வட துருவப்பகுதிகளில் இருள் சூழ்ந்த பகுதிகளில் ஒளியை வழங்க இந்த கண்ணாடிகளை பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டது

விண்வெளியில் படகோட்டம்

அந்த நேரத்தில் விண்வெளி கலங்களில் மிகப்பெரிய சூரிய ஒளி பாய்களை இணைக்க முடியுமா என விளாடிமிர் சைரோமியாட்னிகோவ் என்ற ரஷ்ய விஞ்ஞானி ஆய்வுகளை மேற்கொண்டார். விண்வெளி பொறியியல் கண்டுபிடிப்புகளில் சைரோமியாட்னிகோவ் ஒரு முன்னோடியாக இருந்தார்.

சோவியத் விண்வெளி வீரர் யூரி ககாரினை 1961-ல் விண்வெளிக்கு கொண்டு சென்ற உலகின் முதல் விண்கலமான வோஸ்டாக்ஸ் ராக்கெட்டை உருவாக்குவதில் அவர் பணியாற்றியுள்ளார். ஆண்டோஜைனெஸ் பெரிபெரல் அசெம்பளி சிஸ்டம் (APAS) என அழைக்கப்படும் அற்புத விண்கல தொழில்நுட்பத்தையும் அவர் உருவாக்கினார்.

இது 1975 ஜூலையில், அப்போதைய பனிப்போர் எதிரிகளான அமெரிக்காவும், சோவியத் யூனியனும் இணைந்து செயல்படுத்திய முதல் கூட்டு விண்வெளி பயணமான அப்போலோ- சோயூஸ் சோதனை திட்டத்தில் பயன்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் 3 விண்வெளி வீரர்களுடன் சென்ற அமெரிக்க விண்கலம், இரண்டு வீரர்களுடன் இருந்த சோவியத் சோயூஸ் கலத்துடன் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக இணைந்தது.

இதன் பின்னர் அமெரிக்க விண்கலங்கள் ரஷ்யாவின் மிர் விண்வெளி மையத்துடன் இணைவதற்கு APAS பயன்படுத்தப்பட்டது. இன்றும் விண்கலங்கள் சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைவதற்கு இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

சூரிய ஒளி பாய்களை விண்கலங்களுடன் இணைப்பதன் மூலம் கப்பலின் பாய்கள் காற்றை பயன்படுத்திக் கொள்வதைப் போல அவை சூரியனை பயன்படுத்திக் கொள்ள முடியும் என சைரோமியாட்னிகோவ் நினைத்தார். இந்த பிரதிபலிக்கும் ஆற்றல் கொண்ட பாய்கள் சரியான கோணத்தில் வைக்கப்பட்டால் சூரியனிலிருந்து வெளியேறும் போட்டான் துகள்கள் அவற்றின் கண்ணாடி போன்ற பரப்பில் பிரதிபலித்து எரிபொருளை எரிக்க வேண்டிய தேவையில்லாமல், கலத்தை விண்வெளியில் முன்னோக்கி செலுத்தும்.

ஆனால் ரஷ்யாவில், சோவியத் சகாப்தத்திற்கு பிறகு, சைரோமியாட்னிகோவின் விண்வெளி திட்டம் போன்றவற்றால் கிடைக்கும் பொருளாதார பலனை காட்டாவிட்டால் நிதி பெறுவது கடினமானது. எனவே தனது திட்டத்தில் மாற்றங்கள் செய்ய சைரோமியாட்னிகோவ் முடிவு செய்தார்.

பூமியை சுற்றி வரும் விண்கலத்தின் ஒளியை பிரதிபலிக்கும் சூரிய பாய்கள், ஒரு கண்ணாடி போல் செயல்படலாம் என்றும், சூரிய பாய்கள் எப்போதும் சூரியனை பார்க்கும் வகையில் அவற்றின் கோணத்தை விண்கலத்தின் திரஸ்டர்கள் மூலம் மாற்றலாம் எனவும் அவர் நினைத்தார். பகல் நேரம் மிகவும் குறைவாக இருக்கும் ரஷ்யாவின் துருவப்பகுதிகளில் இருள் சூழ்ந்த பகுதிகளில் ஒளியை வழங்க இந்த கண்ணாடிகளை பயன்படுத்தலாம். கூடுதலாக கிடைக்கும் சூரிய ஒளி விவசாய நிலங்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கலாம். கூடுதலாக கிடைக்கும் சூரியவெளிச்சம் அந்தப் பகுதியில் விளக்குகள் மற்றும் வெப்பத்திற்கான மின்சார செலவுகளை குறைத்து அந்த பகுதி மக்களின் நலனுக்கு வலு சேர்க்கலாம் என அவர் கருதினார்.

இது அரசு ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு திட்டமாக அமைந்தது. எனவே ரஷ்ய அரசு நிறுவனங்கள் மற்றும் முகமைகள் கொண்ட விண்வெளி ரெகாட்டா கூட்டமைப்பின் நிதி பங்களிப்புடன், ரஷ்ய விண்வெளி முகமை ரோஸ்காஸ்மாஸின் மேற்பார்வையில் ஸ்னாமியா விண்வெளி கண்ணாடியை மெய்ப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டார் சைரோமியாட்னிகோவ்.

ஸ்னாமியா, ரஷ்யா, விண்வெளி கண்ணாடி, இரவைப் பகலாக்கும் திட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரஷ்யாவின் மிர் விண்வெளி நிலையம்

முதலில் உருவாக்கப்பட்ட ஸ்னாமியா-1 மாதிரி விண்வெளிக்கு அனுப்பப்படவில்லை. மாறாக பரிசோதனைகள் மேற்கொண்டு ஏதாவது தொழில்நுட்ப பிரச்னைகள் இருந்தால் அவற்றை சைரோமியாட்னிகோவ் சரி செய்யும் வகையில் பூமியிலேயே இருந்தது.

ஸ்னாமியா-2 தான் சுற்றுப்பாதைக்கு செல்லவிருந்த முதலாவது கண்ணாடியாக இருந்தது. அதன் கண்ணாடி, விண்வெளியில் இருக்கும் மோசமான சூழ்நிலையை சமாளிக்கும் அளவு வலுவானது என கருதப்பட்ட பளபளப்பான அலுமினியம் சேர்க்கப்பட்ட மெல்லிய மைலார் இழைகளால் உருவாக்கப்பட்டது. அது மத்தியில் சுழன்று கொண்டிருக்கும் டிரம்மில் இருந்து எட்டு பிரிவுகளாக வட்ட வடிவில் பிரிந்து மையவிலக்கு விசையைப் பயன்படுத்தி அதே வடிவில் நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

"பயணத்தின் போது கண்ணாடி விண்கலத்தைச் சுற்றி இறுக்கமாக சுற்றப்பட்டிருக்கும். அதை பிரிக்க விண்கலம் வேகமாக சுழன்று ஒரு குடையை போல் அதை வெளியே தள்ள வேண்டும்," என 1992-ல் தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு விளக்கிய பிபிசியின் பெல்லிங்ஹாம், "இந்த 20 மீட்டர் அகல பிரதிபலிப்பான் சாதாரணமாக பூமியை கடந்து செல்லும் சூரிய கதிர்களை அந்த உயரத்தில் ஈர்த்து அவற்றை பூமியின் இருளான பகுதியை நோக்கி திருப்புவது தான் சூட்சுமம்." என்றார்.

முதலில் செலுத்தப்பட்டதைவிட படிப்படியாக பெரிய கண்ணாடிகளை அனுப்பி அவை பூமிக்கு வரும் போது எரிந்து விடும்படி பல ஸ்னாமியாக்களை ஏவுவதுதான் சைரோமியாட்நிகோவின் திட்டம். ஸ்னாமியாவின் மெல்லிய பிரதிபலிக்கும் தகடுகள் விண்வெளியில் எவ்வாறு செயல்பட்டன என்பதை ரஷ்ய பொறியாளர்கள் ஆய்வு செய்து அவரது மாதிரியை மேலும் மேம்படுத்த முடியும்.

இதன் தொடர்ச்சியாக நிரந்தரமாக பூமியை சுற்றி வரும் 200 மீட்டர் அகல பிரதிபலிப்பானுடன் கூடிய ஸ்னாமியா அனுப்பப்படும்.

பௌர்ணமி நிலவுக்கு இணையாக ஒளிர்ந்த விண்வெளி கண்ணாடி

ஸ்னாமியா, ரஷ்யா, விண்வெளி கண்ணாடி, இரவைப் பகலாக்கும் திட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பிரதிபலிப்பான்களால் நிலவை விட 50 மடங்கு கூடுதலான ஒளியை பிரதிபலிக்க முடியும் என கணிக்கப்பட்டது

சுழலும் ஆற்றல் உள்ள இதுபோன்ற 36 பிரமாண்ட கண்ணாடிகளை விண்ணில் செலுத்தி பிரதிபலிக்கும் ஒளியை குறிப்பிட்ட ஒரு பகுதியில் தொடர்ந்து பாயும் வகையில் வைத்திருப்பதுதான் இந்த திட்டத்தின் உச்சபட்ச நோக்கம். ஒரு சிறிய பகுதியில் ஒளி பாய ஒரே ஒரு பிரதிபலிப்பான் பயன்படுத்தலாம்.

"ஒரு தெளிவான இரவில் அந்த விண்வெளி பிரதிபலிப்பானால் ஒரு கால்பந்தாட்ட மைதானத்திற்கு இணையான பகுதிக்கு ஒளியூட்ட முடியும். இதன் மூலம் நீண்ட குளிர்கால இரவுகளில் இருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்கும்," என்றார் பெல்லிங்ஹாம்.

கூடுதல் வெளிச்சம் அல்லது பெரிய பகுதியில் ஒளி வீச பல பிரதிபலிப்பான்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். ஒருங்கிணைந்த விண்வெளி கிரிட் மூலம் ஒன்றாக செயல்படும் பிரதிபலிப்பான்களால் நிலவை விட 50 மடங்கு கூடுதலான ஒளியை பிரதிபலிக்க முடியும் எனவும் 90 கிலோமீட்டர் பரப்பளவிற்கு ஒளியை பரப்ப முடியும் எனவும் கணிக்கப்பட்டது.

1992ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி, திட்டம் தயாராக இருந்தது. ஆளற்ற புரோகரஸ் எம்-15 விண்கலம், ஸ்னாமியா-2 உடன் கஜகஸ்தானில் உள்ள பைகானுர் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. பொருட்களை ஏற்றிச்சென்ற கலம் ரஷ்யாவின் மிர் விண்வெளி மையத்துடன் இணைந்த போது, விண்வெளி வீரர்கள் பிரதிபலிப்பான்கள் சுருட்டி வைக்கப்பட்டிருந்த டிரம்மை புரோகரஸ் விண்கலத்தில் பொருத்தினர்.

ஸ்னாமியா-2 அந்த ஆண்டு இறுதியில் பரிசோதிக்கப்படவிருந்தது. ஆனால் மிர் குழுவினர் வரவிருக்கும் பிற திட்டத்திற்கான பரிசோதனைகளை செய்து கொண்டிருந்ததால் இதை செலுத்துவது தாமதமானது. இறுதியில் 1993ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி அவர்கள் திட்டத்தை செயல்படுத்த தயாராகினர்.

தானாக செயல்படக் கூடிய புரோகரஸ் விண்கலம், மிர் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் இருந்த போது அது சுழல ஆரம்பித்து ஒரு பிரமாண்ட விசிறியை விரிப்பது போல் கண்ணாடியை விரித்தது. அந்த கண்ணாடி சூரியனின் கதிர்களை ஈர்த்து, பூமியை நோக்கி பிரதிபலித்தது.

அவ்வாறு பிரதிபலிக்கப்பட்ட ஒளி பெளர்ணமி நிலவுக்கு இணையான பிரகாசத்துடன் ஒளிர்ந்தது. அது பூமியில் 5 கிலோமீட்டர் விட்டத்துடன் ஒரு வெளிச்ச வட்டத்தை உண்டாக்கியது. விநாடிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் அந்த வெளிச்ச வட்டம் தெற்கு பிரான்ஸிலிருந்து, ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, போலந்து மற்றும் மேற்கு ரஷ்யாவை கடந்தது.

மிர் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்தவர்களால் ஒரு மெல்லிய ஒளி ஐரோப்பாவையும் ரஷ்யாவையும் கடந்ததைக் காண முடிந்தது. அந்த கண்டம் முழுவதும் மேகங்களால் சூழப்பட்டிருந்தாலும், பூமியில் இருந்த சிலர் அதை ஒரு வெளிச்ச கீற்றாக பார்த்ததாக கூறினர். சில மணி நேரங்களுக்கு பிறகு, அந்த விண்வெளி கண்ணாடி சுழற்சிப் பாதையை விட்டு விலகி, கனடாவின் மேல் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த போது எரிந்து போனது.

ஸ்னாமியா, ரஷ்யா, விண்வெளி கண்ணாடி, இரவைப் பகலாக்கும் திட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,யூரி ககாரினை (புகைப்படத்தில் இருப்பவர்) விண்வெளிக்கு கொண்டு சென்ற உலகின் முதல் விண்கலமான வோஸ்டாக்ஸ் ராக்கெட்டை உருவாக்குவதில் சைரோமியாட்னிகோவ் பங்காற்றினார்

ஒரு தொழில்நுட்ப வெற்றி

ரஷ்யாவில், ஸ்னாமியா-2 சோதனை ஒரு தொழில்நுட்ப வெற்றியாக பாராட்டப்பட்டது. ஆனால் அது இந்த திட்டத்திற்கான சில குறிப்பிடத்தக்க சவால்களையும் வெளிப்படுத்தியது. ஸ்னாமியா-2 பிரதிபலித்த ஒளி எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவான தீவிரத்துடன் இருந்ததுடன், பூமியில் ஒரு பெரிய பகுதிக்கு பயன்படுத்தத்தக்க ஒளியை வழங்க முடியாத வகையில் மிகவும் பரவலாக இருந்தது. சுற்றுப்பாதையில் சுழலும் ஸ்னாமியா-2-ன் நிலைத்தன்மையை பராமரிப்பதும் கடினமாக இருந்தது. மேலும் அதன் வெளிச்ச வட்டம் பூமியின் மேற்பரப்பில் விரைவாகப் பயணித்தது. அதன் உண்மையான பயன்பாடு மிகவும் குறைவு என தோன்றச் செய்தது.

ஆனால் இந்த திட்டம் ஊக்கமளிக்கும் முடிவுகளையும் புரிதல்களையும் வழங்கியது. எனவே திட்டமிட்டபடி ஸ்னாமியா-2.5 திட்டத்தை செயல்படுத்த சைரோமியாட்னிகோவ் முனைந்தார். இந்த முறை இது 25 மீட்டர் கண்ணாடியைக் கொண்டிருக்கும் இது ஐந்து முதல் 10 முழு நிலவுகளின் பிரகாசத்தை பிரதிபலிப்பதுடன் 8 கிலோமீட்டார் அகலமுள்ள வெளிச்ச வட்டத்தையும் பெற்றிருக்கும்.

ஸ்னாமியா-2.5 பூமியைச் சுற்றி வரும் போது, பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பல நிமிடங்களுக்கு பிரதிபலிக்கும் வகையில் ஒளிக்கற்றையின் திசையை கட்டுப்படுத்துவதுதான் நோக்கம். 24 மணி நேர சோதனையின் போது கண்ணாடி பிரதிபலிக்கும் சூரிய கதிரால் ஒளிர வட அமெரிக்காவில் இரண்டு நகரங்கள் மற்றும் ஐரோப்பாவில் சில நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன.

சைரோமியாட்னிகோவ் தனது குழு அடைந்த முன்னேற்றத்தால் மகிழ்ச்சியடைந்தார். 1998 அக்டோபரில் இதை ஏவ திட்டமிடப்பட்டது. "நாங்கள் இந்த துறையில் முன்னோடிகள்" என்று அவர் ஜூலை 1998இல் தி மாஸ்கோ டைம்ஸிடம் கூறினார்.

"பரிசோதனை திட்டமிட்டபடி நடந்தால், எதிர்காலத்தில் பல டஜன் விண்கலங்களை நிரந்தரமாக விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம்." என்றார்.

வானிலையாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவலை

ஸ்னாமியா-2.5 புறப்படும் முன்னரே ரஷ்ய விண்வெளி அதிகாரிகளிடம் புகார்கள் வரத் தொடங்கின. விண்வெளி கண்ணாடி, இரவு வானத்தை ஒளியால் மாசுபடுத்தி, அவர்களின் தொலைநோக்கிகள் நட்சத்திரங்களைப் பார்ப்பதை மறைத்துவிடும் என்று வானிலையாளர்கள் கவலைப்பட்டனர்.

ராயல் வானியல் சங்கம், விண்வெளி ரெகட்டா கூட்டமைப்பின் இயக்குநர் ஜெனரலிடம் இந்த சோதனை குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் அளவுக்கு சென்றது. விண்வெளி கண்ணாடியின் செயற்கை ஒளி, விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி, வன உயிர்கள் மற்றும் இயற்கை சுழற்சிகளைப் பாதிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கவலை தெரிவித்தனர்.

இந்த சந்தேகங்கள் இருந்த போதிலும், ஸ்னாமியா திட்டத்தின் சாத்தியமான விளைவுகள் குறித்து உலகளவில் கணிசமான கவனமும் உற்சாகமும் இருந்தது.

"மனித குலத்தின் எதிர்காலத்திற்கு இது என்ன பலனளிக்கும் என்று நினைத்துப் பாருங்கள்," என்று சைரோமியாட்னிகோவ் மாஸ்கோ டைம்ஸிடம் கூறினார்.

"மின்சார கட்டணங்கள் இல்லை, நீண்ட இருண்ட குளிர் காலங்கள் இல்லை. தொழில்நுட்பத்திற்கு இது ஒரு பெரிய முன்னேற்றம்." என்றார்.

எனவே, ஸ்னாமியா-2.5 திட்டமிட்டபடி செயல்படுத்தப்பட்டது. மாஸ்கோவில் இருந்து மிஷன் கண்ட்ரோல் கண்காணித்துக் கொண்டிருக்க, முன்பை விட பெரிய விண்வெளி கண்ணாடி பிப்ரவரி 5, 1999 அன்று ஏவப்பட தயாராக இருந்தது.

முதலில் அனைத்தும் திட்டமிட்டப்படி நடந்தேறின. மடித்து வைக்கப்பட்டிருந்த விண்வெளி கண்ணாடி புரோகிரஸ் விண்கலத்துடன் இணைக்கப்பட்டு, மிர் விண்வெளி மையத்தில் இருந்து எந்த பிரச்னையும் இன்றி பிரிந்தது. அது விண்வெளி மையத்தை விட்டு விலகி அதற்கான இடத்தில் நிலைகொண்டது.

புரோகிரஸின் திரஸ்டர்கள் செயல்பட உத்தரவிடப்பட்டதும், அது சுழன்று கண்ணாடியை விரிக்கத் தொடங்கியது. அதே நேரத்தில் துரதிர்ஷ்டவசமாக புரோகிரஸுக்கு கூடுதலாக ஒரு கட்டளை தவறுதலாக பிறப்பிக்கப்பட்டது. விண்கலத்தை விண்வெளி மையத்துடன் இணைப்பதற்கான ஆண்டெனாவை செயல்படுத்தும்படி அதற்கு உத்தரவிடப்பட்டது.

ஸ்னாமியா, ரஷ்யா, விண்வெளி கண்ணாடி, இரவைப் பகலாக்கும் திட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரஷ்யாவின் மிர் விண்வெளி நிலையத்தில் பணியாற்றும் ஒரு ரஷ்ய விண்வெளி வீரர் (கோப்புப் படம்)

ஆண்டெனா நீளத் தொடங்கிய போது ஸ்னாமியா 2.5 -ன் மெல்லிய பிரதிபலிப்பான்கள் அதில் உடனடியாக சிக்கிக்கொள்ள தொடங்கியது. மிர் விண்வெளி மையத்திலிருந்து வந்த ஆண்டனாவில் கண்ணாடியிழை சிக்கிக்கொண்ட காட்சிகளை மாஸ்கோவில் உள்ள கட்டுப்பாட்டு மையம் வேதனையுடன் பார்த்தது. ஆண்டெனாவை உள்ளிழுக்க அவசர கட்டளைகள் அனுப்பப்பட்டன. ஆனால் இந்த நேரத்திற்குள் பல கஜ நீள கண்ணாடியிழை ஆண்டனாவை சுற்றிக்கொண்டதுடன், கண்ணாடியை பல இடங்களில் கிழித்துவிட்டது.

பிரதிபலிக்கும் பரப்பு மேலும் கிழித்துவிடும் அபாயம் இருப்பதை உணர்ந்து கட்டளைகள் நிறுத்தப்பட்டன. கண்ணாடியை விரிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஒரு இறுதிக்கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது பலனளிக்கவில்லை.

ஸ்னாமியா-2.5-ன் கிழிந்து கசங்கிய கண்ணாடியை விரிக்க முடியாது என்பதை உணார்ந்த மிஷன் கன்ட்ரோல், புரோகிரஸ் விண்கலத்துடன் இணைந்த நிலையிலேயே அதை பூமியில் விழ அனுமதித்தனர். அது அடுத்த நாள் பசுபிக் பெருங்கடலில் விழுந்தது.

"இங்கு மிகவும் சோர்வான மனநிலை உள்ளது," என மாஸ்கோவில் உள்ள மிஷன் கண்ட்ரோலின் செய்தித் தொடர்பாளார் வேலெரி லிண்டின் அப்போது பிபிசியிடம் தெரிவித்தார்.

ஸ்னாமியா-2.5 பூமியில் விழுந்தது அதை மட்டும் அழிக்கவில்லை. மாறாக சைரோமியாட்னிகோவின் உன்னதமான விண்வெளி கண்ணாடி திட்டத்தின் எதிர்காலத்தையும் அழித்தது. 70 மீட்டர் விட்ட கண்ணாடியுடன் 2001-ல் ஏவ அவர் திட்டமிட்ட ஸ்னமியா 3-க்கு நிதி கிடைக்காததால் அது தயாரிக்கப்படவே இல்லை.

தனது தலைமுறையின் தலைசிறந்த விண்வெளி பொறியாளர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்ட சைரோமியாட்னிகோவ் 2006-ல் சூரிய சக்தி பாய்கள் மற்றும் கண்ணாடிகள் பற்றிய கனவுகள் நிறைவேறாமலேயே உயிரிழந்தார்.

"இந்த பரிசோதனை உலகளவில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது என்பதால் இந்த தோல்வி மிகவும் வேதனையானது," என லிண்டின் 1999இல் பிபிசிக்கு கூறினார்.

"ரஷ்ய விண்வெளித் திட்டங்களின் பழைய கொள்கையை நாம் மறந்துவிட்டோம். முதலில் ஏதாவது செய்ய வேண்டும், பின்னர் அதைப் பற்றி பெருமை பேச வேண்டும்" என அப்போது அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

இரவைப் பகலாக்கும் திட்டம்: ரஷ்யாவின் பிரமாண்ட விண்வெளி கண்ணாடி பூமிக்கு புது வெளிச்சம் பாய்ச்சியது எப்படி?

பிரபஞ்சத்தின் மிகப்பெரிய, பிரமாண்ட கட்டமைப்பு கண்டுபிடிப்பு - உள்ளே என்ன இருக்கிறது?

1 month 2 weeks ago

குய்பு விண்மீன் திரள், அறிவியல் செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

4 மணி நேரங்களுக்கு முன்னர்

நமது சூரிய மண்டலம் உள்ள பால் வீதி போன்ற ஏராளமான நட்சத்திர மண்டலங்கள் சிறுசிறு குழுக்களாக தொகுக்கப்பட்டதும், அத்தகைய சிறு குழுக்களை ஒட்டுமொத்தமாக உள்ளடக்கியதுமான மிகப்பெரிய பொருள் (Superstructure) குய்பு.

குய்பு 1,300 கோடி ஒளி ஆண்டுகள் நீளம் கொண்டது மற்றும் 200 குவாட்ரில்லியன் (200 பிளஸ் 24 பூஜ்ஜியங்கள்) நட்சத்திரங்களின் மொத்த நிறையை உடையது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இந்த பிரபஞ்சத்தில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய பொருள் குய்பு என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கயிறுகளில் முடிச்சுகளைப் பயன்படுத்தி எண்களைக் கணக்கிடுவதற்கும் சேமிப்பதற்கும் பயன்படும் இன்கன் முறையைப் (பழங்கால முறையைப்) போன்றுள்ள இந்த மிகப்பெரிய விண்மீன் திரளுக்கு குய்பு என்று பெயரிடப்பட்டுள்ளது.

இன்கன் முறையில் உள்ள முடிச்சுகளைப் போலவே, குய்பு என்பதும் ஒரு சிக்கலான பொருளாக உள்ளது. இது ஒரு நீண்ட இழை மற்றும் பல பக்கவாட்டு இழைகளால் ஆனது.

இதுவரை கண்டறியப்பட்ட நட்சத்திர மண்டலங்களின் தொகுப்புகளிலேயே மிகப் பெரியதாக விளங்கும் குய்பு, அளவில் மற்ற நட்சத்திர மண்டல தொகுப்புகளை (சூப்பர் கிளஸ்டர்களை) விஞ்சியுள்ளது.

இந்த கண்டுபிடிப்பு arXiv இணையதளத்தில் தொடக்க நிலை ஆராய்ச்சி ஒன்றில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

( இந்த ஆய்வு, வானியல் துறையில் உள்ள மற்ற நிபுணர்களால் முறையாக மதிப்பாய்வு செய்யப்பட்டு சரிபார்க்கப்படவில்லை. ஆயினும், இந்த ஆய்வு வானியல் மற்றும் வானியற்பியல் இதழில் வெளியிட ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்)

குய்பு விண்மீன் திரள், அறிவியல் செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தரவுகளை வைத்து கணக்கீடுகளைச் செய்ய இன்காக்களால்( பண்டை நாகரித்தைச் சேர்ந்தவர்கள்) பயன்படுத்தப்படும் குய்புவின் விளக்கம்.

ஒன்றிணைக்கப்பட்ட பொருள்

பிரபஞ்சம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பொருட்களின் தொகுப்பாக அமைந்துள்ளதைப் போன்று தோற்றமளிக்கிறது .

பால் வீதி விண்மீன் மண்டலத்தின் ஒரு பகுதியாக உள்ள சூரிய மண்டலத்தில் கிரகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

அந்த விண்மீன் மண்டலங்கள் ஒன்றிணைந்து குழுக்களை (கிளஸ்டர்களை) உருவாக்குகின்றன. அந்த குழுக்கள் ஒன்றிணைந்து, மிகப்பெரிய குழுக்களை (சூப்பர் கிளஸ்டர்களை) உருவாக்குகின்றன.

அந்த சூப்பர் கிளஸ்டர்கள் ஒன்றிணைந்து, அதைவிட பெரிய சூப்பர் கிளஸ்டர்களை உருவாக்குகின்றன. வானியலாளர்கள் இந்த செயல்முறை தொடர்ந்து நடந்துகொண்டிருப்பதாக நம்புகிறார்கள்.

ஆனால், தற்போது நம்மிடம் உள்ள தொழில்நுட்பம் மற்றும் கருவிகள் மூலம் அவற்றை முழுமையாகக் ஆராய இயலவில்லை. தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள இவை, விண்மீன் மண்டலங்களையும், அவற்றின் குழுக்களையும் (சூப்பர் கிளஸ்டர்களின்) கொண்ட மிகப் பெரிய அமைப்புகளாகும்.

அளவில் மிகப் பெரிய இந்த குழுக்கள், நமது பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்பதைப் பற்றிய நமது புரிதலுக்கு சவால் விடுகின்றன.

வேற்று கிரக இயற்பியலுக்கான மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த ஹான்ஸ் போஹ்ரிங்கர் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு, பூமியிலிருந்து சுமார் 425 மில்லியன் முதல் 815 மில்லியன் ஒளி ஆண்டுகள் வரை ஐந்து பெரிய அமைப்புகளை அடையாளம் கண்டுள்ளது.

ஒரு காலத்தில், அருகிலுள்ள மிகப்பெரிய குழுவாக (சூப்பர் கிளஸ்டராக) கருதப்பட்ட ஷாப்லி சூப்பர் கிளஸ்டர்,செர்பென்ஸ்-கொரோனா பொரியாலிஸ் சூப்பர் கிளஸ்டர், ஹெர்குலஸ் சூப்பர் கிளஸ்டர், ஸ்கல்ப்டர்-பெகாசஸ் சூப்பர் கிளஸ்டர் மற்றும் இறுதியாக, குய்பு ஆகிய ஐந்து அமைப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

"குய்பு என்று நாங்கள் பெயரிட்ட இந்த அமைப்பு, பிரபஞ்சத்தில் இன்று வரை கண்டுபிடிக்கப்பட்டவற்றிலேயே மிகப்பெரியது" என்று விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

"இந்த மிகப்பெரிய அமைப்பு, சுமார் 45 சதவீத விண்மீன் குழுக்களையும், 30 சதவீத விண்மீன் மண்டலங்களையும், 25 சதவீத பொருளையும் (matter), பொருளின் தொகுதி அளவில் (volume fraction) 13 சதவீதத்தையும் கொண்டு, இதுவரை அறியப்பட்டதிலேயே மிகப்பெரிய அமைப்பை உருவாக்குகிறது" என்று அவர்கள் மேலும் கூறுகிறார்கள்.

கயிறுகளில் உள்ள முடிச்சுகளில் இருந்து உருவாக்கப்படும் குய்புகள், நிறம், வரிசை மற்றும் எண் ஆகியவற்றின் அடிப்படையில் தகவல்களைக் கொண்டிருக்கும்.

"சிறிய பக்கவாட்டு இழைகளைக் கொண்ட ஒரு நீண்ட இழை (நூல் ) போன்ற தோற்றம், அந்த பெரிய கட்டமைப்புக்கு குய்பு என்ற பெயரிட வழிவகுத்தது" என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்குகின்றனர்.

குய்பு விண்மீன் திரள், அறிவியல் செய்திகள்

பட மூலாதாரம்,ARXIV/HANS BÖHRINGER ET AL

அவர்களின் ஆராய்ச்சியில், போரிங்கரும் அவரது குழுவினரும் குய்பு மற்றும் அதனைப் போன்ற நான்கு பெரிய அமைப்புகளை 130 முதல் 250 மெகாபார்செக்குகளுக்குள் (மெகாபார்செக் - 1 மெகாபார்செக் = 3.26 மில்லியன் ஒளியாண்டுகள்) கண்டுபிடித்தனர்.

அவற்றை அடையாளம் காண, விஞ்ஞானிகள் எக்ஸ்-ரே கதிர்வீச்சு மற்றும் விண்மீன் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட சோதனைகளைப் பயன்படுத்தினர்.

கிளாசிக்ஸ் (Cosmic Large-Scale Structure in X-ray) கிளஸ்டர் கணக்கெடுப்பைப் பயன்படுத்தி இந்த பெரிய அமைப்புகளை பகுப்பாய்வு செய்தனர்.

எக்ஸ்-கதிர் விண்மீன் குழுக்கள், விண்வெளியில் பல்லாயிரம் நட்சத்திரங்களைக் கொண்ட பெரிய குழுக்கள் ஆகும்.

இக்குழுக்களில் நட்சத்திரங்களுக்கு இடையே மிகுந்த வெப்பம் கொண்ட ஒரு வாயு உள்ளது. இன்ட்ராகிளஸ்டர் வாயு என்று அழைக்கப்படும் இந்த வாயு எக்ஸ்-கதிர்களை வெளியிடுகிறது.

இந்த எக்ஸ்-கதிர்கள், பொருள் அதிகமாக திரண்டுள்ள இடங்களை காட்டுகின்றன. அதேசமயம் அடிப்படையான காஸ்மிக் வலையை (cosmic web) வெளிப்படுத்துகின்றன.

அதனால், இந்த கதிர்வீச்சுகள் மிகப்பெரிய கட்டமைப்புகளை அடையாளம் காண்பதற்கான சமிக்ஞைகள் போன்றவை.

பிரபஞ்சத்தில் உள்ள இதர மிகப்பெரிய கட்டமைப்புகள்

குய்பு மிகப் பெரிதாகவும் இப்போது பிரபஞ்சத்தில் அறியப்பட்ட மிகப்பெரிய கட்டமைப்பாகவும் கருதப்பட்டாலும், அதற்கு கடும் போட்டி தரும் விதத்தில் பல பெரிய கட்டமைப்புகள் உள்ளன.

உதாரணமாக, லானியாக்கியா (Laniakea) சூப்பர் கிளஸ்டர் என்பது 520 மில்லியன் ஒளியாண்டுகள் விட்டம் கொண்ட மற்றொரு அமைப்பாகும்.

2003இல் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்லோன் கிரேட் வால் (SGW) அமைப்பும் உள்ளது. இது 1 பில்லியன் ஒளியாண்டுகளுக்கு மேல் நீளமுள்ளது என்று நம்பப்படுகிறது.

ஹெர்குலிஸின் கொரோனா-போரியல் கிரேட் வால் எனும் அமைப்பு தான் இதுவரை பிரபஞ்சத்தில் அறியப்பட்ட மிகப்பெரிய அமைப்பாகும்.

புதிரான பொருட்களை உள்ளடக்கிய 10 பில்லியன் ஒளி ஆண்டுகள் நீளம் கொண்ட இது, இதுவரை அறியப்பட்ட பிரபஞ்சத்தில் 11 சதவீதத்தை கொண்டிருக்கிறது.

தற்போது குய்பு கண்டறியப்பட்ட பிறகு, இந்த அமைப்புகள் அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. ஆனால், இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் குய்பு தனது முதலிடத்தை நீண்ட காலம் தக்க வைத்துக் கொள்ளாது என்று பேராசிரியர் போரிங்கர் நம்புகிறார்.

"நாம் இன்னும் பெரிய விண்வெளி பரப்புகளை ஆராய்ந்தால், அதிகமான மிகப்பெரிய கட்டமைப்புகள் இருக்கலாம் ( அதற்கான சாத்தியம் அதிகம்) என்று எர்த்ஸ்கையிடம் பேராசிரியர் போரிங்கர் தெரிவித்தார்.

குய்பு விண்மீன் திரள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, லானியாக்கியா (Laniakea) சூப்பர் கிளஸ்டர் என்பது 520 மில்லியன் ஒளியாண்டுகள் விட்டம் கொண்ட மற்றொரு அமைப்பாகும்.

உடைந்து விழக் கூடிய பொருட்கள்

ஆனால் இந்த "சூப்பர்ஜெயண்ட்களின்" (மிகப்பெரிய அமைப்புகள்) கண்டுபிடிப்பு பிரபஞ்சத்தை நன்கு புரிந்துகொள்ள உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

குய்புவின் அளவுள்ள ஒரு அமைப்பு அதன் சுற்றுப்புறங்களில் தாக்கம் ஏற்படுத்த வேண்டும். அந்த தாக்கத்தைப் புரிந்துகொள்வது பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வதற்கு அடிப்படை ஆகும்.

குய்பு மற்றும் அதனைப் போன்ற பெரிய கட்டமைப்புகளைப் பற்றி தெரிந்துகொள்வது, விண்மீன் மண்டலங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கும், பிரபஞ்சத்தை கண்காணிக்கவும் அளவிடவும் பயன்படுத்தப்படும் மாதிரிகளை மேம்படுத்துவதற்கும் உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆனால் இந்த பெரிய அமைப்புகளின் முக்கியத்துவத்தையும் தாக்கத்தையும் புரிந்து கொள்ள அடுத்தக்கட்ட ஆராய்ச்சிகள் தேவைப்படும்.

காலப்போக்கில் பிரபஞ்சத்தில் மாற்றங்கள் ஏற்படும் போது, குய்பு மற்றும் அதனைப் போன்ற பிற அமைப்புகள் இறுதிவரை நீடிக்காது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

"பிரபஞ்சத்தின் எதிர்காலப் பரிணாம வளர்ச்சியில், இந்த பெரிய கட்டமைப்புகள், இறுதியில் சிறுசிறு துண்டுகளாக உடைந்துவிடும். அதனால் அவை நிரந்தரமானவை அல்ல" என்று போரிங்கரும் அவரது குழுவினரும் விளக்குகின்றனர்.

ஆனால் "தற்போது, தனித்துவமான பௌதிக பண்புகள் மற்றும் விண்வெளிச் சூழல்களை கொண்ட சிறப்புப் பொருட்களான அவை, தனி கவனம் பெற தகுதியானவை" என்று அவர்கள் கூறுகிறார்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

பிரபஞ்சத்தின் மிகப்பெரிய, பிரமாண்ட கட்டமைப்பு கண்டுபிடிப்பு - உள்ளே என்ன இருக்கிறது?

பூமியின் உட்புற மையக்கரு வடிவம் மாறிவிட்டதா? விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல்

1 month 2 weeks ago

உட்புற மையக்கரு உட்பட பூமியின் அடுக்குகளை வெளிப்படுத்தும் முப்பரிமாண படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,உட்புற மையக்கரு உட்பட பூமியின் அடுக்குகளை வெளிப்படுத்தும் முப்பரிமாண படம்

கட்டுரை தகவல்

  • எழுதியவர்,ஜார்ஜினா ரென்னார்ட்

  • பதவி,காலநிலை மற்றும் அறிவியல் செய்தியாளர்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஒரு விஞ்ஞானிகள் குழுவின் கூற்றுப்படி, பூமியின் உட்புற மையக்கருவின் வடிவம் கடந்த 20 ஆண்டுகளில் மாறியிருக்கக் கூடும்.

பூமியின் நடுப்பகுதி ஒரு பந்து போன்ற வடிவில் இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால், அதன் ஓரங்கள் சில இடங்களில் 100 மீட்டர் உயரத்துக்கு உருக்குலைந்திருக்கலாம் என்பது அந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசியர் ஜான் விடாலின் கூற்று.

சூரியனின் கதிரியக்கத்தில் இருந்து பூமியில் வாழும் உயினங்களை காக்கும் காந்தப்புலத்தை உருவாக்கும் பூமியின் உட்புற மையக்கருவே நமது கிரகத்தின் துடிக்கும் இதயமாக இருக்கிறது.

பூமியோடு தொடர்பில்லாமல் உட்புற மையக்கரு, தனியாக சுழன்று கொண்டிருக்கிறது. இந்த சுழற்சி இல்லாவிட்டால், பூமி அழிந்து, பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தனது காந்தப் புலத்தை இழந்த செவ்வாயைப் போன்று வறண்டு போய்விடும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

திடமான மையக்கருவின் ஓரம், மிகவும் சூடான திரவ நிலையில் உள்ள உலோக வெளிப்புற மையக்கருவை தொடும் இடத்தில் வடிவ மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கக் கூடும்.

நேச்சர் ஜியோசயின்ஸ் என்ற அறிவியல் இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டில் பூமி சுழலும் வேகத்தை விட உட்புற மையக்கரு சுழலும் வேகம் குறைந்து பின்னர் மீண்டும் வேகமெடுத்ததற்கு என்ன காரணம் என்பதை அறிவதற்காகத்தான் விஞ்ஞானிகள் ஆய்வு செய்துகொண்டிருந்தனர்.

பூமியின் மையக்கரு எப்படி இருக்கும்?

பூமியை பாதுகாக்கும் காந்தப்புலத்தை புரிந்துகொள்ளவும் அது வலுவிழக்குமா அல்லது நின்றுவிடுமா என்பதை புரிந்துகொள்ளவும், பூமியின் மையக்கரு எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்வது அவசியம்.

நமது பூமியின் உட்புறம் மிகவும் மர்மமான ஒரு பகுதியாகும். மையக்கரு பூமியின் மேற்பரப்பிலிருந்து 4,000 மைல் ஆழத்தில் உள்ளது. எவ்வளவோ முயற்சிகள் செய்தும் விஞ்ஞானிகளால் இதுவரை மையக்கருவை அடைய முடியவில்லை.

எனவே, அதன் ரகசியங்களை புரிந்துகொள்ள, நிலநடுக்கத்தால் ஏற்படும் அதிர்வலைகள் பூமி முழுவதும் பரவும் போது அவற்றை கணக்கெடுக்கின்றனர் சில ஆய்வாளர்கள்.

இந்த அலைகள் பயணம் செய்யும் விதத்தைக் கொண்டு அவை பூமியின் உட்கரு உட்பட எந்த பொருட்களை கடந்துள்ளன என்பதை தெரிந்து கொள்ள முடியும். இது நமது பூமிக்குக் கீழே இருப்பது என்ன என்பதை கண்டறிவதில் உதவியாக இருக்கும்.

வேகம் குறைந்த உட்புற மையக்கரு

1991 முதல் 2023வரை ஒரே இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் அதிர்வலைகளை இந்த புதிய ஆய்வு கணக்கில் எடுத்துக்கொண்டது. பூமியின் உட்புற மையக்கரு எப்படி காலப்போக்கில் மாறியிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள அது உதவியது.

அந்த காலகட்டத்தில் சுமார் 2010-ஆம் ஆண்டுவாக்கில் உட்புற மையக்கரு வேகம் குறைந்தது என்ற கருத்துக்கு வலு சேர்க்கும் கூடுதல் ஆதாரங்களை கண்டுபிடித்தவர் தெற்கு கலிஃபோர்னிய பல்கலைக் கழகத்தில் புவியியல் விஞ்ஞானியாக இருக்கும் பேராசிரியர் விடால்.

பூமியின் உட்புற மையக்கருவின் வடிவம் மாறியிருக்கலாம்: விஞ்ஞானிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பூமியின் மையக்கருவோடு தொடர்புப்படுத்தப்படும் காந்தப்புலம் சூரிய துகள்களுடன் தொடர்பு கொள்ளும்போது நார்தர்ன் லைட்ஸ் ஏற்படுகின்றன

ஆனால், உட்புற மையக்கருவின் வடிவம் மாறுகிறது என்பதற்கான ஆதாரத்தையும் அவரது குழுவினர் கண்டுபிடித்தனர்.

இது உட்புறக்கரு மற்றும் வெளிப்புற கருவின் எல்லையில் உட்புற மையக்கரு உருகும் நிலையில் உள்ள இடத்தில் நிகழ்வதாக தெரிகிறது. வடிவ உருகுலைவுக்கு, வெளிப்புற மையக்கருவின் திரவ ஓட்டம் மற்றும் சமச்சீர் இல்லாத புவி ஈர்ப்பு விசையின் ஈர்ப்பு காரணமாக இருக்கலாம்.

இந்த ஆய்வில் பங்கேற்காத ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஹர்வாயே டுகல்சி "மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டிய கருத்துரு," என இந்த ஆய்வு குறித்து குறிப்பிட்டுள்ளார்.

"நவீன அறிவியலில் அதிகம் அறியப்படாத உட்புற மையக்கருவின் பாகுத்தன்மை உள்ளிட்ட முக்கிய பருப்பொருள் குறித்த மதிப்பீடுகளைச் செய்ய இது விஞ்ஞானிகளுக்கு உதவக்கூடும்" என அவர் தெரிவித்தார்.

காலப்போக்கில் வெளிப்புற மையக்கரு, திடமான உட்புற மையக்கருவை போல் உறைந்துகொண்டிருக்கிறது. ஆனால் அது முழுமையாக திடமாக மாறுவதற்கு பல கோடி ஆண்டுகள் ஆகும்.

அது கிட்டத்தட்ட பூமியில் உயிரின் அழிவை காட்டும். ஆனால் அதற்குள் இந்த கிரகத்தையே சூரியன் விழுங்கியிருக்கக் கூடும்.

பூமியின் மையக்கருவில் என்ன நடக்கிறது?

பூமியின் மையக்கருவுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி உலகெங்கும் வல்லுநர்கள் நடத்தி வரும் ஆய்வின் ஒரு அங்கமாக பேராசிரியர் விடாலின் பணி உள்ளது.

"அறிவியலில், பொதுவாக ஒரு பொருளை புரிந்து கொள்ளும் வரை அவற்றை திரும்பத்திரும்ப பார்க்க முயற்சிப்போம்," என்கிறார் பேராசிரியர் விடால்.

"இந்த கண்டுபிடிப்பு ஒரு துளிகூட நமது வாழ்வை எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை. ஆனால் உண்மையில் பூமியின் மையக்கருவில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள நாங்கள் விரும்புகிறோம்," என மேலும் சொல்கிறார்.

பூமியின் உட்புற மையக்கரு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த மாற்றங்களுக்கும் பூமியின் காந்தப்புலத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது.

கடந்த சில பத்தாண்டுகளில், பல்வேறு சந்தர்ப்பங்களில் காந்த புலத்தில் திடீர் அதிர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. அதற்கும் உட்புற மையக்கரு எல்லையில் நாம் காண்பதற்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள நாங்கள் விரும்புகிறோம்," என்றார்.

மையக்கரு சுழல்வதும் விரைவில் நின்றுவிடப் போகிறது என்பது போன்ற எண்ணங்களை ஏற்படுத்துவதை தவிர்ப்பதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்கிறார் பேராசிரியர் விடால்.

இன்னமும் நிச்சயமற்ற பல விஷயங்கள் இருப்பதாக அவர் கூறினார்.

"இந்த முடிவுகளை நாம் சரியாக புரிந்து கொள்கிறோமா என்பதை 100% உறுதியாக எங்களால் சொல்லமுடியாது." என்றார் அவர்.

அறிவியல் அறிவின் எல்லைகள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கின்றன. பல ஆய்வாளர்களைப் போல் தான் சொன்னதும் கடந்த காலத்தில் தவறாகியிருப்பதாகக் கூறுகிறார் பேராசிரியர் விடால்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

பூமியின் உட்புற மையக்கரு வடிவம் மாறிவிட்டதா? விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல்

மாற்றுத்திறனாளி வீரர் சர்வதேச விண்வெளி நிலைய பயணம் மேற்கொள்ள அனுமதி

1 month 2 weeks ago

பிரிட்டனை சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர் ஜான் மெக்ஃபால். விபத்து ஒன்றில் வலது காலை இழந்த அவர், மனம் தளராமல் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றார். கடந்த 2006-ஆம் ஆண்டு செப்டம்பரில் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பாராலிம்பிக் குழுவின் உலக தடகள சாம்பியன் பட்டப் போட்டி 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.

2007ம் ஆண்டு பிரிட்டனில் நடைபெற்ற விசா பாராலிம்பிக் உலகக் கோப்பை போட்டியின் 200 மீட்டர் ஓட்டத்தில், அவர் தங்கப் பதக்கம் வென்றார். அந்தப் பந்தயத்தில் அவர் 26.84 நொடிகளில் இலக்கை அடைந்து சாதனை படைத்தார். கடந்த 2022-ம் ஆண்டு உலகின் முதல் மாற்றுத்திறனாளி விண்வெளி வீரராக ஜான் மெக்ஃபாலை ஐரோப்பிய விண்வெளி முகமை தேர்வு செய்தது. இதைத் தொடா்ந்து, அவர் விண்வெளிக்கு வெற்றிகரமாக செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், மாற்றுத்திறனாளிகள் விண்வெளிக்குச் செல்வதற்கு ஏற்ப என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் அந்த முகமை ஆய்வு மேற்கொண்டது.

இந்நிலையில், ஜான் மெக்ஃபால் விண்வெளிக்குச் செல்வதற்கு தடையாக எந்தவொரு தொழில்நுட்ப அல்லது மருத்துவக் காரணமும் இல்லை என்ற முடிவுக்கு வந்த ஐரோப்பிய விண்வெளி முகமை, அவர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்ல அனுமதித்து மருத்துவச் சான்றிதழ் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 6 மாதங்கள் வரை தங்கிப் பணியாற்ற உள்ளார். ஆனால், அவர் எப்போது சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்வார் என்ற தேதி இறுதி செய்யப்படவில்லை.

மாற்றுத்திறனாளி வீரர் சர்வதேச விண்வெளி நிலைய பயணம் மேற்கொள்ள அனுமதி

விண்வெளி பாய்ச்சல்; விண்வெளி ஆராய்ச்சியில் ஒட்சிசன், ரொக்கெட் எரிபொருளை உருவாக்கும் சீனா

1 month 3 weeks ago

Published By: DIGITAL DESK 3   07 FEB, 2025 | 05:21 PM

image
 

சீனாவின் விண்வெளி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான ஆய்வுகளில் முதன்முறையாக ஒட்சிசன் மற்றும் ரொக்கெட்டுக்கு  தேவையான எரிபொருளுக்கான பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆய்வு மனிதர்கள் உயிர்வாழ்வதற்கும் விண்வெளியின் எதிர்கால ஆய்வுக்கும் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.

முதல் முறையாக பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் செயற்கை ஒளிச்சேர்க்கை தொழில்நுட்பம், ஒட்சிசன் மற்றும் ரொக்கெட் எரிபொருளுக்கு தேவையான பொருட்களை உருவாக்கி டியாங்காங் விண்வெளி நிலையத்தில் உள்ள Shenzhou-19 குழுவினர் 2030 க்கு முன் நிலவில் தரையிறக்கம் உட்பட நீண்ட கால விண்வெளி ஆய்வுக்கு வழி வகுத்துள்ளனர்.

12 பரிசோதனைகள் டிராயர் வடிவ சாதனத்திற்குள் நடத்தப்பட்டுள்ளது. செமிகண்டக்டர் வினையூக்கிகளைப் பயன்படுத்தி கார்பன் டை ஒக்சைட் மற்றும் தண்ணீரை ஒட்சிசனாக மாற்றுகிறது, அதேநேரத்தில் எத்திலீன், ஹைட்ரோகார்பனை உருவாக்குகிறது, இது விண்கல உந்துசக்திகளை உருவாக்க பயன்படுகிறது என சீனா மேன்ட் ஸ்பேஸ் (சிஎம்எஸ்) இணையதளம் தெரிவித்துள்ளது.

மனித உயிர்வாழ்வதற்கும், விண்வெளியில் ஆய்வு செய்வதற்கும் முக்கியமான தொழில்நுட்ப ஆதரவை இந்த வேலை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/206087

சுனிதா வில்லியம்ஸ்: விண்வெளியில் அதிக நேரம் நடந்து சாதனை - ஈலோன் மஸ்க், டிரம்ப் கூறியது என்ன?

2 months ago
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நடையில் புதிய சாதனை

பட மூலாதாரம்,NASA

5 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நடையில் புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், ஜனவரி 30ஆம் தேதி, அதிக நேரம் விண்வெளி நடை மேற்கொண்டவர் என்ற சாதனையைச் செய்துள்ளார்.

விண்கலத்தை விட்டு வெளியேறி, பிரத்யேக பாதுகாப்பு உடையை அணிந்துகொண்டு, விண்வெளியில் பணிகளை மேற்கொள்வதே விண்வெளி நடை எனப்படுகிறது.

சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து வெளியே வந்து 5 மணிநேரம் 26 நிமிடங்கள் இதைச் செய்துள்ளார். இதன் மூலம், மொத்தமாக 60 மணிநேரம் 21 நிமிடங்கள் விண்வெளி நடை மேற்கொண்ட முன்னாள் விண்வெளி வீரர் பெக்கி விட்சனியின் சாதனையை, 62 மணிநேரத்திற்கு மேலாக விண்வெளி நடை புரிந்து அவர் முறியடித்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நடையில் புதிய சாதனை

பட மூலாதாரம்,NASA

இந்த விண்வெளி நடையின்போது, அவர் சர்வதேச விண்வெளி மையத்தின் வன்பொருட்களின் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். அங்கு இருந்த தேவையற்ற தொலைத்தொடர்பு சாதனங்களை அவர் அகற்றினார்.

மேலும், சுனிதா வில்லியம்ஸ் டெஸ்டினி ஆய்வகம் மற்றும் குவெஸ்ட் ஏர்லாக் என்ற பகுதிகளின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளைச் சேகரித்தார். அந்த மாதிரிகளில் நுண்ணுயிரிகள் ஏதேனும் இருக்கின்றனவா, வேறு என்ன பொருட்கள் இருக்கின்றன என்று ஆய்வு செய்யப்படும்.

 

இவை அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் 72வது விண்வெளி பயணத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டன. இந்த பயணம் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.

தற்போது சுனிதா வில்லியம்ஸ் மேற்கொண்டிருப்பது அமெரிக்காவின் 92வது விண்வெளி நடை. அவர் அமெரிக்க நேரப்படி காலை 8 மணிக்கு (EST) இந்த விண்வெளி நடையை தொடங்கினார்.

சுனிதா வில்லியம்ஸ் சிவப்புக் கோடுகள் கொண்ட விண்வெளி வீரருக்கான உடையை அணிந்திருந்தார். அவருடன் விண்வெளிக்குப் பயணித்த மற்றொரு வீரரான புட்ச் வில்மோரும் இதில் பங்கேற்றார்.

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நடையில் புதிய சாதனை

பட மூலாதாரம்,X/@SPACE_STATION

இந்த மாதத்திலேயே இதற்கு முன்பாக, விண்வெளி வீரர் நிக் ஹேக்குடன் இணைந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றொரு விண்வெளி நடையை மேற்கொண்டிருந்தார்.

புட்ச் வில்மோர் ஐந்தாவது முறையாகவும், சுனிதா வில்லியம்ஸ் ஒன்பதாவது முறையாகவும் விண்வெளி நடையை மேற்கொள்கின்றனர்.

8 மாதங்களாக விண்ணில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ்
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நடையில் புதிய சாதனை

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர்

அவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். ஒரு சில நாட்களே இருக்க வேண்டியிருக்கும் என்று திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக எட்டு மாதங்கள் ஆகியும் அவர்கள் இருவரும் இன்னும் பூமிக்குத் திரும்பவில்லை.

கடந்த ஆண்டு, விண்வெளிக்கு அவரை ஏந்திச் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டன.

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நடையில் புதிய சாதனை

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு, போயிங் ஸ்டார்லைனர் விண்கலம்

அவர்கள் முதலில் எட்டு நாட்கள் மட்டுமே தங்குவதற்காகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் பயணித்த விண்கலனின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு, வேறு சில கசிவுகள் காரணமாக அந்த விண்கலத்தைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இருக்காது எனக் கருதப்பட்டது.

எனவே அமெரிக்க தொழிலதிபர் ஈலோன் மஸ்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ்-இன் விண்கலத்தைக் கொண்டு அவர்களை பூமிக்குத் திரும்ப அழைத்து வருவது என 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவு செய்யப்பட்டது. அவர்களை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்குக் கொண்டு வருவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. பிறகு மார்ச் மாதம் என முடிவு செய்யப்பட்டது.

ஈலோன் மஸ்கிடம் வலியுறுத்திய டிரம்ப்
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நடையில் புதிய சாதனை

பட மூலாதாரம்,REUTERS

இந்நிலையில், இரு விண்வெளி வீரர்களையும் பூமிக்கு அழைத்து வரும்படி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு அதிபர் டிரம்ப் அறிவுறுத்தி இருப்பதாக அதன் நிறுவனரான மஸ்க் தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கதில், "சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள இரண்டு விண்வெளி வீரர்களையும் விரைவில் பூமிக்கு அழைத்து வருமாறு அதிபர் கூறியுள்ளார். நாங்கள் அப்படியே செய்வோம். பைடன் நிர்வாகம் இத்தனை காலம் அவர்களை அங்கேயே விட்டுவிட்டது மிகவும் மோசமானது," என்று பதிவிட்டுள்ளார்.

பைடன் நிர்வாகம் இரு வீரர்களையும் கைவிட்டுவிட்டதாக அதிபர் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கமான ட்ரூத் சோசியலில் பதிவிட்டுள்ளார்.

"மிகவும் தைரியமான இரண்டு வீரர்களையும் திரும்பக் கொண்டு வருமாறு அறிவுறுத்தியுள்ளேன், ஈலோன் விரைவில் செல்வார். அவர்கள் பத்திரமாகத் திரும்புவார்கள் என நம்புவோம், ஈலோனுக்கு வாழ்த்துகள்" என்று தெரிவித்திருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Checked
Sun, 04/06/2025 - 06:08
அறிவியல் தொழில்நுட்பம் Latest Topics
Subscribe to அறிவியல் தொழில்நுட்பம் feed