ஊர்ப்புதினம்

முட்டையின் விலையை உயர்த்துமாறு கோரிக்கை!

1 week 5 days ago

egg-1.jpg?resize=750%2C375&ssl=1

முட்டையின் விலையை உயர்த்துமாறு கோரிக்கை!

அண்மைக் காலமாக நாட்டில் முட்டையின் விலை குறைவடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, முட்டை ஒன்றின் சில்லறை விலை 30 ரூபாவுக்கும் குறைவாக இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக முட்டை உற்பத்தியாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் முட்டையின் விலையைக் குறைந்தபட்சம் 35 ரூபாயாக அதிகரிக்க வேண்டுமென முட்டை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1426836

எதிர்காலத்தில் மிகக் குறைந்த மின்சாரக் கட்டணத்தை கொண்ட நாடாக இலங்கை மாறும் - ஜனாதிபதி!

1 week 5 days ago

எதிர்காலத்தில் மிகக் குறைந்த மின்சாரக் கட்டணத்தை கொண்ட நாடாக இலங்கை மாறும் - ஜனாதிபதி!

%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%21+

எதிர்வரும் 4 ஆண்டுகளுக்குள் பிராந்தியத்தில் மிகக் குறைந்த மின்சாரக் கட்டணத்தைக் கொண்ட நாடாக இலங்கை மாறும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

'வெற்றி நிச்சயம் - கிராமம் நமதே' எனும் தொனிப்பொருளில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு நேற்று மித்தெனியவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். 

பல கட்சிகளாகப் பிரிந்து போட்டியிடுகின்றனர். 

வெற்றிபெற்ற பின்னர் இணைந்து ஆட்சியமைக்கின்றனர். 

அவ்வாறெனின் எதற்காகப் பிரிந்து போட்டியிட வேண்டும். 

எவ்வாறு போட்டியிட்டாலும் இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியே அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஆட்சியமைக்கும். 

தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டை வங்குரோத்து நிலையில் மீட்டுவருவதுடன், எதிர்வரும் காலங்களில் முழுமையாக நாட்டை நாம் மீட்டெடுப்போம். 

இந்தியப் பிரதமரின் வருகையையடுத்து இலங்கைக்கு பாரியதொரு தொகை கிடைக்கப்பெறும். 

தனியார் நிறுவனம், காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து இலங்கை மின்சார சபைக்கு விற்பனை செய்யவுள்ளது. 

குறைந்த விலையில் மின்சாரத்தைக் கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தில் நாம் அண்மையில் கையெழுத்திட்டோம். 

தெற்காசியப் பிராந்தியத்தில் இன்னும் 3 அல்லது 4 வருடங்களில் குறைந்த மின்கட்டணத்தைக் கொண்ட நாடாக இலங்கை மாறும் எனத் தாம் உறுதியளிப்பதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

https://www.hirunews.lk/tamil/401595/எதிர்காலத்தில்-மிகக்-குறைந்த-மின்சாரக்-கட்டணத்தை-கொண்ட-நாடாக-இலங்கை-மாறும்-ஜனாதிபதி

மோடி - தமிழர் தரப்பு சந்திப்பு; இன்னமும் முடிவு இல்லை! சுமந்திரன் தெரிவிப்பு!

1 week 5 days ago

மோடி - தமிழர் தரப்பு சந்திப்பு; இன்னமும் முடிவு இல்லை! சுமந்திரன் தெரிவிப்பு!

2002660242.jpg

அடுத்த வாரம் இலங்கை வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசுவதற்கு வாய்ப்பளிக்கும்படி தமிழரசுக் கட்சியினர் உட்பட தமிழர் தரப்பு பிரதிநிதிகள் கோரியிருக்கின்றோம். ஆனால், இன்னமும் சந்திப்புக்கு இணக்கம் தெரிவிக்கப்படவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சந்திப்பு நடக்குமா என்பதும் உறுதிப்படுத்தப்படவில்லை. அந்தச் சூழ்நிலையில் தமிழர் தரப்பில் யார் சந்திப்பார்கள் என்ற கேள்விக்குப் பதில் அளிக்க முடியாது என தெரிவித்தார். 

இந்தியப் பிரதமரை அவர் உட்பட்ட தமிழர் தரப்பு பிரதிநிதிகள் சந்தித்துப் பேசுவர் என்று வெளியான செய்தி தொடர்பில் அவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சந்திப்புக்கான வாய்ப்பு கிடைக்குமா என்பது இதுவரை தெரியவில்லை. இந்திய அதிகாரிகள் இன்னும் தெளிவான பதில் எதனையும் எங்களுக்குத் தரவில்லை. சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்காத சூழ்நிலையில் அது பற்றி பேசுவது அர்த்தமற்றது. - என்றார்.

https://newuthayan.com/article/மோடி_-_தமிழர்_தரப்பு_சந்திப்பு;_இன்னமும்_முடிவு_இல்லை!_சுமந்திரன்_தெரிவிப்பு!

இலங்கையின் பொருளாதாரமும் தேசியப் பாதுகாப்பும் நேரடியாக கடல்சார் களத்துடன் பிணைக்கப்பட்டுள்ளன ; அமெரிக்க தூதுவர் ஜுலி சங்

1 week 5 days ago

30 MAR, 2025 | 09:17 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இந்தோ-பசிபிக் பிராந்தியம் உலகின் மிகவும் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் செல்வாக்கு மிக்க பகுதிகளில் ஒன்றாக தொடர்கிறது. ஒரு தீவு நாடாக, இலங்கையின் பொருளாதாரப் பாதுகாப்பும் தேசிய பாதுகாப்பும் நேரடியாக கடல்சார் களத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அமெரிக்க தூதுவர் ஜுலி சங், இலங்கையின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக கடல்சார் வர்த்தக வழிகள் அமைந்துள்ளதால், இவற்றைப் பாதுகாப்பதன் மூலம், இலங்கை அதன் எதிர்காலத்தை பாதுகாக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பு கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமெரிக்க தூதுவர் ஜுலி சங் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்,

இலங்கையில் தனது மூன்று ஆண்டுகளில், நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க திருப்பத்தைக் கண்டேன், ஆனால் பயணம் இன்னும் முடிவடையவில்லை. 

இலங்கையர்களில் கால் பகுதியினர் இன்னும் வறுமையில் வாழ்கின்றனர். எனவே நீண்ட காலமாகத் தேவைப்படும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் இலங்கை நீண்ட கால வளர்ச்சிப் பாதையில் செல்வதை உறுதி செய்வதற்கு அவசியமான அடுத்த படியாகும்.

இந்தோ-பசிபிக் பிராந்தியம் உலகின் மிகவும் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் செல்வாக்கு மிக்க பகுதிகளில் ஒன்றாக தொடர்கிறது.

ஒரு தீவு நாடாக, இலங்கையின் பொருளாதாரப் பாதுகாப்பும் தேசியப் பாதுகாப்பும் நேரடியாக கடல்சார் களத்துடன் பிணைக்கப்பட்டுள்ளன. 

இதன் காரணமாக, திறந்த, சுதந்திரமான மற்றும் அமைதியான இந்தோ-பசிபிக் பகுதியைப் பராமரிப்பதில் அனைவருக்கும் பங்கு உள்ளது.

இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் முக்கியமான அமைவிடம் காரணமாக பிராந்தியத்தில் வர்த்தக வழிகள் பாதுகாப்பாகவும் தடையின்றியும் இருப்பதை உறுதி செய்வதற்கு கடல்சார் கள விழிப்புணர்வு அவசியமாகும். 

ஏனெனில்  இலங்கையின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக கடல்சார் வர்த்தக வழிகள் அமைந்துள்ளன. இவற்றைப் பாதுகாப்பதன் மூலம், இலங்கை அதன் எதிர்காலத்தை பாதுகாக்கிறது.

கடல்சார் பாதுகாப்பு துறைமுகங்கள் அல்லது கடற்படை உள்கட்டமைப்பில் உள்ள அச்சுறுத்தல்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை. 

கடற்கொள்ளை, கடத்தல், போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத மீன்பிடித்தல் மற்றும் மனித கடத்தல் உள்ளிட்ட கடல்சார் களத்தில் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் என புதிய சவால்களுடன் விரிவடைகிறது. 

இவேவேளை, இலங்கையின் விரிவான பிரத்தியேக பொருளாதார மண்டலம் தேசிய பொருளாதார பாதுகாப்பிற்கு இன்றியமையாததாகும். 

ஏனெனில் இது கடல் வளங்களால் நிறைந்துள்ளது. ஆனால் இது சட்டவிரோத மீன்பிடி த்தலுக்கான இலக்காகவும் அமைகிறது.

அமெரிக்கா இந்த முக்கியமான பிராந்தியத்தில் உறுதியான பங்காளியாக தொடர்ந்தும் இருக்கும். தகவல் பரிமாற்றம் மற்றும் கூட்டுப் பாதுகாப்பிற்காக கடல்சார் கள விழிப்புணர்வு போன்ற துறைகளை மேம்படுத்துவோம். 

இந்தியப் பெருங்கடல் பிராந்தியமும், பரந்த இந்தோ-பசிபிக் பிராந்தியமும், உலகளாவிய வர்த்தகம் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு ஒருபோதும் இவ்வளவு முக்கியமானதாக இருந்ததில்லை.

இன்று எதிர்கொள்ளும் சவால்கள் இருந்தபோதிலும், பகிரப்பட்ட எதிர்காலம் பிரகாசமானது. அபிவிருத்தி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை ஆகிய நமது பகிரப்பட்ட இலக்குகள் அடையக் கூடியவை என்பதை நினைவில் கொள்வோம் என்றார்.

https://www.virakesari.lk/article/210582

மியன்மார் நிலநடுக்கம் – செல்வந்த நாடுகளிடம் சஜித் கோரிக்கை

1 week 5 days ago

ssajith.jpg?resize=750%2C375&ssl=1

மியன்மார் நிலநடுக்கம் – செல்வந்த நாடுகளிடம் சஜித் கோரிக்கை.

மியன்மாரில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதாக  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” மியன்மாரில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் ஏராளமான உயிர்கள் பலியாகியுள்ளன. ஏராளமான சொத்துக்களும் அழிந்துள்ளன. இந்த அவல நிலையை எதிர்கொண்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த அனர்த்தத்தில் காணாமல் போன மக்கள் மற்றும் விலங்குகளின் உயிர்களை பாதுகாக்க உரிய தரப்புகளுக்கு இயலுமை கிட்டட்டும் எனத் தான் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்  இம்மக்களுக்கு இயன்ற அதிகபட்ச உதவிகளையும்,  நிவாரணங்களையும், அவசர மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகளையும் பெற்றுக் கொடுக்குமாறு உலகின் செல்வந்த நாடுகளிடம்  தான் கேட்டுக்கொள்வதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1426816

1,700 ரூபாய் வேதனத்தைக் கொடுக்க அரசாங்கம் முன்வருமாயின் ஆதரவு வழங்கத் தயார் – ஜீவன்

1 week 5 days ago

Jeevan.jpg?resize=675%2C375&ssl=1

1,700 ரூபாய் வேதனத்தைக் கொடுக்க அரசாங்கம் முன்வருமாயின் ஆதரவு வழங்கத் தயார் – ஜீவன்

”மலையக பெருந்தோட்ட மக்களுக்குக் காணி உறுதிப்பத்திரம் வழங்குவதற்கு இந்த வருட பாதீட்டில் அரசாங்கம் நிதி ஒதுக்காமைக்கு உரிய வகையில் பதிலொன்றை எதிர்பார்ப்பதாக” இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள தங்களது கட்சியின் வேட்பாளர்களுடன் கொட்டகலையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது ” தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாவினை  வேதன நிர்ணய சபையின் ஊடாக பெற்றுக்கொடுப்பதற்கு இந்த அரசாங்கம் முன்வருமாயின் அதற்கு தாம் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1426818

ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கை ஒருபோதும் நிறுத்தப்படாது – ஜனாதிபதி தெரிவிப்பு

1 week 5 days ago

Anura-Kumara-Dissanayake.webp?resize=750

ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கை ஒருபோதும் நிறுத்தப்படாது – ஜனாதிபதி தெரிவிப்பு.

”ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்கும் செயற்பாடு ஒருபோதும் நிறுத்தப்படாது” என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பெலியத்த பகுதியில் இடம்பெற்ற  மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி,  மக்களுக்காகச் சேவை செய்யாத பல அரசியல்வாதிகள் இன்று தோல்வியைத் தழுவியுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் ”எந்தவகையில் சதிகளும், முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டாலும் தற்போது ஊழல் வாதிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் ஒருபோதும் நிறுத்தப்பட மாட்டாது எனவும்,  பலருக்கு எதிராக தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ”சர்ச்சைக்குரிய பல சம்பவங்கள் தொடர்பில் ஓரிரு மாதங்களில் வழக்கு தொடரப்படவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இன்று பல வழக்கு விசாரணைகளிலிருந்து நீதிபதிகள் விலகுகின்றனர்  எனவும்,  இது சிறந்த விடயம்  அல்ல எனவும், நீதிபதிகள் தங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பிலிருந்து விலகக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் பொலிஸ் மா அதிபர் ஒருவர் கைதாவார் என வரலாற்றில் எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் எனவும், ஆனால் அது தற்போது நடந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, கடந்த காலங்களில் பொலிஸ்மா அதிபர்கள் கைதாகாமல் இருந்தமைக்கு அவர்களின் நேர்மையே காரணம் என கூறமுடியாது எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்  பதவி பேதமின்றி எதிர்காலத்தில் மேலும் பலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், குறிப்பாக அரசியல்வாதிகளுக்காக பணியாற்றிய பல அரச அதிகாரிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் விசாரணைகளில் இடம்பெறும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1426810

முல்லைத்தீவில் பண்பாட்டு நடுவம் அமைக்க இந்தியா ஒத்துழைக்கும் : இந்தியாவை உரிய முறையில் அணுகுக; ரவிகரன் எம்.பி ஆலோசனை

1 week 5 days ago

29 MAR, 2025 | 06:50 PM

image

முல்லைத்தீவில் பண்பாட்டு நடுவம் ஒன்றினை அமைப்பது தொடர்பில் தாம் இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளியுடன் பேசியுள்ளதாகத் தெரிவித்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இந்திய துணைத்தூதுவருக்கு முல்லைத்தீவில் பண்பாட்டு நடுவம் ஒன்றை அமைக்கும் எண்ணம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம், இந்தியாவை உரியமுறையில் அணுகுவதன் மூலம் முல்லைத்தீவில் பண்பாட்டு நடுவம் ஒன்றை அமைப்பதற்கான நிதி உதவியை இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ளமுடியுமென கூட்டுறவுப் பிரதி அமைச்சரும், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்கவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஆலோசனை ஒன்றையும் வழங்கியுள்ளார். 

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில், பண்பாட்டு நடுவம் அமைப்பது தொடர்பில் பேசப்பட்டது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இக்கூட்டத்தில் இதுதொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உமாமகேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் பண்பாட்டு நடுவம் ஒன்றினை அமைப்பதற்கு பல்வேறு வழிகளிலும் முயற்சிக்கின்றோம். இதுதொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் என்னோடு பேசியிருந்தார்.

குறித்த பண்பாட்டு நடுவத்தை முல்லைத்தீவு மாவட்டத்தில் நிறுவுவதற்கு இக்கூட்டத்தில் தீர்மானம் ஒன்றை எடுத்து, கலாச்சார அமைச்சின் ஊடாக இதற்குரிய நிதி ஒதுக்கீட்டினைப் பெறுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என்றார். 

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், 

முல்லைத்தீவு மாவட்டத்தில் பண்பாட்டு நடுவம் அமைப்பதுதொடர்பாக இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி அவர்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்து பேசியுள்ளேன்.

இந்தியத் துணைத் தூதுவருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பண்பாட்டு நடுவம் அமைக்கும் எண்ணமுள்ளது. அரசாங்கம் உரியவகையில் அணுகினால் முல்லைத்தீவில் பண்பாட்டு நடுவம் அமைப்பதற்கு இந்தியா நிதி உதவிகளை மேற்கொள்ளும் என்றார். 

இதனைத்தொடர்ந்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் பண்பாட்டு நடுவம் அமைக்கவேண்டுமென முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன், இவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானத்தை உரிய தரப்பினர்களுக்கு அனுப்பிவைப்பதெனவும் முடிவெடுக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/210566

தையிட்டி விவகாரம் என்பது 16 காணிக்காரர்களின் பிரச்சினை மாத்திரமல்ல, இது திட்டமிட்ட ஆக்கிரமிப்பு - காணி உரிமையாளர்

1 week 5 days ago

தையிட்டி விவகாரம் என்பது 16 காணிக்காரர்களின் பிரச்சினை மாத்திரமல்ல, இது திட்டமிட்ட ஆக்கிரமிப்பு நீங்களும் இதற்கு ஆதரவோ என்ற சந்தேகம் எழுக்கின்றது-; தேசிய மக்கள் சக்தியின் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னிலையில் காணி உரிமையாளர்

Published By: RAJEEBAN 29 MAR, 2025 | 05:49 PM

image

தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பில் கடந்த 20 திகதி, யாருடைய ஆதரவும் இல்லாமல் தன்னிச்சையாக சென்று, புத்த சாசன அமைச்சரை சந்தித்தோம். அவர் எங்களிற்கு ஒரு சாதகமான பதிலை தந்து நாங்கள் நம்பிக்கையோடு வந்து இரண்டு இரவுகள் கழிந்த நிலையில் அங்கே இன்னுமொரு சட்டவிரோத கட்டிடம் மிகக்கோலகலமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது என காணி உரிமையாளர்களில் ஒருவரான சுகுமாரி சாருஜன் தெரிவித்துள்ளார்.

வலிகாம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச அபிவிருத்திகுழு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர் இது தனியொரு 16 காணிக்காரர்களின் பிரச்சினை இல்லை, இதனை வந்து திட்டமிட்ட ஒரு ஆக்கிரமிப்பாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம், தடுக்க தடுக்க செய்து கொண்டு வாறீங்கள், நீங்களும் ஆதரவோ என்ற சந்தேகம் எங்களிற்கு எழுகின்றது என தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,

இராணுவம் அரசாங்கத்தின் உதவியுடன் ஒரு பெரிய விகாரையை கட்டியுள்ளது, அது தொடர்பில் நாங்களிள் ஆளுநரிடம் போயிருக்கின்றோம். முன்னைய தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் போயிருக்கின்றோம்.

இது முன்னைய அரசாங்கங்கள் இனவாதமாக செயற்பட்ட விடயம் என நீங்கள் ஆட்சிக்கு வந்த காலத்தில் தெரிவித்திருந்தீர்கள்-இதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.

எமது ஆட்சியில் இது இடம்பெறாது என  எமக்கு வாக்குறுதிகள் தந்திருந்தீர்கள்.

ஆளுநரும் அறிக்கை எழுதுகின்றார் எழுதுகின்றார் இன்றுவரை எழுதி முடியவில்லை.

கடந்த 20 திகதி, யாருடைய ஆதரவும் இல்லாமல் தன்னிச்சையாக சென்று, புத்த சாசன அமைச்சரை சந்தித்தோம்.

அவர் எங்களிற்கு ஒரு சாதகமான பதிலை தந்து நாங்கள் நம்பிக்கையோடு வந்து இரண்டு இரவுகள் கழிந்த நிலையில் அங்கே இன்னுமொரு சட்டவிரோத கட்டிடம் மிகக்கோலகலமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தாங்கள் என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றீர்கள்?

பிரதேச செயலகம் தொடர்பாகவோ அல்லது இந்த பிரதேசத்திலிருந்து மக்கள் தொடர்பாக தெரிவுசெய்யப்பட்ட தாங்களோ இது தொடர்பாக அறிந்திருக்கின்றீர்களா? அல்லது இன்றுவரை இது தொடர்பில் எதுவும் தெரியாது என்ற பதிலைதான் கூறப்போகின்றீர்களா?

இது தொடர்பான நடவடிக்கை என்ன கட்டத்தில் உள்ளது என்பதை இந்த இடத்தில் மக்களிற்கு நீங்கள் தெரியப்படுத்தவேண்டும்.

இது தனியொரு 16 காணிக்காரர்களின் பிரச்சினை இல்லை, இதனை வந்து திட்டமிட்ட ஒரு ஆக்கிரமிப்பாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம், தடுக்க தடுக்க செய்துகொண்டு வாறீங்கள் நீங்களும் ஆதரவோ என்ற சந்தேகம் எங்களிற்கு எழுகின்றது,

இதற்கு உடனடியாக தீர்வை தரவேண்டும், இது சம்பந்தமாக தங்கடை பதிலை தரவேண்டும்.

நீங்கள் சட்டத்தினால் செய்ய முடியும் என தெரிவிக்கின்றீர்கள். எங்களிற்கு இந்த நாட்டின் சட்டத்திலேயோ நீதியிலோ நம்பிக்கை இல்லை. நீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்ட பல விடயங்களை ஏதேச்சதிகாரமாக முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றார்கள், நாங்கள் குறுந்தூர் மலையை உதாரணமாக பார்க்கலாம், மேலதிக கட்டிடம் கட்டக்கூடாது என நீதிமன்றம் சொல்லியும், கட்டிக்கொண்டுதான் இருக்கின்றார்கள், சட்டத்திடம் அந்த பிரச்சினையை விட்டுவிட்டால் பின்னர் அதனை பொதுவெளியில் கதைக்க முடியாது.

அதனை விடுத்து ஏன் நீங்கள் மற்றபக்கமாக பார்க்ககூடாது சம்பந்தப்பட்ட பௌத்த பிக்குவோ அல்லது பௌத்தசாசன அமைச்சோ நாங்கள் பொய் பிரச்சாரம் செய்கின்றோம் என சிறையில் போடலாம் ஏன் போடவில்லை, உங்கள் பக்கத்தில் உறுதிகளோ ஆவணங்களோ இல்லை என்று நிச்சயமாக தெரிந்தும் வழக்கு தொடரகோருகின்றார்கள் என்றால், உங்களுக்கு நன்கு தெரியும் அந்த இடத்தில தீர்ப்பொன்று வரும்போது நீங்கள் அதிகார துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டு உங்களிற்கு சார்பாக சட்டத்தை மாற்றலாம் என்ற நம்பிக்கையில்தான் வழக்கிற்கு கூப்பிடுகின்றீர்கள்.

உங்களிடத்தில் எந்தவொரு ஆவணமும் இல்லை எங்களிடத்தில் உறுதி இருக்கின்றது ஏன் நாங்கள் நீதிமன்றம் செல்லவேண்டும்.

பிரதேச செயலகத்தில், கச்சேரியில் சகல ஆவணங்களும் உள்ளன. ஆதனை எடுத்துபாருங்கள், காணி அமைச்சின் ஊடாக இந்த பிரச்சினையை தீருங்கள்.

https://www.virakesari.lk/article/210564

சுழிபுரத்தில் இறந்தவர்களை புதைக்கும் காணியை தனியார் வாங்கியதால் எழுந்துள்ள சர்ச்சை

1 week 5 days ago

29 MAR, 2025 | 06:56 PM

image

சுழிபுரம் - திருவடிநிலை பகுதியில் சடலம் புதைக்கும் காணியை தனியார் ஒருவர் வாங்கியதால் சடலத்தை புதைப்பதற்கு மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த விடயமானது வெள்ளிக்கிழமை (28) சங்கானை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் இளைஞர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

காலம் காலமாக சடலங்களை புதைத்து வந்த காணியை தனியார் ஒருவர் வாங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த காணியானது யாருடைய பெயரில் இருக்கிறது என பிரதேச சபையிடம் நாங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக கோரியிருந்த போதும் அவர்கள் அதற்கு பதில் எதுவும் வழங்கவில்லை.

150ற்கும் மேற்பட்ட சடலங்களை புதைத்த இடத்தை வாங்கிய நபர் அதில் உள்ள கல்லறைகளை இடித்துவிட்டு சுற்றுலா மையத்துக்கான கட்டடம் அமைக்கப்போவதாக கூறுகின்றார்.

அத்துடன் ரொஜீனா என்ற சிறுமி படுகொலை செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அந்த பகுதியில் குறித்த சிறுமியின் உடலம் புதைக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கானது இன்னமும் நிறைவடையவும் இல்லை.

அந்த நிலத்தை வாங்கியதாக கூறியவரிடம் நாங்கள் சென்று, எவ்வளவு பணம் என்றாலும் பிரச்சினை இல்லை, அந்த நிலத்தை நாங்கள் வாங்குகின்றோம் என கேட்டோம். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்தார்.

இது குறித்து பல்வேறு தரப்பினருக்கும் கடிதங்களை நாங்கள் அனுப்பியுள்ளோம். இதுவரை பதிவுத் தபாலில் அனுப்பிய கடிதங்களுக்கு 25 ஆயிரம் ரூபா வரை செலவிட்டுள்ளோம். ஆனால் இந்த பிரச்சனையை தீர்ப்பதாக கடிதம் அனுப்புகின்றார்களே தவிர எந்தவிதமான நேரடி விசாரணைகளுக்கும் அழைக்கவில்லை.

பொன்னாலையில் மாற்றுக்காணியை பிரதேச செயலகத்தினர் வழங்கினர். ஆனால் அந்த காணியில் ஒரு முழம் கூட தோண்ட முடியாது. அந்த நிலத்தில் சடலத்தை புதைத்தால் 15 வருடங்களானாலும் மக்கிப்போகாது.

எமது பகுதியில் இருந்து சடலத்தை அந்த பகுதிக்கு கொண்டு செல்லவேண்டும் என்றால் 25ஆயிரம் ரூபா வாகனத்துக்கு செலவிட வேண்டும். ஆகையால் இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன்போது குறுக்கிட்ட பொன்னாலை பகுதியைச் சேர்ந்த ஒருவர், தமது இடம் ஒரு இடுகாடு இல்லை என்றும், அங்கு சடலத்தை புதைப்பதற்கு அனுமதி வழங்க மோட்டோம். இதற்கான மாற்றுத் தீர்வினை கொண்டுவர வேண்டும் என்றார்.

பொன்னாலையில் அந்த காணி வழங்கப்படவில்லை. மூளாய் பகுதியிலேயே வழங்கப்பட்டது என சங்கானை பிரதேச செயலர் கவிதா உதயகுமார் தெரிவித்தார்.

VideoCapture_20250329-164338.jpg

VideoCapture_20250329-164344.jpg

20250328_161111__1_.jpg

https://www.virakesari.lk/article/210563

மாத்தளை வதைமுகாம்களுக்கு கோட்டா பொறுப்புக்கூற வேண்டும்!

1 week 5 days ago


மாத்தளை வதைமுகாம்களுக்கு கோட்டா பொறுப்புக்கூற வேண்டும்!

நாட்டில் 1988, 1989 ஆம் ஆண்டு கலவர காலப்பகுதியில் மாத்தளை மாவட்டத்தில் இடம்பெற்ற நபர்களை காணமலாக்கிய பல்வேறு சம்பவங்களில், அப்போது இராணுவத்தின் மாவட்டத்துக்கு பொறுப்பான இராணுவ ஒருங்கிணைப்பாளராக கடமையாற்றிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்புக் கூற வேண்டும் என்று காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் ஒன்றியம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.

நாட்டில் 1988, 1989 ஆம் ஆண்டு கலவர காலப்பகுதியில் மாத்தளை மாவட்டத்தில் இடம்பெற்ற நபர்களை காணமலாக்கிய பல்வேறு சம்பவங்களில், அப்போது இராணுவத்தின் மாவட்டத்துக்கு பொறுப்பான இராணுவ ஒருங்கிணைப்பாளராக கடமையாற்றிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்புக் கூற வேண்டும் என்று காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் ஒன்றியம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.

  

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப ஒன்றியத்தின் செயலாளர் மரீன் நிலாஷானி கருத்து தெரிவிக்கையில், “2012 ஆம் ஆண்டு மாத்தளை மாவட்ட வைத்தியசாலையில் மனித புதைகுழியொன்று தோற்றம் பெற்றது.

அதுதொடர்பில் முன்னெடுக்கப்பட்ட வைத்திய பரிசோதனைகளில், 1986 – 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளியேற்றப்பட்ட சடலங்கள் என்பது அதில் உறுதிபடுத்தப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே இதுதொடர்பான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதுதொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து இதனை மூடிமறைத்து விட்டார்கள்.

1988, 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மாத்தளை மாவட்டத்துக்கு பொறுப்பான இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாக கோட்டபாய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரராக இருந்தமையினாலேயே இந்த விடயம் மூடி மறைக்கப்பட்டது.

கோட்டாபய ராஜபக்ஷ கடமையாற்றி காலப்பகுதியில் மாத்திரம் மாத்தளை மாவட்டத்தில் 720 வரையிலானவர்கள் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலப்பகுதியில் மாத்தளை மாவட்டத்திலிருந்த சகல பொலிஸ் நிலையங்களுக்கும், ஐந்து வருடங்களுக்கு மேல் பழைமையான சகலரது ஆவணங்களையும் நீக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, பட்டலந்த வதைகூடத்தை ரணில் முன்னெடுத்துச் சென்ற காலத்தில், மாத்தளை முன்னெடுக்கப்பட்டு வந்த சகல வதைகூடங்களையும் செயற்படுத்தியது, வழிநடத்தியது கோட்டாபய ராஜபக்ஷ ஆவார்” -ன்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

https://seithy.com/breifNews.php?newsID=331299&category=TamilNews&language=tamil


முல்லையில் கர்ப்பிணி தாய்மாருக்கு பழுதடைந்த அரிசி விற்பனை; சுகாதார பரிசோதகர்கள் எடுத்த முடிவு

1 week 6 days ago

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மற்றும் வள்ளிபுனம் பகுதிகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளருக்கு சுமார் 30 ஐயாயிரம் ரூபா தண்டம் நீதிமன்றினால் இன்றையதினம் விதிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் பழுதடைந்த அரிசியை கர்ப்பிணி தாய்மாருக்கு விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் 22.03.2025 வள்ளிபுனம் பொது சுகாதார பரிசோதகர் றொய்ஸ்ரன், விசுவமடு பொது சுகாதார பரிசோதகர் சந்திரமோகன், உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸ் ஆகியோர் இணைந்து,

புதுக்குடியிருப்பு மற்றும் வள்ளிபுனம் பகுதிகளில் அமைந்துள்ள பிரபல விற்பனை நிலையங்களில்  சோதனை நடவடிக்கை ஒன்றினை  மேற்காெண்டிருந்தனர்.

இதன்போது திகதி காலாவதியான 700kg அரிசி, பிஸ்கட் பைக்கற்றுகள்  கைப்பற்றப்பட்டிருந்தது.

காலாவதி பொருட்கள் கைப்பற்றப்பட்ட பிரபல விற்பனை நிலைய உரிமையாளர்களிற்கு எதிராக இன்று வெள்ளிகிழமை முல்லைத்தீவு  மேலதிக நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன்போது உரிமையாளர்களை குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம் 35,000 ரூபா தண்டம் விதித்ததுடன் கடுமையான எச்சரிக்கையும் வழங்கப்பட்டிருந்தது.

17431562090.png

17431562091.png

17431562092.png

https://thinakkural.lk/article/316625

நாமினி விஜயதாசவிற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளரின் துணிச்சலான பெண் விருது

1 week 6 days ago

29 MAR, 2025 | 02:33 PM

image

இலங்கையின் பெண் பத்திரிகையாளர் நாமினி விஜயதாச புலனாய்வு இதழியலிற்கு ஆற்றிவரும் பெரும் பங்களிப்பையும் ஊழலை அம்பலப்படுத்துவதற்கான அவரது தளர்ச்சியற்ற அர்ப்பணிப்பு மற்றும் இலங்கையில் வெளிப்படைதன்மையை பரப்புரை செய்தல் என்பவற்றிற்காக அமெரிக்க இராஜாங்க செயலாளரின் சர்வதேச துணிச்சலான பெண் விருதை வழங்கி கௌரவித்துள்ளது.

மூன்று தசாப்தங்களிற்கு மேலாக பத்திரிகையாளராக பணிபுரியும் நாமினி விஜயதாச தனது செய்தி அறிக்கையிடவில் துணிச்சலையும் நேர்மையையும் வெளிப்படுத்தி வந்துள்ளார். இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் மனித பாதிப்புகளை பதிவு செய்வதன் மூலம் தனது பத்திரிகையாளர் பணியை ஆரம்பித்த அவர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான குரலாக விளங்கினார்.

அவரது புலனாய்வு பணி அரசாங்கத்தின் முறைகேடுகள் மற்றும் மனித உரிமை மீறல்களை வெளிச்சம் போட்டுக்காட்டியது, தனிப்பட்ட ஆபத்தையும் பொருட்படுத்தாமல் அவர் அந்த பணியை முன்னெடுத்தார்.

https://www.virakesari.lk/article/210534

இராணுவத்தினராக இருந்தாலும் தண்டனை நிச்சயம் - சரத் பொன்சேகா

1 week 6 days ago

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் இராணுவத்தினராக இருந்தாலும் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும் அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை  என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள பயணத்தடை குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜகத் ஜயசூரிய, வசந்த கரண்ணாகொட ஆகியோர் போர்க்களத்தின் முன்வரிசையில் நின்று போரிட்டவர்கள் அல்லர். பின்வரிசையில் நின்றவர்கள்.

போர்க்களத்தின் பின்வரிசையில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்திருந்தால் அதனை விசாரிக்க வேண்டும்.

நான் இராணுவத் தளபதியாக இருந்த காலத்திலேயே ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்திருந்தேன்.

நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் இவர்களில் இருவரைப் பற்றி நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் விமர்சித்துள்ளேன்.

அதேபோன்றே போர்க்களத்தின் முன்னரங்கில் நின்று போரிட்ட சவேந்திர சில்வா எதுவித தவறும் செய்யவில்லை என்று உறுதிபட என்னால் கூறமுடியும் என தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/316628

மாத்தளையில் இயங்கிய வதைகூடங்கள் : கோட்டா பொறுப்புக்கூற வேண்டுமென காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் ஒன்றியம் தெரிவிப்பு

1 week 6 days ago

29 MAR, 2025 | 12:45 PM

image

நாட்டில் 1988, 1989 ஆம் ஆண்டு கலவர காலப்பகுதியில் மாத்தளை மாவட்டத்தில் இடம்பெற்ற நபர்களை காணமலாக்கிய பல்வேறு சம்பவங்களில், அப்போது இராணுவத்தின் மாவட்டத்துக்கு பொறுப்பான இராணுவ ஒருங்கிணைப்பாளராக கடமையாற்றிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்புக் கூற வேண்டும் என்று காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் ஒன்றியம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப ஒன்றியத்தின் செயலாளர் மரீன் நிலாஷானி கருத்து தெரிவிக்கையில்,

2012 ஆம் ஆண்டு மாத்தளை மாவட்ட வைத்தியசாலையில் மனித புதைகுழியொன்று தோற்றம் பெற்றது. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட வைத்திய பரிசோதனைகளில், 1986 – 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளியேற்றப்பட்ட சடலங்கள் என்பது அதில் உறுதிபடுத்தப்பட்டது. 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே இதுதொடர்பான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதுதொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து இதனை மூடிமறைத்து விட்டார்கள்.

1988, 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மாத்தளை மாவட்டத்துக்கு பொறுப்பான இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாக கோட்டாபய ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரராக இருந்தமையினாலேயே இந்த விடயம் மூடி மறைக்கப்பட்டது.

கோட்டாபய ராஜபக்ஷ கடமையாற்றிய காலபகுதியில் மாத்திரம் மாத்தளை மாவட்டத்தில் 720 வரையிலானவர்கள் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலப்பகுதியில் மாத்தளை மாவட்டத்திலிருந்த சகல பொலிஸ் நிலையங்களுக்கும், ஐந்து வருடங்களுக்கு மேல் பழைமையான சகலரது ஆவணங்களையும் நீக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

எனவே, பட்டலந்த வதைகூடத்தை ரணில் முன்னெடுத்துச் சென்ற காலத்தில், மாத்தளை முன்னெடுக்கப்பட்டு வந்த சகல வதைகூடங்களையும் செயற்படுத்தியது, வழிநடத்தியது கோட்டாபய ராஜபக்ஷ ஆவார்  என்று சுட்டிக்காட்டியுள்ளார். 

https://www.virakesari.lk/article/210512

இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படலாம் – எச்சரிக்கை விடுப்பு

1 week 6 days ago

6e221f9b-22a7-4dbe-a0e7-0fcd001c029f-ear

இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படலாம் – எச்சரிக்கை விடுப்பு.

மியன்மாரில் நடந்தது போன்று என்றோ ஒருநாள் இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்க நிகழ்வு இடம்பெறலாம். அதற்கேற்ற வகையில் போதுமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கையிலும் சிறிய அளவிலான நிலநடுக்க நிகழ்வுகளின் பதிவு அண்மித்த காலப்பகுதியில் அதிகரித்து வருகிறது. இலங்கையின் கீழாகவும் இலங்கைக்கு அண்மித்ததாகவும் சிறிய அளவிலான நிலநடுக்க நிகழ்வுகள் பதிவாகி வருகின்றது.

எனினும் இதுவரை இவை சேதங்களை ஏற்படுத்தவில்லை. ஆனால் என்றோ ஒருநாள் இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்க நிகழ்வு இடம்பெறலாம். அதற்கேற்ற வகையில் போதுமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும்.

ஜப்பான் போன்ற நாடுகளில் இதற்குரிய செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வெற்றியும் பெற்றுள்ளன. ஆகக்குறைந்தது புவிநடுக்கத்திற்குரிய விழிப்புணர்வு செயற்திட்டங்களை இலங்கையின் அனைத்து மக்கள் மத்தியிலும் முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.

இல்லையேல் 2004ம் ஆண்டின் சுனாமி அனர்த்தத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தது போன்று ஒரு புவிநடுக்க அனர்த்தத்தினாலும் இலங்கையில் ஆயிரக்கணக்கானவர்களின் இறப்பை நாம் தவிர்க்க முடியாது என்பது உண்மை. என மேலும் தெரிவித்துள்ளார்

https://athavannews.com/2025/1426796

ஆனையிறவு உப்பளம் தொழிற்சாலை இன்று கையளிப்பு

1 week 6 days ago

ஆனையிறவு உப்பளம் தொழிற்சாலை இன்று கையளிப்பு

March 29, 2025 12:14 pm

ஆனையிறவு உப்பளம் தொழிற்சாலை இன்று கையளிப்பு

நவீன உபகரணங்கள் மற்றும் வசதிகளுடன் கூடிய ஆனையிறவு உப்பளம் தொழிற்சாலை இன்று சனிக்கிழமை மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் காலங்களில், அரச இலட்சினையில்  இங்கு உற்பத்தியாகும் உப்பு சந்தைக்கு விநியோகிக்கப்படுமன கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தியமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஆனையிறவு உப்பளம் தொழிற்சாலை ஊடாக கூடுதல் நிவாரண விலையில் ‘ரஜ லுணு’ என்ற வர்த்தக நாமத்தில் உப்பு சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://oruvan.com/elephant-pass-salt-factory-to-be-handed-over-today/

பொலிஸார் அடாவடியில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை - பவானந்தராஜா எம்.பி.!

1 week 6 days ago

29 MAR, 2025 | 09:08 AM

image

பொலிஸாரின் அடாவடித்தனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற சங்கானை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின் ஊடகவியலாளர் ஒருவர் "அண்மைக் காலமாக பொலிஸாரின் அடாவடிகள் அதிகரித்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட பொலிஸார் நெல்லியடியில் ஒரு வீட்டுக்குள் சென்று அடாவடியில் ஈடுபடுகின்ற காணொளி வெளியாகி இருந்தது. இதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கின்றீர்கள்" என கேள்வி எழுப்பியவேளை அவர் இவ்வாறு பதிலளித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீ பவானந்தராஜா மேலும் தெரிவிக்கையில்,

பொலிஸாருக்கு போதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இருந்தாலும் பொலிஸார் சில இடங்களில் தாங்கள் நினைத்தபடிதான் நடக்கின்றனர். அவர்களது செயற்பாடுகள் பிழையாக இருந்தால் அந்த பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/210500

ஜனாதிபதி அநுரவின் இந்திய விஜயத்தின் போது எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை மீளாய்வு செய்யவுள்ளார் பிரதமர் மோடி - இந்திய வெளிவிவகார அமைச்சு

1 week 6 days ago

Published By: DIGITAL DESK 3 28 MAR, 2025 | 03:27 PM

image

(எம்.மனோசித்ரா)

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது இணக்கப்பாடு எட்டப்பட்ட ஒத்துழைப்பு மேம்பாட்டு திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்யவுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பை ஏற்று ஏப்ரல் 4 - 6 வரை பிரதமர் மோடி இலங்கை வரவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அநுராதபுரத்திற்குச் சென்று புனித ஸ்ரீமகா போதியில் மத வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். அதேவேளை இந்திய அரசின் நிதி உதவியுடன் இலங்கையில் செயல்படுத்தப்படவுள்ள பல திட்டங்களையும் பிரதமர் மோடி ஆரம்பித்து வைக்கவுள்ளார். குறிப்பாக இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாறிக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய மாத்திரமின்றி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகளையும் பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது ஏற்றுக் கொள்ளப்பட்ட 'பகிரப்பட்ட எதிர்காலத்துக்கான கூட்டாண்மைகளை வளர்ப்பதற்கான' கூட்டுத் தொலைநோக்குப் பார்வையில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒத்துழைப்புத் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பிரதமர் மோடி ஆய்வு செய்யவுள்ளமை விசேட அம்சமாகும்.

பிரதமர் நரேந்திர மோடி இறுதியாக 2019ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இந்தியாவும் இலங்கையும் வலுவான கலாச்சார மற்றும் வரலாற்று இணைப்புகளுடன் நாகரிக பிணைப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. அந்த வகையில் இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான வழக்கமான உயர் மட்ட ஈடுபாடுகளின் ஒரு பகுதியாகவும், மேலும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பன்முக கூட்டாண்மையை ஆழப்படுத்துவதில் மேலும் உத்வேகத்தை அளிக்கும் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் தாய்லாந்து மற்றும் இலங்கை பயணம் மற்றும் 6ஆவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்பது, 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' கொள்கை, 'கிழக்கு நோக்கி செயல்படுங்கள்' கொள்கை, 'மகாசாகர்' (பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்) தொலைநோக்குப் பார்வை மற்றும் இந்தோ-பசுபிக் தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் என வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/210434

கடலட்டை ஏற்றுமதி: யாழ்ப்பாணத்தின் வசப்படுத்தப்படாத வாய்ப்பு

1 week 6 days ago

SeaCucumbers2-593x1024-1-e1743151713443.

Columnsஜெகன் அருளையா

கடலட்டை ஏற்றுமதி: யாழ்ப்பாணத்தின் வசப்படுத்தப்படாத வாய்ப்பு

வளரும் வடக்குஜெகன் அருளையா

ஜெகன் அருளையா

ஜெகன் அருளையா

திரு.ஞானேந்திரன் யாழ்ப்பாணத்தின் மானிப்பாய்க்கு அருகேயுள்ள நவாலியைச் சேர்ந்தவர். ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் 1975 இல் பிறந்த அவர் மூன்றாம் வகுப்பு முதல் க.பொ.த. உயர்தரம் வரை செய்ண்ட் பட்றிக்ஸ் கல்லூரியில் படித்தார். யாழ்ப்பாணத்தின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றான இக்கல்லூரி யாழ் கோட்டையிலிருந்து சிறிது தூரத்தில் தான் இருக்கிறது. இனப்போர் உக்கிரமாக இருந்த காலத்தில் ஞானேந்திரன் பிலிப்பைன்ஸில் இருந்த அவரது தந்தையின் சகோதரருடன் வசிப்பதற்காகச் சென்றுவிட்டார். இங்கு தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு பட்டத்தைப் பெற்றுக்கொண்டு அவர் 2002 இல் தாயகம் திரும்பினார். போரிலிருந்து தப்பிக்கவும், புதிய சந்தர்ப்பங்களைத் தேடியும் பெரும்பாலான இளையோர் வெளிநாடுகளுக்குச் சென்றுகொண்டிருந்த காலமது. இப்போது போர் முடிந்து விட்டது ஆனாலும் புதிய சந்தர்ப்பங்களைத் தேடி மத்திய கிழக்கு பாலைவனங்களையும், உடல் விறைக்கும் ரொறோண்டோவையும், மாசடைந்த காற்றைச் சுவாசிக்கவென லண்டனை நோக்கியும் இளையோர் இன்னும் படையெடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஞானேந்திரனுக்கோ இலங்கை இன்னும் ஒரு சந்தர்ப்ப பூமியாகவே விளங்குகிறது. அவர் ஒரு வியாபாரிகள் குடும்பத்திலிருந்து வந்தவரல்ல; முதலீடு செய்வதற்கான பணமும் அவரிடம் இருந்திருக்கவில்லை. எனவே அவருக்கு இருந்த ஒரே வழி வேறு நிறுவனங்களில் பணியாற்ற இணைந்து கொள்வதே. முதலில் அவர் இணைந்தது வியாபார சாதனங்களைச் சந்தைப்படுத்தும் ‘சிலோன் பிஸினெஸ் அப்பிளையன்ஸெஸ்’ (Ceylon Business Appliances (CBA)) என்ற நிறுவனத்தில். அதைத் தொடர்ந்து ஒரு பயண நிறுவனத்தில் மூன்று வருடங்கள் பணியாற்றினார்.

முதல் வியாபார முயற்சிக்கான ஞானேந்திரனின் அதிரடிப் பிரவேசம் சொந்தமானதொரு பயண நிறுவனம். கொழும்பு, வத்தளையில் நிறுவப்பட்ட இந்நிறுவனத்திற்குப் பெயர் ‘ஸ்கைவே இண்டர்நாஷனல்’ (Skyway International). துரதிர்ஷஷ்டவசமாக இணையவழி மூலம் விமானப் பயணச்சீட்டுகளை வாங்கும் பழக்கம் இக்காலகட்டத்தில் தான் ஆரம்பமாகியிருந்தது. பயணச் சீட்டுகளை விற்று வருமானம் சம்பாதிக்கும் உலகின் பல பயண முகவர்களது வயிற்றிலடிக்கவென வந்த இத் தொழில்நுட்பம் ஞானேந்திரனையும் இத் தொழிலிலிருந்து துரத்தி விட்டது. 2014 இல் ஞானேந்திரன் ஒரு முன்னணி கட்டுமான நிறுவனத்தில் இணைந்தார். விற்பனை நிர்வாகியாக இங்கு ஒரு வருடம் கடமையாற்றிய காலத்தில் இன்னுமொரு சந்தர்ப்பம் அவரைத் தேடி வந்தது. அதை அவர் இறுகப்பிடித்துக்கொண்டார்.

த் தோழன் ஒருவர் லண்டன் நகரின் அழகிய தேவாலயங்களில் ஒன்றான செயிண்ட் போல்ஸ் தேவாலயத்துக்கு அருகே ஒரு யப்பானிய உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். லண்டன் நகர மையத்தில் சட்ட, வியாபார, சுற்றுலாத் துறைகள் சங்கமிக்கும் சதுக்கத்தில் இருந்தது இந்த உணவகம். சிறந்த செலவாளிகள் எனப்படும் பணம் படைத்தோர் உலாவும் இடம் இது. யப்பானியரின் சிறந்த தெரிவாக இருப்பது கடலுணவு. ஞானேந்திரனும் அவரது சகாவும் லண்டன் வாழ் மேற்தட்டு வாசிகளின் சுவையறிந்து அவர்களுக்கு ‘யாழ்ப்பாணக் கடலுணவைத்’ தயாரித்து விருந்தோம்பினார்கள்.

Sea-Cucumber-Farming-View-from-Siritivu-

விளைவு யாழ்ப்பாணத்து குருநகர் மீன்பிடித் துறமுகத்தை ஆரம்பமாகவும் லண்டன் உணவகத்தை முடிவாகவும் கொண்ட உணவுச் சங்கிலியைப் பாதையாகக்கொண்டு ஞானேந்திரனின் ஏற்றுமதி வர்த்தகம் கருக்கொண்டமை. இருப்பினும் அதற்குத் தேவையான ஆரம்ப முதலீடு அவரிடம் இருக்கவில்லை. இதை நிவர்த்திக்க வழமையாக யாழ்ப்பாணத்தார் எதைச் செய்வார்களோ அதையே தான் ஞானேந்திரனும் செய்தார். மனைவியின் தங்க நகைகள் அடைவுகடைகளில் முடங்கிக்கொண்டன. எனது சில வருட கால யாழ்ப்பாண வாழ்வில் நகை அடகு பற்றி நான் கற்றுக்கொண்டது அதிகம். பணவீக்கத்தால் பாதிக்கப்படாத, தனது பெறுமதியை எப்போதும் தக்கவைத்துக்கொள்ளக்கூடிய ஒரு பண்டம் தங்கம். அவ்வப்போது பணமுடை ஏற்படுவதிலிருந்து தப்புதல் முதல், முட்டை, அரிசித் தட்டுப்பாட்டைச் சமாளிப்பது வரை, சிதைந்துபோன கூரையைச் செப்பனிடுவது முதல் வியாபார முதலீடுகள் வரை யாழ்ப்பாணத்தாருக்குக் கைகொடுத்து வருவது இந்த நகை அடகு சமாச்சாரம்.

முதலீட்டுக்குப் பணம் கிடைத்தமை மட்டும் ஞானேந்திரனுக்குப் போதுமானதாக இருக்கவில்லை; இவ்வியாபாரம் பற்றிய அறிவும் அவருக்குத் தேவையாகவிருந்தது. உலகமெங்கணும் வணிகர்கள் தேடுவது ஏமாறக்கூடிய வாடிக்கையாளரையே. ஒருவரது அறியாமை இன்னொருவரின் சட்டரீதியாகப் பணம் பண்ணும் சந்தர்ப்பம். தமிழ் பேச முடியாமையினால் யாழ்ப்பாணத்து வணிகர்களால் நான் பலதடவைகள் ஏமாற்றப்பட்டிருக்கிறேன். கடந்த பத்து வருடங்களாக நான் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தாலும் என்னிடமிருந்து கொஞ்சம் கூடுதலாகவே கறந்துகொள்ளும் சாதுரியத்தை வணிகர்கள் பழகிக்கொண்டுவிட்டார்கள்.

ஞானேந்திரன் சுமார் ஆறு மாதங்களாக, காலை வேளைகளில், 5 மணி முதல் 9 மணி வரை, குருநகர் மீன்பிடித் துறைமுகத்தில் உட்கார்ந்திருப்பார். படகுகள் கரையேறுவதையும் மீன் சந்தை பேரம் பேசுதல் கலகலப்படைவதையும் அவதானிப்பார். வலைஞர்களும் வணிகர்களும் சங்கமிக்கும் இம் மீனுலகத்தில் பணத்தைக் கைமாற்றும் அற்புத வித்தையை அவர் அங்குதான் கற்றுக்கொண்டார். புதிதாகச் சிக்கிய மீனுக்கும் இதர கடலுயிரினங்களுக்குமிடையேயான வித்தியாசங்களை அவர் புரிந்து கொண்டார். வெறுமையான படகுகளும் நிரம்பிய படகுகளும் கரைசேரும் நாட்களில் கால நிலை, பருவக்காற்று விலை என ஏற்ற இறக்கத்தைத் தீர்மானிக்கும் வித்தைகள் இப்போது அவருக்கு அத்துபடியாகியது. கடலுயிரினங்களின் கண்களைப் பிதுக்கிப்பார்த்து அவற்றின் நிறங்கள், உடல் மென்மையைக் கொண்டு அவற்றின் தராதரத்தைப் பிரித்துப்பார்க்க அவர் கற்றுக்கொண்டுவிட்டார். லண்டன் செயிண்ட் போல்ஸ் உணவக விருந்தினரது நாவுக்குச் சுவையளிக்கவல்ல சிறந்த கடலுணவைத் தரம்பிரித்தறிய அவரால் இப்போது முடிந்தது.

மீன் இப்போது வான் வழியாக ஏற்றுமதி செய்யப்படவேண்டும். ஒரு தொன் எடைக்குக் குறையாமல் ஏற்றுமதி செய்தால் மட்டுமே கட்டுப்படியாகும் என்ற நிலை. ஆனால் லண்டனின் பிரத்தியேக உணவகத்திற்க்கு இது தேவைக்கதிகமானது. இதனால் லண்டனில் வாழும் தரகர் ஒருவருடன் ஞானேந்திரன் அறிமுகப்படுத்தப்பட்டார். இத்தரகர் பெரும் தொகையான கடலுணவை இறக்குமதி செய்து லண்டனிலுள்ள சிறிய கடைகளுக்கு விநியோகம் செய்பவர். சிறிது காலத்தில் இந்த வியாபார உறவு கசப்பாகி முறிவில் முடிந்தது. ஆனால் இவ்வுறவின் போது ஞானேந்திரன் இன்னுமொரு வாடிக்கையாளரைச் சந்தித்தார். பிரித்தானியாவில் 4 கடைகளுக்குச் சொந்தக்காரரான ஒரு இந்தியரே அவர். 2017 இல் ஆரம்பித்த இந்த வணிக உறவு இப்போதுவரை தொடர்கிறது. வளர்ச்சியடைந்த ஞானேந்திரனின் வணிகம் மேலும் பல ஏற்றுமதி வணிகர்களுடன் உறவை ஏற்படுத்திக் கொடுத்தது.

காசாகும் கடலட்டை

Sea-Cucumber-Watchtower-576x1024-1.jpg

கடலுணவு வியாபாரம் காத்திரமான இலாபத்தை ஈட்டிக்கொடுக்கவும் ஞானேந்திரனது பார்வை கடலட்டைப் பண்ணை மீது தாவியது. இது ஞானேந்திரனுக்கு முற்றிலும் புதிய சமாச்சாரமல்ல. 1970 களில் அவரது தாத்தா உள்ளூர் மீனவர்கள் மற்றும் சுழியோடிகளிடமிருந்து கடலட்டைகளை வாங்கி உலரவைத்து சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்தவர். சிறு வயதுகளில் ஞானேந்திரனும் அவரது நண்பர்களும் உலர்ந்த கடலட்டைகளால் ஒருவருக்கொருவர் எறிந்து விளையாடுவது வழக்கம். இக்கடலட்டைகள் பண்ணைகளில் வளர்க்கப்பட்டவையல்ல. யாழ்ப்பாணத்தைச் சுற்றியுள்ள ஏறிகளிலும் குளங்களிலும் இவை சாதாரணமாகக் கிடைக்கின்றன.

யாழ்ப்பாணத்தின் கடற்கரையோரமாக இருக்கும் தீவுகளில் ஒன்றான லைடன் தீவிலிருக்கும் அல்லைப்பிட்டி கிராமத்தில் ஒரு கடலட்டை பண்ணை இருக்கிறது. தனது கடலட்டை வியாபாரத்தைப் பரீட்சித்துப் பார்க்க ஞானேந்திரன் இப்பண்ணையை வாங்கிக்கொண்டார். இரண்டு வருடங்களாக அதை நடத்தி ஓரளவு இலாபத்தையும் ஈட்டிக்கொண்டார். இதன் மூலம் வியாபார நுணுக்கத்தைக் கற்றுக்கொண்டபின் அவர் முற்றிலும் புதியதொரு பண்ணையை உருவாக்கத் தீர்மானித்தார். இதன் விளைவாக யாழ்ப்பாணத்திற்கும் மண்டைதீவிற்குமிடையில் இருக்கும் ஒரு சிறிய தீவான சிறித்தீவு இவரது கண்ணில் சிக்கிக்கொண்டது.

இரண்டு வருட பிரயத்தனத்தனத்தைத் தொடர்ந்து 2019 இல் ஞானேந்திரனுக்கு இக்கடற் பண்ணைக்கான அனுமதி கிடைத்தது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுமென எதிர்ப்புகளும் கிளம்பின. கடலிலோ அல்லது கரைப்பகுதிகளிலோ நிறுவப்படும் எந்தப் பண்ணையும் ஏன், வீட்டு நிர்மாணம் முதற்கொண்டு அனைத்து தொழிற்சாலைகளுமே சூழல் பாதிப்புக்குக் காரணமாகின்றன. இச்சூழல் பாதிப்பு பொருளாதார இலாபத்தை மீறிவிடுகிறதா என்பதே இங்குள்ள கேள்வி. கடற் பண்ணைகளுக்காக எடுக்கப்படும் இடங்கள் குறிப்பாக சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றனவா அல்லது இவ்விடங்கள் அப்பிரதேசத்தின் சூழல் சமநிலையைப் பேணுகின்றனவா? வலைகள் நீர்மட்டத்தில் இருக்கத் தேவையில்லை காரணம் கடலட்டைகள் கடலினடியில் வாழ்பவை. இதனால் மீன்கள் வலைகளுக்குள் சிக்காமல் இலகுவாகத் தப்பிச் செல்ல முடியும். சூழலை மாசுமடுத்தும் உணவுகள் பண்ணையில் சேர்க்கப்படுவதில்லை காரணம் தேவையான போஷாக்கை அட்டைகள் கடல் மண்ணிலிருந்தே எடுத்துக்கொள்கின்றன என்கிறார் ஞானேந்திரன். கடலட்டை வியாபாரம் பற்றி அரசாங்க அதிகாரிகளே அப்போது அறிந்திராத காலம். யாழ்ப்பாணத்தில் அப்போதுதான் இத்தொழில் பிரபலமாகிக்கொண்டிருந்தது.


இரண்டு வருடங்கள் இழுபறியின் பின்னர் 2021 இல் தான் ஞானேந்திரனுக்கு அனுமதி கிடைத்தது. சிறித்தீவுக்கு அருகில் சுமார் 20 ஏக்கர் கடல் நிலத்தில் ஞானேந்திரன் தனது பண்ணையை ஆரம்பித்தார். திருடர்களைக் கண்காணிக்க காவற் கோபுரம் நிர்மாணித்தல், வலைகளை நிறுவுதல், பணியாளர்களுக்கு பயிற்சியளித்தல், அட்டைகளைப் பதனிடுவதற்கேற்ற சூரிய வெளிச்சமுள்ள கட்டிடமொன்றை நிறுவுதல் என அனைத்துப் பணிகளும் துரிதமாக நிறைவேற்றப்பட்டன. இந்த வருடம், 2025 இல், இப்பண்ணையில் மூன்றாவது அறுவடை நடைபெறுகிறது. இப்போது பல பண்ணைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டு விட்டன. கடற்கரை எங்கும் திட்டு திட்டாக இப்போது அட்டைப் பண்ணைகளால் நிரம்பியிருக்கிறது. சிலவேளைகளில் இவை மித மிச்சமாகவோ இல்லாமலோ இருக்கலாம். அதைத் தீர்மானிக்கும் தகுதி எனக்கில்லை.

கோவிட் தொற்றுக் காலத்திலும் இப்பண்ணை தொடர்ச்சியாக இயங்கியது. உற்பத்திகளையும் பணியாளர்களையும் இடத்துக்கிடம் நகர்த்துவதற்கான அனுமதியும் பெறப்பட்டது. கோவிட் தொற்றுக் காலத்தில் இப்பண்ணை 35 பேருக்கு வாழ்வாதாரத்தை அளித்தது. யாழ்ப்பாணத்திற்கும், வட மாகாணத்திற்கும் ஏன் முழு இலங்கைக்குமே இத்துறை வருமானமீட்டிக் கொடுக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை. இக்கடலட்டைகளைப் பதனிட்டு ஏற்றுமதிப் பண்டமாக்கும் தொழில் பெரும்பாலும் வடக்கிற்கு வெளியே நடைபெறுவதால் இத்தொழில் சார்ந்த உபதொழில்களுக்கான சந்தர்ப்பத்தை வடக்கு இழக்கிறது என்பது உண்மை. உலரவைக்கப்பட்ட கடலட்டைகளின் பெறுமதி பசுமையான அட்டைகளைவிடப் பன்மடங்கு அதிகம்.

செலவு

அனுமதிப் பத்திரம் கிடைத்ததிலிருந்து 20 ஏக்கர் கடல் நிலத்தில் ஒரு பண்ணையை, ஆரம்பம் முதல் இயங்குநிலைவரை கொண்டுவருவதற்கு சுமார் ரூ.20 மில்லியன் (2024 ஆண்டு விலை) செலவாகிறது என்கிறார் ஞானேந்திரன். கடந்த சில வருடங்களில் யாழ் குடாநாட்டின் கரையோரப் பகுதிகளில் ஏகப்பட்ட அட்டைப்பண்ணைகள் முளைத்திருக்கின்றன. ஆனால் இவற்றில் வெகு சிலவே இவ்வட்டைகளைப் பதனிடும் வேலைகளைச் செய்கின்றன. பெரும்பாலானவை தமது அட்டைகளைப் பதனிடாமலேயே மிகவும் குறைந்த விலைக்கு வெளியாருக்கு விற்றுவிடுகின்றனர். ஞானேந்திரன் தனது சொந்தமான பதனிடும் தொழிற்சாலையை நிர்மாணித்து வருடமொன்றுக்கு 800 கி.கி. உலரட்டைகளைத் தயாரிக்கிறார். இதைத் தயாரிக்க சுமார் 25,000 கி.கி. பசும் அட்டைகள் தேவையாகவிருக்கின்றது.


கடலட்டை விலைகள் எப்போதும் நிலையாக இருப்பதில்லை. நாணய மாற்று வீதம் மற்றும் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான (சீனாவே பிரதான நுகர்வோராகவும் விநியோகிஸ்தராகவும் இருக்கிறது) பாதைகள் ஆகியவற்றைப் பொறுத்து விலையின் ஏற்ற இறக்கம் தீர்மானமாகிறது. ஏற்றுமதிக்கான அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதில் ஊழல் கோலோச்சுகிறது. இதர பல தொழில் துறைகளைப் போலவே இத்துறையின் நன்மைகளையோ அல்லது சமூகத்தின், நாட்டின் நன்மைகளையோ விட சுய இலாபம் தேடும் மாஃபியாக்களினதும் ஊழல் பெருச்சாளிகளினதும் நன்மைகளே முதன்மைப்படுத்தப்படுகின்றன. ஏற்றுமதிக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுவதை இம் மாஃபியாக்கள் தடுத்து நிறுத்துவதன் மூலம் அனைத்து பண்ணைக்காரரும் உற்பத்திகளைத் தமக்கே விற்கவேண்டுமென நிர்ப்பந்திக்கிறார்கள். இதன் மூலம் கடலட்டை ஏற்றுமதி வாணிபம் முழுவதையும் தமது கட்டுப்பாட்டிற்குள் இம் மாஃபியாக்கள் வைத்திருக்கின்றன. இதற்குள் சீன நிறுவனங்களும் தமது குறுக்கு வழிகளைப் பிரயோகித்து விலை நிர்ணயத்தை தீர்மானிக்கின்றன. நேரடியாகச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யாமல் ஹொங் கொங்கினூடாகப் பண்டங்களைக் கடத்துவதால் சீன அரசின் கெடுபிடிகளுக்குள்ளாகி இதனால் அட்டையின் விலை குறைக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்து அட்டையின் உயர் தரம்

கடலட்டைகளில் யாழ்ப்பாணத்தின் உற்பத்திகளுக்கு மவுசு அதிகமாகவிருக்கிறது. இங்குள்ள மாசற்ற கடல் நீரும் அதன் போஷாக்கு வளங்களும் இவ்வட்டைகளின் தரத்தைப் பேணுகின்றன. செயற்கை உணவுகளின்றி வளர்க்கப்படும் இவ்வட்டைகள் முற்றிலும் இயற்கையானவை. இதனால் உற்பத்திச் செலவுகளும் குறைவாகவிருக்கிறது. 90% மான உற்பத்திச் செலவு கோபுரமமைத்தல், காவலர் சம்பளம், மின்சார வெளிச்சம் போன்ற பாதுகாப்பு செலவுகளுக்கே போகிறது என்கிறார் ஞானேந்திரன்.

பெரும்பாலான திருடர்கள் யாரென்பது தெரிந்த விடயம் தான். இவர்களில் சிலர் போதை வஸ்து பாவனையாளர். போதை இவர்களுக்கு அதிக நீச்சல் பலத்தைக் கொடுக்கிறது. திருடப்பட்ட கடலட்டைகளை இவர்கள் அரை விலைக்கு விற்கிறார்கள். இவற்றை வாங்குபவர்கள் மேலும் சந்தை விலைகளைச் சரியவைத்துவிடுகிறார்கள். திருடர்களைப் பிடித்து பொலிஸில் கையளித்தால் இவர்களது குற்றம் வன்முறை சாராமையால் அவர்கள் மீது தம்மால் நடவடிக்கை எடுக்கமுடியாது எனப் பொலிசார் கைகளை விரித்து விடுகிறார்கள். பிணையில் விடுவிக்கப்பட்ட திருடர்கள் மீண்டும் திருட்டில் ஈடுபடுகிறார்கள். காவற் கோபுரத்திற்கு மின்சார வழங்கிகளை தருபவர்களுக்கும், டீசல் போன்ற எரிபொருள் வழங்குபவர்களுக்குமே இலாபம் அதிகரிக்கிறது.


சந்தர்ப்பம்

கடலுணவு மற்றும் கடலட்டை உற்பத்திக்கு வடக்கில் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இலாப நோக்கைக் கொண்ட முதலீட்டாளர்களுக்கும், வியாபார முகவர்களுக்கும், தரமான உற்பத்திகளைக் கொள்முதல் செய்ய விரும்புபவர்களுக்கும் வடக்கு அரிய வாய்ப்புகளை அளிக்கிறது. இத்தொழில் பற்றிய பூரண அறிவை வளர்த்துக்கொண்ட முகவர்களும் அவர்களது திறமைகளில் நம்பிக்கை வைக்கக்கூடிய முதலீட்டாளர்களும் இணையும்போது தான் இத்தொழிலுக்கான உண்மையான வெகுமதி கிடைக்கும். இத்தரமான யாழ்ப்பாண உணவை உலகின் தரமான உணவகங்களில் பரிமாறுவதற்கு ஏதுவாக இருக்கும் உணவகங்களுக்கும், அங்காடிகளுக்கும்கூட இது ஒரு வகையில் வெகுமதியாகவே அமையும்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆய்வின்படி இலங்கையின் 40% மான கடற்கரை வடமாகாணத்தில்தான் இருக்கிறது. மீன்பிடி, சுற்றுலா, விளையாட்டு எனப் பல சந்தர்ப்பங்களை வழங்கக் காத்திருக்கும் பாவிக்கப்படாத வளங்கள் இங்குதான் இருக்கின்றன. இலங்கையின் மிக வறுமையான மாகாணங்களில் ஒன்றான வடக்கில் தான் இவ்வாய்ப்பு இருக்கிறது என்பது அதிசயமானதே.

ஞானேந்திரனுடனான தொடர்புகளுக்கு:
Mobile and WhatsApp: +94 77 293 7949
Email:
Victoria.aquapvt@gmail.com

ஞானேந்திரனின் நிறுவனங்கள்:
Sea food:  Victoria International (Pvt) Ltd
Sea cucumber: Victoria International Aqua Pvt Ltd

இக்கட்டுரை March 27, 2025 இல் வெளியான லங்கா பிஸினெஸ் ஒன்லைன் பத்திரிகையில் ஆங்கிலத்தில் வெளியானது. தமிழாக்கம் த.சிவதாசன்

|
No image previewகடலட்டை ஏற்றுமதி: யாழ்ப்பாணத்தின் வசப்படுத்தப்படாத வாய்ப்...
வளரும் வடக்கு ஜெகன் அருளையா திரு.ஞானேந்திரன் யாழ்ப்பாணத்தின் மானிப்பாய்க்கு அருகேயுள்ள நவாலியைச் சேர்ந்தவர். ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் 1975 இல் பிறந்த அவர் மூன்றாம் வகுப்பு முதல் க.பொ.த. உயர்தரம்...
Checked
Fri, 04/11/2025 - 09:46
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr